2. ஏனென்றால், அவர்கள் விரைவில் புல்லைப் போல் உலர்ந்து போவார்கள்: புற்பூண்டுகளைப் போல வாடிப் போவார்கள்.
|
5. உன் வாழ்வின் முடிவை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவர் பேரில் நம்பிக்கை வைத்திரு: அவரே எல்லாம் செய்வார்.
|
7. ஆண்டவரில் மன அமைதிகொள்; அவரில் நம்பிக்கை வை: தான் செய்பவற்றில் வெற்றி பெறுபவனைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே; அநீதி செய்யத் திட்டமிடுகிறவனையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.
|
9. ஏனென்றால், தீமை செய்வோர் நாசமாவார்கள்: ஆனால் ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்வார்கள்.
|
10. இன்னும் சிறிதுகாலம்; தீயவன் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்துபோவான்: அவன் இருந்த இடத்தைத் தேடுவாய்; ஆனால், அவன் அங்கு இருக்கமாட்டான்.
|
11. சாந்தமுள்ளோர் புனித நாட்டை உரிமைப்படுத்திக் கொள்வார்கள்: அவர்கள் மிகுந்த அமைதியில் இன்பம் காண்பர்.
|
14. ஏழை எளியவரை விழத்தாட்டி, நேரிய பாதையில் நடப்பவர்களைத் தொலைக்க, தீயோர் பட்டயத்தை உருவுகின்றனர்: வில்லை நாணேற்றுகிறார்கள்.
|
18. நீதிமான்களுடைய வாழ்நாட்களைக் குறித்து ஆண்டவர் கருத்தாய் இருக்கிறார்: அவர்கள் உரிமைச் சொத்து என்றென்றும் நிற்கும்.
|
20. ஆனால் தீயோர் அழிவுறுவர்; ஆண்டவருடைய எதிரிகள் செழிப்பான புல்வெளி உலர்வது போல் ஒழிந்துபோவர்: புகை போல் மறைந்தொழிவர்.
|
22. ஆண்டவர் யாருக்குத் தம் ஆசியை அருள்கிறாரோ அவர்கள் புனித நாட்டை உரிமையாக்கிக்கொள்வர்: யாரைச் சபிக்கிறாரோ அவர்கள் அழிந்து போவார்.
|
24. அப்போது அவன் கீழே விழுந்தாலும் அப்படியே குப்புறக் கிடக்கமாட்டான்: ஏனெனில் ஆண்டவர் அவனது கையைத் தாங்கிக் கொள்கிறார்.
|
25. இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ முதிர் பருவம் அடைந்துள்ளேன்: நல்லவன் கைவிடப்பட்டதை நான் எந்நாளும் கண்டதில்லை; அவனுடைய மக்கள் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.
|
28. ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகிறார், தம் புனிதர்களை அவர் கைவிடுவதில்லை: நெறிகெட்டவர் அழிவுறுவர், அவர்கள் மக்கள் வேரோடு ஒழிந்து போவர்.
|
33. ஆனால் ஆண்டவர் அவனைத் தீயவனின் கையில் சிக்கவிட மாட்டார்: நியாயத் தீர்ப்பு நிகழும் போது தண்டனைகளாக விட மாட்டார்.
|
34. ஆண்டவர் மீது நம்பிக்கை வை; அவர் காட்டிய வழியில் நட: அப்போது நீ புனித நாட்டை உரிமையாக்கிக் கொள்ளும்படி உன்னை உயர்த்துவார்; தீயோர் அழிவுறுவதைப் பார்த்து மகிழ்வாய்.
|
35. தீயவன் செருக்கித் திரிவதை நான் பார்த்தேன்: செழித்தோங்கும் கேதுரு மரம் போல் சிறந்தோங்குவதைக் கண்டேன்.
|
37. நல்லவனைக் கவனித்துப் பார்; நீதிமானை எண்ணிப் பார்: அமைதியை விரும்புகிறவனுக்கு சந்ததியிராமல் போகாது.
|
40. ஆண்டவர் அவர்களுக்குத் துணை நின்று விடுதலையளிக்கிறார்; தீயோரின் கையினின்று விடுவித்துக் காப்பாற்றுகிறார்: ஏனெனில், அவர்கள் அவரிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.
|