2. நல்லவன் ஆண்டவரிடமிருந்து அருளைப் பெறுவான். தன் சொந்த எண்ணங்களில் ஊன்றியிருக்கிறவனோ அக்கிரமாய் நடக்கிறான்.
|
4. சுறுசுறுப்புள்ள மனைவி தன் கணவனுக்கு ஒரு முடியாம். அவமானத்துக்குரிய காரியங்களைச் செய்கிறவளோ அவனுடைய எலும்புகள் அழுகிப்போகும்படி செய்வாள்.
|
6. அக்கிரமிகளின் வார்த்தைகள் பிறர் இரத்தத்தைச் சிந்துகின்றன. நீதிமான்களுடைய வாக்கியமோ அவர்களை விடுவிக்கும்.
|
11. தன் நிலத்தை உழுபவன் அப்பத்தால் நிறைவு காண்பான். இளைப்பாற்றியைத் தேடுகிறவன் மிகவும் மதி கெட்டவன். மதுபானம் குடிப்பதில் காலம் கழித்து மகிழ்கிறவன் நிந்தையைத் தன் கொத்தளங்களில் மீத்து வைக்கிறான்.
|
13. வாய்ப் பாவங்கள் நிமித்தமே தீயோனுக்கு நாசம் அணுகுகின்றது. நீதிமானோ இக்கட்டினின்று தப்பித்துக்கொள்வான்.
|
14. அவனவன் தன் சொந்த வாக்கின் கனியாகிய நலத்தால் றிரப்பப்படுவான். தன் கைகளின் செய்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குத் திருப்பித் தரப்படும்.
|
17. தான் அறிந்ததைப் பேசுகிறவன் நியாயத்துக்குச் சாட்சியாய் இருக்கின்றான். பொய் சொல்கிறவனோ வஞ்சகத்திற்கு சாட்சியாயிருக்கிறான்.
|
18. வாக்குறுதியை கொடுக்கிறவன் தன் மனசாட்சியால் கத்திபோல் குத்தப்படுகிறான். விவேகிகளின் நாவோ சுகமாய் இருக்கின்றது.
|
19. உண்மையை உரைக்கும் உதடு என்றென்றும் நிலையாய் இருக்கும். படபடத்த சாட்சியோ பொய்க்கு (தன்) நாவை இசைக்கிறான்.
|
20. தீங்கு நினைப்போரின் இதயம் வஞ்சனையானது. ஆனால், சமாதான ஆலோசனைகள் செய்கிறவர்களை மகிழ்ச்சி பின்தொடர்கின்றது.
|
21. நீதிமானுக்கு யாது நேரிட்டாலும் அது அவனைத் துன்புறுத்தாது. அக்கிரமிகளோ தீமையால் நிரப்பப்படுவார்கள்.
|
26. தன் நண்பனைப்பற்றி நட்டத்தைக் கவனியாதவன் நீதிமானாய் இருக்கிறான். தீயவரின் பாதையோ அவர்களையே வஞ்சிக்கும்.
|