தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
மீகா

பதிவுகள்

மீகா அதிகாரம் 3

இஸ்ரயேல் தலைவர்களுக்கு எதிரான மீக்காவின் கண்டனக் குரல் 1 அப்பொழுது நான் கூறியது: “யாக்கோபின் தலைவர்களே! இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ! 2 நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்; என் மக்களின் தோலை உயிரோடே உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்; 3 என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்; அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்; அவர்களின் எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள். 4 அப்பொழுது நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவீர்கள்; ஆனால் உங்களுக்கு அவர் செவிசாய்க்கமாட்டார். அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை உங்களிடம் இருந்து மறைத்துக்கொள்வார்; ஏனெனில், உங்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன.” 5 இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் ‘அமைதி உண்டாகுக!’ என உரக்கச் சொல்கின்றார்கள்; வாய்க்குத் தீனி போடாதவரிடம் ‘புனிதப் போர் வரும்’ எனக் கூறுகின்றார்கள்.” 6 ஆதலால் “இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது; முன்னுரைத்தல் இராது; காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்; இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது; பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்.” 7 காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்; முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது. 8 ஆனால், நான் யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க, வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன். 9 யாக்கோபு குடும்பத்தாரின் தலைவர்களே, இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே, இதைக் கேளுங்கள்; நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்; நேர்மையானவற்றைக் கோணலாக்குகின்றீர்கள். 10 இரத்தப்பழியால் சீயோனையும், அநீதியால் எருசலேமையும் கட்டியெழுப்புகின்றீர்கள். 11 அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்; இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்; ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, ‘ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது’ என்று சொல்லிக்கொள்கின்றார்கள். 12 ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்; எருசலேம் பாழடைந்த மண் மேடாக மாறும்; கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்.” [* எரே 26:18.. ]
1. {இஸ்ரயேல் தலைவர்களுக்கு எதிரான மீக்காவின் கண்டனக் குரல்} அப்பொழுது நான் கூறியது: “யாக்கோபின் தலைவர்களே! இஸ்ரயேலின் குடும்பத்தை ஆள்பவர்களே, நீதியை அறிவிப்பது உங்கள் கடமை அன்றோ! 2. நீங்களோ நன்மையை வெறுத்துத் தீமையை நாடுகின்றீர்கள்; என் மக்களின் தோலை உயிரோடே உரித்து, அவர்கள் எலும்புகளிலிருந்து சதையைக் கிழித்தெடுக்கின்றீர்கள்; 3. என் மக்களின் சதையைத் தின்கின்றீர்கள்; அவர்களின் தோலை உரிக்கின்றீர்கள்; அவர்களின் எலும்புகளை முறித்து, சட்டியில் போடப்படும் இறைச்சி போலவும், கொப்பரையில் கொட்டப்படும் மாமிசம் போலவும் துண்டு துண்டாக்குகின்றீர்கள். 4. அப்பொழுது நீங்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடுவீர்கள்; ஆனால் உங்களுக்கு அவர் செவிசாய்க்கமாட்டார். அந்த நேரத்தில் அவர் தம் முகத்தை உங்களிடம் இருந்து மறைத்துக்கொள்வார்; ஏனெனில், உங்களின் செயல்கள் தீயனவாய் இருக்கின்றன.” 5. இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் ‘அமைதி உண்டாகுக!’ என உரக்கச் சொல்கின்றார்கள்; வாய்க்குத் தீனி போடாதவரிடம் ‘புனிதப் போர் வரும்’ எனக் கூறுகின்றார்கள்.” 6. ஆதலால் “இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது; முன்னுரைத்தல் இராது; காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்; இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது; பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்.” 7. காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்; முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது. 8. ஆனால், நான் யாக்கோபுக்கு அவன் குற்றத்தையும், இஸ்ரயேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க, வல்லமையாலும் ஆண்டவரின் ஆவியாலும், நீதியாலும் ஆற்றலாலும் நிரப்பப்பட்டுள்ளேன். 9. யாக்கோபு குடும்பத்தாரின் தலைவர்களே, இஸ்ரயேல் குடும்பத்தை ஆள்பவர்களே, இதைக் கேளுங்கள்; நீங்கள் நீதியை அருவருக்கிறீர்கள்; நேர்மையானவற்றைக் கோணலாக்குகின்றீர்கள். 10. இரத்தப்பழியால் சீயோனையும், அநீதியால் எருசலேமையும் கட்டியெழுப்புகின்றீர்கள். 11. அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்; இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்; ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, ‘ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது’ என்று சொல்லிக்கொள்கின்றார்கள். 12. ஆதலால், உங்களை முன்னிட்டுச் சீயோன் வயல்வெளியைப்போல் உழப்படும்; எருசலேம் பாழடைந்த மண் மேடாக மாறும்; கோவில் உள்ள மலையோ அடர்ந்த காடாகும்.” [* எரே 26:18.. ]
  • மீகா அதிகாரம் 1  
  • மீகா அதிகாரம் 2  
  • மீகா அதிகாரம் 3  
  • மீகா அதிகாரம் 4  
  • மீகா அதிகாரம் 5  
  • மீகா அதிகாரம் 6  
  • மீகா அதிகாரம் 7  
×

Alert

×

Tamil Letters Keypad References