தமிழ் சத்தியவேதம்
தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
பழைய ஏற்பாடு
புதிய ஏற்பாடு
Search
English Bible
Hebrew Bible
Greek Bible
Malayalam Bible
Hindi Bible
Telugu Bible
Kannada Bible
Bengali Bible
Marathi Bible
Gujarati Bible
Punjabi Bible
Oriya Bible
Urdu Bible
மேலும்
புஸ்தகங்கள் 6:32
Notes
No Verse Added
History
1 நாளாகமம் 10:7 (11 50 am)
யோவான் 6:32 (11 50 am)
வலைதளம் பற்றி
தொடர்புக்கு
யோவான் 6:32
1
இவைகளுக்குப்பின்பு
இயேசு
திபேரியாக்கடல்
என்னப்பட்ட
கலிலேயாக்
கடலின்
அக்கரைக்குப்
போனார்.
2
அவர்
வியாதிக்காரரிடத்தில்
செய்த
அற்புதங்களைத்
திரளான
ஜனங்கள்
கண்டபடியால்
அவருக்குப்
பின்சென்றார்கள்.
3
இயேசு
மலையின்மேல்
ஏறி,
அங்கே
தம்முடைய
சீஷருடனேகூட
உட்கார்ந்தார்.
4
அப்பொழுது
யூதருடைய
பண்டிகையாகிய
பஸ்கா
சமீபமாயிருந்தது.
5
இயேசு
தம்முடைய
கண்களை
ஏறெடுத்து,
திரளான
ஜனங்கள்
தம்மிடத்தில்
வருகிறதைக்
கண்டு,
பிலிப்புவை
நோக்கி:
இவர்கள்
சாப்பிடத்தக்கதாக
அப்பங்களை
எங்கே
கொள்ளலாம்
என்று
கேட்டார்.
6
தாம்
செய்யப்போகிறதை
அறிந்திருந்தும்,
அவனைச்
சோதிக்கும்படி
இப்படிக்
கேட்டார்.
7
பிலிப்பு
அவருக்குப்
பிரதியுத்தரமாக:
இவர்களில்
ஒவ்வொருவன்
கொஞ்சங்கொஞ்சம்
எடுத்துக்கொண்டாலும்,
இருநூறு
பணத்து
அப்பங்களும்
இவர்களுக்குப்
போதாதே
என்றான்.
8
அப்பொழுது
அவருடைய
சீஷரிலொருவனும்,
சீமோன்
பேதுருவின்
சகோதரனுமாகிய
அந்திரேயா
அவரை
நோக்கி:
9
இங்கே
ஒரு
பையன்
இருக்கிறான்,
அவன்
கையில்
ஐந்து
வாற்கோதுமை
அப்பங்களும்
இரண்டு
மீன்களும்
உண்டு,
ஆனாலும்
அவைகள்
இத்தனை
ஜனங்களுக்கு
எம்மாத்திரம்
என்றான்.
10
இயேசு:
ஜனங்களை
உட்காரவையுங்கள்
என்றார்.
அந்த
இடம்
மிகுந்த
புல்லுள்ளதாயிருந்தது.
பந்தியிருந்த
புருஷர்கள்
ஏறக்குறைய
ஐயாயிரம்பேராயிருந்தார்கள்.
11
இயேசு
அந்த
அப்பங்களை
எடுத்து,
ஸ்தோத்திரம்பண்ணி,
சீஷர்களிடத்தில்
கொடுத்தார்;
சீஷர்கள்
பந்தியிருந்தவர்களுக்குக்
கொடுத்தார்கள்;
அப்படியே
மீன்களையும்
அவர்
எடுத்து
அவர்களுக்கு
வேண்டியமட்டும்
கொடுத்தார்.
12
அவர்கள்
திருப்தியடைந்தபின்பு,
அவர்
தம்முடைய
சீஷர்களை
நோக்கி:
ஒன்றும்
சேதமாய்ப்
போகாதபடிக்கு
மீதியான
துணிக்கைகளைச்
சேர்த்துவையுங்கள்
என்றார்.
13
அந்தப்படியே
அவர்கள்
சேர்த்து,
வாற்கோதுமை
அப்பங்கள்
ஐந்தில்
அவர்கள்
சாப்பிட்டு
மீதியான
துணிக்கைகளினாலே
பன்னிரண்டு
கூடைகளை
நிரப்பினார்கள்.
14
இயேசு
செய்த
அற்புதத்தை
அந்த
மனுஷர்
கண்டு:
மெய்யாகவே
இவர்
உலகத்தில்
வருகிறவரான
தீர்க்கதரிசி
என்றார்கள்.
15
ஆதலால்
அவர்கள்
வந்து,
தம்மை
ராஜாவாக்கும்படிப்
பிடித்துக்கொண்டுபோக
மனதாயிருக்கிறார்களென்று
இயேசு
அறிந்து,
மறுபடியும்
விலகி,
தனியே
மலையின்மேல்
ஏறினார்.
16
சாயங்காலமானபோது
அவருடைய
சீஷர்கள்
கடற்கரைக்குப்
போய்,
17
படவில்
ஏறி,
கடலின்
அக்கரையிலுள்ள
கப்பர்நகூமுக்கு
நேராய்ப்
போனார்கள்;
அப்பொழுது
இருட்டாயிருந்தது,
இயேசுவும்
அவர்களிடத்தில்
வராதிருந்தார்.
18
பெருங்காற்று
அடித்தபடியினாலே
கடல்
கொந்தளித்தது.
19
அவர்கள்
ஏறக்குறைய
மூன்று
நாலு
மைல்தூரம்
தண்டுவலித்துப்
போனபொழுது,
இயேசு
கடலின்மேல்
நடந்து,
படவுக்குச்
சமீபமாய்
வருகிறதைக்
கண்டு
பயந்தார்கள்.
20
அவர்களை
அவர்
நோக்கி:
நான்தான்,
பயப்படாதிருங்கள்
என்றார்.
21
அப்பொழுது
அவரைப்
படவில்
ஏற்றிக்கொள்ள
மனதாயிருந்தார்கள்;
உடனே
படவு
அவர்கள்
போகிற
கரையைப்
பிடித்தது.
22
மறுநாளில்
கடலின்
அக்கரையிலே
நின்ற
ஜனங்கள்
அவருடைய
சீஷர்
ஏறின
அந்த
ஒரே
படவுதவிர
அங்கே
வேறொரு
படவும்
இருந்ததில்லையென்றும்,
இயேசு
தம்முடைய
சீஷருடனேகூடப்
படவில்
ஏறாமல்
அவருடைய
சீஷர்மாத்திரம்
போனார்களென்றும்
அறிந்தார்கள்.
23
கர்த்தர்
ஸ்தோத்திரஞ்
செய்தபின்பு
அவர்கள்
அப்பம்
சாப்பிட்ட
இடத்துக்குச்
சமீபமாய்த்
திபேரியாவிலிருந்து
வேறே
படவுகள்
வந்தது.
24
அப்பொழுது
இயேசுவும்
அவருடைய
சீஷரும்
அங்கே
இல்லாததை
ஜனங்கள்
கண்டு,
உடனே
அந்தப்
படவுகளில்
ஏறி,
இயேசுவைத்
தேடிக்கொண்டு,
கப்பர்நகூமுக்கு
வந்தார்கள்.
25
கடலின்
அக்கரையிலே
அவர்கள்
அவரைக்
கண்டபோது:
ரபீ,
நீர்
எப்பொழுது
இவ்விடம்
வந்தீர்
என்று
கேட்டார்கள்.
26
இயேசு
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
நீங்கள்
அற்புதங்களைக்
கண்டதினால்
அல்ல,
நீங்கள்
அப்பம்
புசித்துத்
திருப்தியானதினாலேயே
என்னைத்
தேடுகிறீர்கள்
என்று
மெய்யாகவே
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
27
அழிந்துபோகிற
போஜனத்திற்காக
அல்ல,
நித்தியஜீவன்வரைக்கும்
நிலைநிற்கிற
போஜனத்திற்காகவே
கிரியை
நடப்பியுங்கள்;
அதை
மனுஷகுமாரன்
உங்களுக்குக்
கொடுப்பார்;
அவரைப்
பிதாவாகிய
தேவன்
முத்திரித்திருக்கிறார்
என்றார்.
28
அப்பொழுது
அவர்கள்
அவரை
நோக்கி:
தேவனுக்கேற்ற
கிரியைகளை
நடப்பிக்கும்படி
நாங்கள்
என்னசெய்யவேண்டும்
என்றார்கள்.
29
இயேசு
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
அவர்
அனுப்பினவரை
நீங்கள்
விசுவாசிப்பதே
தேவனுக்கேற்ற
கிரியையாயிருக்கிறது
என்றார்.
30
அதற்கு
அவர்கள்:
அப்படியானால்
உம்மை
விசுவாசிக்கும்படிக்கு
நாங்கள்
காணத்தக்கதாக
நீர்
என்ன
அடையாளத்தைக்
காண்பிக்கிறீர்?
என்னத்தை
நடப்பிக்கிறீர்?
31
வானத்திலிருந்து
அவர்களுக்கு
அப்பத்தைப்
புசிக்கக்கொடுத்தார்
என்று
எழுதியிருக்கிறபடி,
நம்முடைய
பிதாக்கள்
வனாந்தரத்தில்
மன்னாவைப்
புசித்தார்களே
என்றார்கள்.
32
இயேசு
அவர்களை
நோக்கி:
வானத்திலிருந்து
வந்த
அப்பத்தை
மோசே
உங்களுக்குக்
கொடுக்கவில்லை;
என்
பிதாவோ
வானத்திலிருந்து
வந்த
மெய்யான
அப்பத்தை
உங்களுக்குக்
கொடுக்கிறார்
என்று,
மெய்யாகவே
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
33
வானத்திலிருந்திறங்கி.
உலகத்துக்கு
ஜீவனைக்
கொடுக்கிற
அப்பமே
தேவன்
அருளிய
அப்பம்
என்றார்.
34
அப்பொழுது
அவர்கள்
அவரை
நோக்கி:
ஆண்டவரே,
இந்த
அப்பத்தை
எப்பொழுதும்
எங்களுக்குத்
தரவேண்டும்
என்றார்கள்.
35
இயேசு
அவர்களை
நோக்கி:
ஜீவ
அப்பம்
நானே,
என்னிடத்தில்
வருகிறவன்
ஒருக்காலும்
பசியடையான்,
என்னிடத்தில்
விசுவாசமாயிருக்கிறவன்
ஒருக்காலும்
தாகமடையான்.
36
நீங்கள்
என்னைக்
கண்டிருந்தும்
விசுவாசியாமலிருக்கிறீர்கள்
என்று
உங்களுக்குச்
சொன்னேன்.
37
பிதாவானவர்
எனக்குக்
கொடுக்கிறயாவும்
என்னிடத்தில்
வரும்;
என்னிடத்தில்
வருகிறவனை
நான்
புறம்பே
தள்ளுவதில்லை.
38
என்
சித்தத்தின்படியல்ல,
என்னை
அனுப்பினவருடைய
சித்தத்தின்படி
செய்யவே
நான்
வானத்திலிருந்திறங்கி
வந்தேன்.
39
அவர்
எனக்குத்
தந்தவைகளில்
ஒன்றையும்
நான்
இழந்துபோகாமல்,
கடைசி
நாளில்
அவைகளை
எழுப்புவதே
என்னை
அனுப்பின
பிதாவின்
சித்தமாயிருக்கிறது.
40
குமாரனைக்
கண்டு,
அவரிடத்தில்
விசுவாசமாயிருக்கிறவன்
எவனோ,
அவன்
நித்தியஜீவனை
அடைவதும்,
நான்
அவனைக்
கடைசிநாளில்
எழுப்புவதும்,
என்னை
அனுப்பினவருடைய
சித்தமாயிருக்கிறது
என்றார்.
41
நான்
வானத்திலிருந்து
வந்த
அப்பம்
என்று
அவர்
சொன்னதினிமித்தம்
யூதர்கள்
அவரைக்குறித்து
முறுமுறுத்து:
42
இவன்
யோசேப்பின்
குமாரனாகிய
இயேசு
அல்லவா,
இவனுடைய
தகப்பனையும்
தாயையும்
அறிந்திருக்கிறோமே;
அப்படியிருக்க,
நான்
வானத்திலிருந்திறங்கி
வந்தேன்
என்று
இவன்
எப்படிச்
சொல்லுகிறான்
என்றார்கள்.
43
இயேசு
அவர்களுக்குப்
பிரதியுத்தரமாக:
உங்களுக்குள்ளே
முறுமுறுக்கவேண்டாம்.
44
என்னை
அனுப்பின
பிதா
ஒருவனை
இழுத்துக்கொள்ளாவிட்டால்
அவன்
என்னிடத்தில்
வரமாட்டான்;
கடைசிநாளில்
நான்
அவனை
எழுப்புவேன்.
45
எல்லாரும்
தேவனாலே
போதிக்கப்பட்டிருப்பார்கள்
என்று
தீர்க்கதரிசிகளின்
ஆகமத்தில்
எழுதியிருக்கிறதே;
ஆகையால்
பிதாவினிடத்தில்
கேட்டுக்
கற்றுக்கொள்ளுகிறவன்
எவனும்
என்னிடத்தில்
வருகிறான்.
46
தேவனிடத்தினின்று
வந்தவரே
தவிர
வேறொருவரும்
பிதாவைக்
கண்டதில்லை,
இவரே
பிதாவைக்
கண்டவர்.
47
என்னிடத்தில்
விசுவாசமாயிருக்கிறவனுக்கு
நித்தியஜீவன்
உண்டென்று
மெய்யாகவே
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
48
ஜீவ
அப்பம்
நானே.
49
உங்கள்
பிதாக்கள்
வனாந்தரத்திலே
மன்னாவைப்
புசித்திருந்தும்
மரித்தார்கள்.
50
இதிலே
புசிக்கிறவன்
மரியாமலிருக்கும்படி
வானத்திலிருந்திறங்கின
அப்பம்
இதுவே.
51
நானே
வானத்திலிருந்திறங்கின
ஜீவஅப்பம்;
இந்த
அப்பத்தைப்
புசிக்கிறவன்
என்றென்றைக்கும்
பிழைப்பான்;
நான்
கொடுக்கும்
அப்பம்
உலகத்தின்
ஜீவனுக்காக
நான்
கொடுக்கும்
என்
மாம்சமே
என்றார்.
52
அப்பொழுது
யூதர்கள்:
இவன்
தன்னுடைய
மாம்சத்தை
எப்படி
நமக்குப்
புசிக்கக்
கொடுப்பான்
என்று
தங்களுக்குள்ளே
வாக்குவாதம்பண்ணினார்கள்.
53
அதற்கு
இயேசு
அவர்களை
நோக்கி:
நீங்கள்
மனுஷகுமாரனுடைய
மாம்சத்தைப்
புசியாமலும்,
அவருடைய
இரத்தத்தைப்
பானம்பண்ணாமலும்
இருந்தால்
உங்களுக்குள்ளே
ஜீவனில்லை
என்று
மெய்யாகவே
மெய்யாகவே
உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
54
என்
மாம்சத்தைப்
புசித்து,
என்
இரத்தத்தைப்
பானம்பண்ணுகிறவனுக்கு
நித்தியஜீவன்
உண்டு;
நான்
அவனைக்
கடைசிநாளில்
எழுப்புவேன்.
55
என்
மாம்சம்
மெய்யான
போஜனமாயிருக்கிறது,
என்
இரத்தம்
மெய்யான
பானமாயிருக்கிறது.
56
என்
மாம்சத்தைப்
புசித்து,
என்
இரத்தத்தைப்
பானம்பண்ணுகிறவன்
என்னிலே
நிலைத்திருக்கிறான்,
நானும்
அவனிலே
நிலைத்திருக்கிறேன்.
57
ஜீவனுள்ள
பிதா
என்னை
அனுப்பினதுபோலவும்,
நான்
பிதாவினால்
பிழைத்திருக்கிறதுபோலவும்,
என்னைப்
புசிக்கிறவனும்
என்னாலே
பிழைப்பான்.
58
வானத்திலிருந்திறங்கின
அப்பம்
இதுவே;
இது
உங்கள்
பிதாக்கள்
புசித்த
மன்னாவைப்போலல்ல,
அவர்கள்
மரித்தார்களே;
இந்த
அப்பத்தைப்
புசிக்கிறவனோ
என்றென்றைக்கும்
பிழைப்பான்
என்றார்.
59
கப்பர்நகூமிலுள்ள
ஜெப
ஆலயத்திலே
அவர்
உபதேசிக்கையில்
இவைகளைச்
சொன்னார்.
60
அவருடைய
சீஷரில்
அநேகர்
இவைகளைக்
கேட்டபொழுது,
இது
கடினமான
உபதேசம்,
யார்
இதைக்
கேட்பார்கள்
என்றார்கள்.
61
சீஷர்கள்
அதைக்குறித்து
முறுமுறுக்கிறார்களென்று
இயேசு
தமக்குள்ளே
அறிந்து,
அவர்களை
நோக்கி:
இது
உங்களுக்கு
இடறலாயிருக்கிறதோ?
62
மனுஷகுமாரன்
தாம்
முன்னிருந்த
இடத்திற்கு
ஏறிப்போகிறதை
நீங்கள்
காண்பீர்களானால்
எப்படியிருக்கும்?
63
ஆவியே
உயிர்ப்பிக்கிறது,
மாம்சமானது
ஒன்றுக்கும்
உதவாது;
நான்
உங்களுக்குச்
சொல்லுகிற
வசனங்கள்
ஆவியாயும்
ஜீவனாயும்
இருக்கிறது.
64
ஆகிலும்
உங்களில்
விசுவாசியாதவர்கள்
சிலர்
உண்டு
என்றார்;
விசுவாசியாதவர்கள்
இன்னாரென்றும்,
தம்மைக்
காட்டிக்கொடுப்பவன்
இன்னானென்றும்
ஆதிமுதலாக
இயேசு
அறிந்திருந்தபடியால்,
அவர்
பின்னும்:
65
ஒருவன்
என்
பிதாவின்
அருளைப்
பெறாவிட்டால்
என்னிடத்திற்கு
வரமாட்டான்
என்று
இதினிமித்தமே
உங்களுக்குச்
சொன்னேன்
என்றார்.
66
அதுமுதல்
அவருடைய
சீஷரில்
அநேகர்
அவருடனேகூட
நடவாமல்
பின்வாங்கிப்போனார்கள்.
67
அப்பொழுது
இயேசு
பன்னிருவரையும்
நோக்கி:
நீங்களும்
போய்விட
மனதாயிருக்கிறீர்களோ
என்றார்.
68
சீமோன்
பேதுரு
அவருக்குப்
பிரதியுத்தரமாக:
ஆண்டவரே,
யாரிடத்தில்
போவோம்,
நித்தியஜீவ
வசனங்கள்
உம்மிடத்தில்
உண்டே.
69
நீர்
ஜீவனுள்ள
தேவனுடைய
குமாரனாகிய
கிறிஸ்து
என்று
நாங்கள்
விசுவாசித்தும்
அறிந்தும்
இருக்கிறோம்
என்றான்.
70
இயேசு
அவர்களை
நோக்கி:
பன்னிருவராகிய
உங்களை
நான்
தெரிந்துகொள்ளவில்லையா
உங்களுக்குள்ளும்
ஒருவன்
பிசாசாயிருக்கிறான்
என்றார்.
71
சீமோனின்
குமாரனாகிய
யூதாஸ்காரியோத்து
பன்னிருவரிலொருவனாயிருந்தும்,
தம்மைக்
காட்டிக்கொடுக்கப்போகிறவனாயிருந்தபடியினால்
அவனைக்
குறித்து
இப்படிச்
சொன்னார்.
Common Bible Languages
English Bible
Hebrew Bible
Greek Bible
South Indian Languages
Tamil Bible
Malayalam Bible
Telugu Bible
Kannada Bible
West Indian Languages
Hindi Bible
Gujarati Bible
Punjabi Bible
Other Indian Languages
Urdu Bible
Bengali Bible
Oriya Bible
Marathi Bible
×
Alert
×
tamil Letters Keypad References