யோபு

பதிவுகள்

யோபு அதிகாரம் 16

கடவுளின் நீதியும் மனிதனின் அநீதியும் 1 அதற்கு யோபு உரைத்த மறுமொழி; 2 இதைப்போன்ற பலவற்றை நான் கேட்டதுண்டு; “புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம். 3 உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா? வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ? 4 என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்; என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால், உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து, உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும். 5 ஆயினும், என் சொற்களால் உங்களை வலுப்படுத்துவேன்; என் உதட்டின் ஆறுதல் உங்கள் வலியைக் குறைக்குமே! 6 நான் பேசினாலும் என் வலி குறையாது; அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது. 7 உண்மையில், கடவுளே! இப்போது என்னை உளுத்திட வைத்தீர்; என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர். 8 நீர் என்னை இளைக்கச் செய்தீர்; அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று; என் மெலிவு எழுந்து எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது. 9 அவர் என்னை வெறுத்தார்; வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்; என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்; என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான். 10 மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்; ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்; எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர். 11 இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்; 12 நலமுடன் இருந்தேன் நான்; தகர்த்தெறிந்தார் என்னை அவர்; பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்; என்னையே தம் இலக்காக ஆக்கினார். 13 அவர் தம் வில்வீரர் என்னை வளைத்துக் கொண்டனர்; என் ஈரலை அவர் பிளந்து விட்டார்; ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை மண்ணில் சிந்தினார். 14 முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்; போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார். 15 சாக்கு உடையை நான் என் உடலுக்குத் தைத்துக் கொண்டேன்; புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன். 16 அழுதழுது என் முகம் சிவந்தது; என் கண்களும் இருண்டு போயின, 17 இருப்பினும், வன்செயல் என் கையில் இல்லை; மாசு என் மன்றாட்டில் இல்லை. 18 மண்ணே! என் குருதியை மறைக்காதே; என் கூக்குரலைப் புதைக்காதே. 19 இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது; எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார். [* யோபு 19:25.. ] 20 என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே! கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன். 21 ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல், அவர் மனிதர் சார்பாகக் கடவுளிடம் பரிந்து பேசுவார். 22 இன்னும் சில ஆண்டுகளே உள்ளன; பிறகு திரும்ப வரவியலா வழியில் செல்வேன்.
1. {கடவுளின் நீதியும் மனிதனின் அநீதியும்} அதற்கு யோபு உரைத்த மறுமொழி; 2. இதைப்போன்ற பலவற்றை நான் கேட்டதுண்டு; “புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம். 3. உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா? வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ? 4. என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்; என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால், உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து, உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும். 5. ஆயினும், என் சொற்களால் உங்களை வலுப்படுத்துவேன்; என் உதட்டின் ஆறுதல் உங்கள் வலியைக் குறைக்குமே! 6. நான் பேசினாலும் என் வலி குறையாது; அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது. 7. உண்மையில், கடவுளே! இப்போது என்னை உளுத்திட வைத்தீர்; என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர். 8. நீர் என்னை இளைக்கச் செய்தீர்; அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று; என் மெலிவு எழுந்து எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது. 9. அவர் என்னை வெறுத்தார்; வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்; என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்; என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான். 10. மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்; ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்; எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர். 11. இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார். கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்; 12. நலமுடன் இருந்தேன் நான்; தகர்த்தெறிந்தார் என்னை அவர்; பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்; என்னையே தம் இலக்காக ஆக்கினார். 13. அவர் தம் வில்வீரர் என்னை வளைத்துக் கொண்டனர்; என் ஈரலை அவர் பிளந்து விட்டார்; ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை மண்ணில் சிந்தினார். 14. முகத்தில் அடியடியென்று என்னை அடித்தார்; போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார். 15. சாக்கு உடையை நான் என் உடலுக்குத் தைத்துக் கொண்டேன்; புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன். 16. அழுதழுது என் முகம் சிவந்தது; என் கண்களும் இருண்டு போயின, 17. இருப்பினும், வன்செயல் என் கையில் இல்லை; மாசு என் மன்றாட்டில் இல்லை. 18. மண்ணே! என் குருதியை மறைக்காதே; என் கூக்குரலைப் புதைக்காதே. 19. இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது; எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார். [* யோபு 19:25.. ] 20. என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே! கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன். 21. ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல், அவர் மனிதர் சார்பாகக் கடவுளிடம் பரிந்து பேசுவார். 22. இன்னும் சில ஆண்டுகளே உள்ளன; பிறகு திரும்ப வரவியலா வழியில் செல்வேன்.
  • சங்கீதம் அதிகாரம் 1  
  • சங்கீதம் அதிகாரம் 2  
  • சங்கீதம் அதிகாரம் 3  
  • சங்கீதம் அதிகாரம் 4  
  • சங்கீதம் அதிகாரம் 5  
  • சங்கீதம் அதிகாரம் 6  
  • சங்கீதம் அதிகாரம் 7  
  • சங்கீதம் அதிகாரம் 8  
  • சங்கீதம் அதிகாரம் 9  
  • சங்கீதம் அதிகாரம் 10  
  • சங்கீதம் அதிகாரம் 11  
  • சங்கீதம் அதிகாரம் 12  
  • சங்கீதம் அதிகாரம் 13  
  • சங்கீதம் அதிகாரம் 14  
  • சங்கீதம் அதிகாரம் 15  
  • சங்கீதம் அதிகாரம் 16  
  • சங்கீதம் அதிகாரம் 17  
  • சங்கீதம் அதிகாரம் 18  
  • சங்கீதம் அதிகாரம் 19  
  • சங்கீதம் அதிகாரம் 20  
  • சங்கீதம் அதிகாரம் 21  
  • சங்கீதம் அதிகாரம் 22  
  • சங்கீதம் அதிகாரம் 23  
  • சங்கீதம் அதிகாரம் 24  
  • சங்கீதம் அதிகாரம் 25  
  • சங்கீதம் அதிகாரம் 26  
  • சங்கீதம் அதிகாரம் 27  
  • சங்கீதம் அதிகாரம் 28  
  • சங்கீதம் அதிகாரம் 29  
  • சங்கீதம் அதிகாரம் 30  
  • சங்கீதம் அதிகாரம் 31  
  • சங்கீதம் அதிகாரம் 32  
  • சங்கீதம் அதிகாரம் 33  
  • சங்கீதம் அதிகாரம் 34  
  • சங்கீதம் அதிகாரம் 35  
  • சங்கீதம் அதிகாரம் 36  
  • சங்கீதம் அதிகாரம் 37  
  • சங்கீதம் அதிகாரம் 38  
  • சங்கீதம் அதிகாரம் 39  
  • சங்கீதம் அதிகாரம் 40  
  • சங்கீதம் அதிகாரம் 41  
  • சங்கீதம் அதிகாரம் 42  
×

Alert

×

Tamil Letters Keypad References