தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
எரேமியா

எரேமியா அதிகாரம் 21

1 செதேசியாஸ் மன்னன் மெல்கியாசின் மகனான பாசூரையும், மகாசியாசின் மகனான சொப்போனியாஸ் என்கிற அர்ச்சகரையும் எரெமியாசிடம் தூதனுப்பிய போது, ஆண்டவரிடமிருந்து அவருக்கு அருளப்பட்ட வாக்கு இதுவே: 2 அத்தூதுவர் வந்து அவரிடம், "நபுக்கோதனசார் அரசன் நமக்கு எதிராகப் படையெடுத்து வந்துள்ளான்; ஆண்டவர் ஒருகால் தம் வியத்தகு செயல்களுக்கேற்றவாறு நமக்கு உதவி செய்து, அவன் நம்மிடமிருந்து பின்வாங்கிப் போகச் செய்வார்; இதுபற்றி ஆண்டவரைக் கேட்டுச் சொல்" என்று சொன்னார்கள். 3 அப்போது எரெமியாஸ் அவர்களுக்குக் கூறிய மறுமொழி: 4 நீங்கள் போய்ச் செதேசியாஸ் மன்னனுக்குப் பின்வருமாறு சொல்லுங்கள்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: மதில்களைச் சூழ்ந்து முற்றுகையிட்டு உங்களை வளைத்து நிற்கும் பபிலோனிய அரசனோடும், கல்தேயரோடும் நீங்கள் போராடுவதற்குப் பயன்படுத்தும் போர்க் கருவிகளை உங்களுக்கு விரோதமாகவே திருப்புவோம்; அவற்றை இந்நகரத்துக்குள் வரச் செய்வோம். 5 நமது கரத்தை நீட்டி, நம் வல்லமையைக் காட்டிச் சினத்தோடும் ஆத்திரத்தோடும் பெருங் கோபத்தோடும் நாமே உங்களுக்கு விரோதமாய்ப் போராடுவோம்; 6 இப்பட்டணத்தின் குடிகளை நையப் புடைப்போம்; மனிதர்களும் மிருகங்களும் கொள்ளை நோயால் மடிவார்கள்; 7 அதன் பின், யூதாவின் அரசனான செதேசியாசையும், அவனுடைய ஊழியரையும், மக்களையும், இன்னும் இப்பட்டணத்தில் கொள்ளை நோய், வாள், பஞ்சம் இவற்றுக்குத் தப்பினவர்களையும், பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் கையிலும், அவர்களுடைய பகைவர்களின் கையிலும், அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும் நாம் ஒப்புவிப்போம்; அவன் அவர்களை வாளுக்கு இரையாக்குவான்; அவர்கள் மேல் மனம் இளக மாட்டான்: அவர்களை மன்னிக்கவும் மாட்டான்; அவர்களுக்கு இரக்கம் காட்டவும் மாட்டான், என்கிறார் ஆண்டவர்.' 8 மேலும் அந்த மக்களுக்கு இவ்வாறு அறிவி: 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ உங்களுக்கு முன் இரண்டு வழிகளைக் காட்டுகிறோம்: ஒன்று, வாழ்வின் வழி; மற்றது, சாவின் வழி. 9 இப்பட்டணத்தில் தங்கி விடுபவன் வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்; ஆனால் வெளியேறி உங்களை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டிருக்கும் கல்தேயரிடம் சரணடைபவன் உயிர் வாழ்வான்; அவன் உயிர் அவனுக்குப் போரில் கிடைத்த கொள்ளைப் பொருளாகும். 10 இப்பட்டணத்தின் மீது நன்மையை அல்ல, தீமையையே வரச் செய்யத் தீர்மானிக்கிறோம்; அது பபிலோனிய அரசன் கையில் ஒப்புவிக்கப்படும்; அதனை அவன் நெருப்பினால் சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர்.' 11 "யூதாவின் அரச குடும்பத்திற்கும் சொல்: 'ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்: 12 தாவீதின் வீடே, ஆண்டவர் கூறுகிறார்: காலை நேரத்திலேயே நீதி செலுத்துங்கள், கொள்ளையடிக்கப் பட்டவனை ஒடுக்குபவன் கையினின்று விடுதலை செய்யுங்கள்; இல்லையேல், நமது கோபம் நெருப்புப் போல மூண்டெழும்பும்; உங்கள் தீய செயல்களின் காரணமாய் இது பற்றியெரியும்; அதை அணைக்க யாராலும் இயலாது.' 13 பள்ளத்தாக்கில் இருக்கும் பட்டணமே, சமவெளியில் அமைந்திருக்கும் கற்பாறையே, 'நமக்கெதிராய் வருபவன் யார்? நம் வீடுகளில் நுழைபவன் யார்?' என்கிறாயே, இதோ, நாமே உனக்கு எதிராய் வருகிறோம், என்கிறார் ஆண்டவர்; 14 உங்கள் செயல்களின் பலனுக்கேற்றவாறு உங்களைத் தண்டிப்போம்; யெருசலேமின் காட்டில் நெருப்பை மூட்டுவோம், அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும், என்கிறார் ஆண்டவர்."
1. செதேசியாஸ் மன்னன் மெல்கியாசின் மகனான பாசூரையும், மகாசியாசின் மகனான சொப்போனியாஸ் என்கிற அர்ச்சகரையும் எரெமியாசிடம் தூதனுப்பிய போது, ஆண்டவரிடமிருந்து அவருக்கு அருளப்பட்ட வாக்கு இதுவே: 2. அத்தூதுவர் வந்து அவரிடம், "நபுக்கோதனசார் அரசன் நமக்கு எதிராகப் படையெடுத்து வந்துள்ளான்; ஆண்டவர் ஒருகால் தம் வியத்தகு செயல்களுக்கேற்றவாறு நமக்கு உதவி செய்து, அவன் நம்மிடமிருந்து பின்வாங்கிப் போகச் செய்வார்; இதுபற்றி ஆண்டவரைக் கேட்டுச் சொல்" என்று சொன்னார்கள். 3. அப்போது எரெமியாஸ் அவர்களுக்குக் கூறிய மறுமொழி: 4. நீங்கள் போய்ச் செதேசியாஸ் மன்னனுக்குப் பின்வருமாறு சொல்லுங்கள்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: மதில்களைச் சூழ்ந்து முற்றுகையிட்டு உங்களை வளைத்து நிற்கும் பபிலோனிய அரசனோடும், கல்தேயரோடும் நீங்கள் போராடுவதற்குப் பயன்படுத்தும் போர்க் கருவிகளை உங்களுக்கு விரோதமாகவே திருப்புவோம்; அவற்றை இந்நகரத்துக்குள் வரச் செய்வோம். 5. நமது கரத்தை நீட்டி, நம் வல்லமையைக் காட்டிச் சினத்தோடும் ஆத்திரத்தோடும் பெருங் கோபத்தோடும் நாமே உங்களுக்கு விரோதமாய்ப் போராடுவோம்; 6. இப்பட்டணத்தின் குடிகளை நையப் புடைப்போம்; மனிதர்களும் மிருகங்களும் கொள்ளை நோயால் மடிவார்கள்; 7. அதன் பின், யூதாவின் அரசனான செதேசியாசையும், அவனுடைய ஊழியரையும், மக்களையும், இன்னும் இப்பட்டணத்தில் கொள்ளை நோய், வாள், பஞ்சம் இவற்றுக்குத் தப்பினவர்களையும், பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் கையிலும், அவர்களுடைய பகைவர்களின் கையிலும், அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும் நாம் ஒப்புவிப்போம்; அவன் அவர்களை வாளுக்கு இரையாக்குவான்; அவர்கள் மேல் மனம் இளக மாட்டான்: அவர்களை மன்னிக்கவும் மாட்டான்; அவர்களுக்கு இரக்கம் காட்டவும் மாட்டான், என்கிறார் ஆண்டவர்.' 8. மேலும் அந்த மக்களுக்கு இவ்வாறு அறிவி: 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ உங்களுக்கு முன் இரண்டு வழிகளைக் காட்டுகிறோம்: ஒன்று, வாழ்வின் வழி; மற்றது, சாவின் வழி. 9. இப்பட்டணத்தில் தங்கி விடுபவன் வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்; ஆனால் வெளியேறி உங்களை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டிருக்கும் கல்தேயரிடம் சரணடைபவன் உயிர் வாழ்வான்; அவன் உயிர் அவனுக்குப் போரில் கிடைத்த கொள்ளைப் பொருளாகும். 10. இப்பட்டணத்தின் மீது நன்மையை அல்ல, தீமையையே வரச் செய்யத் தீர்மானிக்கிறோம்; அது பபிலோனிய அரசன் கையில் ஒப்புவிக்கப்படும்; அதனை அவன் நெருப்பினால் சுட்டெரிப்பான், என்கிறார் ஆண்டவர்.' 11. "யூதாவின் அரச குடும்பத்திற்கும் சொல்: 'ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்: 12. தாவீதின் வீடே, ஆண்டவர் கூறுகிறார்: காலை நேரத்திலேயே நீதி செலுத்துங்கள், கொள்ளையடிக்கப் பட்டவனை ஒடுக்குபவன் கையினின்று விடுதலை செய்யுங்கள்; இல்லையேல், நமது கோபம் நெருப்புப் போல மூண்டெழும்பும்; உங்கள் தீய செயல்களின் காரணமாய் இது பற்றியெரியும்; அதை அணைக்க யாராலும் இயலாது.' 13. பள்ளத்தாக்கில் இருக்கும் பட்டணமே, சமவெளியில் அமைந்திருக்கும் கற்பாறையே, 'நமக்கெதிராய் வருபவன் யார்? நம் வீடுகளில் நுழைபவன் யார்?' என்கிறாயே, இதோ, நாமே உனக்கு எதிராய் வருகிறோம், என்கிறார் ஆண்டவர்; 14. உங்கள் செயல்களின் பலனுக்கேற்றவாறு உங்களைத் தண்டிப்போம்; யெருசலேமின் காட்டில் நெருப்பை மூட்டுவோம், அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும், என்கிறார் ஆண்டவர்."
  • எரேமியா அதிகாரம் 1  
  • எரேமியா அதிகாரம் 2  
  • எரேமியா அதிகாரம் 3  
  • எரேமியா அதிகாரம் 4  
  • எரேமியா அதிகாரம் 5  
  • எரேமியா அதிகாரம் 6  
  • எரேமியா அதிகாரம் 7  
  • எரேமியா அதிகாரம் 8  
  • எரேமியா அதிகாரம் 9  
  • எரேமியா அதிகாரம் 10  
  • எரேமியா அதிகாரம் 11  
  • எரேமியா அதிகாரம் 12  
  • எரேமியா அதிகாரம் 13  
  • எரேமியா அதிகாரம் 14  
  • எரேமியா அதிகாரம் 15  
  • எரேமியா அதிகாரம் 16  
  • எரேமியா அதிகாரம் 17  
  • எரேமியா அதிகாரம் 18  
  • எரேமியா அதிகாரம் 19  
  • எரேமியா அதிகாரம் 20  
  • எரேமியா அதிகாரம் 21  
  • எரேமியா அதிகாரம் 22  
  • எரேமியா அதிகாரம் 23  
  • எரேமியா அதிகாரம் 24  
  • எரேமியா அதிகாரம் 25  
  • எரேமியா அதிகாரம் 26  
  • எரேமியா அதிகாரம் 27  
  • எரேமியா அதிகாரம் 28  
  • எரேமியா அதிகாரம் 29  
  • எரேமியா அதிகாரம் 30  
  • எரேமியா அதிகாரம் 31  
  • எரேமியா அதிகாரம் 32  
  • எரேமியா அதிகாரம் 33  
  • எரேமியா அதிகாரம் 34  
  • எரேமியா அதிகாரம் 35  
  • எரேமியா அதிகாரம் 36  
  • எரேமியா அதிகாரம் 37  
  • எரேமியா அதிகாரம் 38  
  • எரேமியா அதிகாரம் 39  
  • எரேமியா அதிகாரம் 40  
  • எரேமியா அதிகாரம் 41  
  • எரேமியா அதிகாரம் 42  
  • எரேமியா அதிகாரம் 43  
  • எரேமியா அதிகாரம் 44  
  • எரேமியா அதிகாரம் 45  
  • எரேமியா அதிகாரம் 46  
  • எரேமியா அதிகாரம் 47  
  • எரேமியா அதிகாரம் 48  
  • எரேமியா அதிகாரம் 49  
  • எரேமியா அதிகாரம் 50  
  • எரேமியா அதிகாரம் 51  
  • எரேமியா அதிகாரம் 52  
×

Alert

×

Tamil Letters Keypad References