தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
நீதிமொழிகள்

நீதிமொழிகள் அதிகாரம் 12

1 போதனையை நேசிக்கிறவன் அறிவை நேசிக்கிறான். கண்டனங்களைப் புறக்கணிக்கிறவனே ஞானமற்றவனும். 2 நல்லவன் ஆண்டவரிடமிருந்து அருளைப் பெறுவான். தன் சொந்த எண்ணங்களில் ஊன்றியிருக்கிறவனோ அக்கிரமாய் நடக்கிறான். 3 அக்கிரமத்தால் மனிதன் திடம் பெற மாட்டான். நீதிமான்களுடைய வேரும் அசைக்கப்படாது. 4 சுறுசுறுப்புள்ள மனைவி தன் கணவனுக்கு ஒரு முடியாம். அவமானத்துக்குரிய காரியங்களைச் செய்கிறவளோ அவனுடைய எலும்புகள் அழுகிப்போகும்படி செய்வாள். 5 நீதிமானின் சிந்தனைகள் நீதியுள்ளன. அக்கிரமிகளின் ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளனவாம். 6 அக்கிரமிகளின் வார்த்தைகள் பிறர் இரத்தத்தைச் சிந்துகின்றன. நீதிமான்களுடைய வாக்கியமோ அவர்களை விடுவிக்கும். 7 அக்கிரமிகளைப் புரட்டி விட்டால் அவர்கள் இரார்கள். நீதிமான்களுடைய வீடோ நிலைபெற்றிருக்கும். 8 மனிதன் தன் போதகத்தால் அறியப்படுவான். வீணனாகவும் மூடனாகவும் இருக்கிறவனோ அவமானத்துக்கு உட்படுவான். 9 தனக்குத் தேவையானவைகளைத் தேடிக் கொள்கிற ஏழை, பெருமைக்காரனான உணவில்லாதவனைவிட மிகவும் நல்லவன். 10 நீதிமான் தன் மிருகங்களுடைய உயிரைக் காப்பாற்றுகிறான். அக்கிரமிகளுடைய குடல்கள் கொடுமையுள்ளன. 11 தன் நிலத்தை உழுபவன் அப்பத்தால் நிறைவு காண்பான். இளைப்பாற்றியைத் தேடுகிறவன் மிகவும் மதி கெட்டவன். மதுபானம் குடிப்பதில் காலம் கழித்து மகிழ்கிறவன் நிந்தையைத் தன் கொத்தளங்களில் மீத்து வைக்கிறான். 12 அக்கிரமியின் ஆசையே மிகக் கொடியவருடைய ஆதரவாம். நீதிமான்களுடையவரோ தழைத்து வரும். 13 வாய்ப் பாவங்கள் நிமித்தமே தீயோனுக்கு நாசம் அணுகுகின்றது. நீதிமானோ இக்கட்டினின்று தப்பித்துக்கொள்வான். 14 அவனவன் தன் சொந்த வாக்கின் கனியாகிய நலத்தால் றிரப்பப்படுவான். தன் கைகளின் செய்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குத் திருப்பித் தரப்படும். 15 மதியீனன் கண்களுக்குத் தன் வழியே நல்ல வழியாகத் (தோன்றும்). ஞானமுள்ளவனோ ஆலோசனைகளைக் கேட்கிறேன். 16 மதிகெட்டவன் தன் கோபத்தை உடனே காட்டுகிறான். பொல்லாப்பைப் பொருட்படுத்தாதவன் ஞானியாம். 17 தான் அறிந்ததைப் பேசுகிறவன் நியாயத்துக்குச் சாட்சியாய் இருக்கின்றான். பொய் சொல்கிறவனோ வஞ்சகத்திற்கு சாட்சியாயிருக்கிறான். 18 வாக்குறுதியை கொடுக்கிறவன் தன் மனசாட்சியால் கத்திபோல் குத்தப்படுகிறான். விவேகிகளின் நாவோ சுகமாய் இருக்கின்றது. 19 உண்மையை உரைக்கும் உதடு என்றென்றும் நிலையாய் இருக்கும். படபடத்த சாட்சியோ பொய்க்கு (தன்) நாவை இசைக்கிறான். 20 தீங்கு நினைப்போரின் இதயம் வஞ்சனையானது. ஆனால், சமாதான ஆலோசனைகள் செய்கிறவர்களை மகிழ்ச்சி பின்தொடர்கின்றது. 21 நீதிமானுக்கு யாது நேரிட்டாலும் அது அவனைத் துன்புறுத்தாது. அக்கிரமிகளோ தீமையால் நிரப்பப்படுவார்கள். 22 பொய்யர்களை ஆண்டவர் வெறுக்கின்றார். உண்மையாய் நடக்கிறவர்களை அவர் விரும்புகின்றார். 23 கற்றவன் தன் அறிவைப் பாராட்டாமல் மறைக்கிறான். மதியீனரின் இதயமோ அறிவீனத்தை வெளிகாட்டுகின்றது. 24 வல்லவர்களின் கை ஆட்சி செலுத்தும். சோம்பலுள்ள கையோ கப்பங் கட்டிப் பணிவிடை புரியும். 25 மனிதன் இதயத்தில் (உள்ள) துயரம் அவனைத் தாழ்த்தும். நல்ல வார்த்தையால் அவன் மகிழ்ச்சி அடைவான். 26 தன் நண்பனைப்பற்றி நட்டத்தைக் கவனியாதவன் நீதிமானாய் இருக்கிறான். தீயவரின் பாதையோ அவர்களையே வஞ்சிக்கும். 27 வஞ்சகன் இலாபத்தைக் காணான். (நீதிமானான) மனிதனின் பொருள் பொன்போல் விலைபெறும். 28 நீதிநெறியில் வாழ்வு (உண்டு). முறையற்ற வழியோ சாவிற்குக் கூட்டிச்செல்கின்றது.
1. போதனையை நேசிக்கிறவன் அறிவை நேசிக்கிறான். கண்டனங்களைப் புறக்கணிக்கிறவனே ஞானமற்றவனும். 2. நல்லவன் ஆண்டவரிடமிருந்து அருளைப் பெறுவான். தன் சொந்த எண்ணங்களில் ஊன்றியிருக்கிறவனோ அக்கிரமாய் நடக்கிறான். 3. அக்கிரமத்தால் மனிதன் திடம் பெற மாட்டான். நீதிமான்களுடைய வேரும் அசைக்கப்படாது. 4. சுறுசுறுப்புள்ள மனைவி தன் கணவனுக்கு ஒரு முடியாம். அவமானத்துக்குரிய காரியங்களைச் செய்கிறவளோ அவனுடைய எலும்புகள் அழுகிப்போகும்படி செய்வாள். 5. நீதிமானின் சிந்தனைகள் நீதியுள்ளன. அக்கிரமிகளின் ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளனவாம். 6. அக்கிரமிகளின் வார்த்தைகள் பிறர் இரத்தத்தைச் சிந்துகின்றன. நீதிமான்களுடைய வாக்கியமோ அவர்களை விடுவிக்கும். 7. அக்கிரமிகளைப் புரட்டி விட்டால் அவர்கள் இரார்கள். நீதிமான்களுடைய வீடோ நிலைபெற்றிருக்கும். 8. மனிதன் தன் போதகத்தால் அறியப்படுவான். வீணனாகவும் மூடனாகவும் இருக்கிறவனோ அவமானத்துக்கு உட்படுவான். 9. தனக்குத் தேவையானவைகளைத் தேடிக் கொள்கிற ஏழை, பெருமைக்காரனான உணவில்லாதவனைவிட மிகவும் நல்லவன். 10. நீதிமான் தன் மிருகங்களுடைய உயிரைக் காப்பாற்றுகிறான். அக்கிரமிகளுடைய குடல்கள் கொடுமையுள்ளன. 11. தன் நிலத்தை உழுபவன் அப்பத்தால் நிறைவு காண்பான். இளைப்பாற்றியைத் தேடுகிறவன் மிகவும் மதி கெட்டவன். மதுபானம் குடிப்பதில் காலம் கழித்து மகிழ்கிறவன் நிந்தையைத் தன் கொத்தளங்களில் மீத்து வைக்கிறான். 12. அக்கிரமியின் ஆசையே மிகக் கொடியவருடைய ஆதரவாம். நீதிமான்களுடையவரோ தழைத்து வரும். 13. வாய்ப் பாவங்கள் நிமித்தமே தீயோனுக்கு நாசம் அணுகுகின்றது. நீதிமானோ இக்கட்டினின்று தப்பித்துக்கொள்வான். 14. அவனவன் தன் சொந்த வாக்கின் கனியாகிய நலத்தால் றிரப்பப்படுவான். தன் கைகளின் செய்கைகளுக்கு ஏற்ப அவனவனுக்குத் திருப்பித் தரப்படும். 15. மதியீனன் கண்களுக்குத் தன் வழியே நல்ல வழியாகத் (தோன்றும்). ஞானமுள்ளவனோ ஆலோசனைகளைக் கேட்கிறேன். 16. மதிகெட்டவன் தன் கோபத்தை உடனே காட்டுகிறான். பொல்லாப்பைப் பொருட்படுத்தாதவன் ஞானியாம். 17. தான் அறிந்ததைப் பேசுகிறவன் நியாயத்துக்குச் சாட்சியாய் இருக்கின்றான். பொய் சொல்கிறவனோ வஞ்சகத்திற்கு சாட்சியாயிருக்கிறான். 18. வாக்குறுதியை கொடுக்கிறவன் தன் மனசாட்சியால் கத்திபோல் குத்தப்படுகிறான். விவேகிகளின் நாவோ சுகமாய் இருக்கின்றது. 19. உண்மையை உரைக்கும் உதடு என்றென்றும் நிலையாய் இருக்கும். படபடத்த சாட்சியோ பொய்க்கு (தன்) நாவை இசைக்கிறான். 20. தீங்கு நினைப்போரின் இதயம் வஞ்சனையானது. ஆனால், சமாதான ஆலோசனைகள் செய்கிறவர்களை மகிழ்ச்சி பின்தொடர்கின்றது. 21. நீதிமானுக்கு யாது நேரிட்டாலும் அது அவனைத் துன்புறுத்தாது. அக்கிரமிகளோ தீமையால் நிரப்பப்படுவார்கள். 22. பொய்யர்களை ஆண்டவர் வெறுக்கின்றார். உண்மையாய் நடக்கிறவர்களை அவர் விரும்புகின்றார். 23. கற்றவன் தன் அறிவைப் பாராட்டாமல் மறைக்கிறான். மதியீனரின் இதயமோ அறிவீனத்தை வெளிகாட்டுகின்றது. 24. வல்லவர்களின் கை ஆட்சி செலுத்தும். சோம்பலுள்ள கையோ கப்பங் கட்டிப் பணிவிடை புரியும். 25. மனிதன் இதயத்தில் (உள்ள) துயரம் அவனைத் தாழ்த்தும். நல்ல வார்த்தையால் அவன் மகிழ்ச்சி அடைவான். 26. தன் நண்பனைப்பற்றி நட்டத்தைக் கவனியாதவன் நீதிமானாய் இருக்கிறான். தீயவரின் பாதையோ அவர்களையே வஞ்சிக்கும். 27. வஞ்சகன் இலாபத்தைக் காணான். (நீதிமானான) மனிதனின் பொருள் பொன்போல் விலைபெறும். 28. நீதிநெறியில் வாழ்வு (உண்டு). முறையற்ற வழியோ சாவிற்குக் கூட்டிச்செல்கின்றது.
  • நீதிமொழிகள் அதிகாரம் 1  
  • நீதிமொழிகள் அதிகாரம் 2  
  • நீதிமொழிகள் அதிகாரம் 3  
  • நீதிமொழிகள் அதிகாரம் 4  
  • நீதிமொழிகள் அதிகாரம் 5  
  • நீதிமொழிகள் அதிகாரம் 6  
  • நீதிமொழிகள் அதிகாரம் 7  
  • நீதிமொழிகள் அதிகாரம் 8  
  • நீதிமொழிகள் அதிகாரம் 9  
  • நீதிமொழிகள் அதிகாரம் 10  
  • நீதிமொழிகள் அதிகாரம் 11  
  • நீதிமொழிகள் அதிகாரம் 12  
  • நீதிமொழிகள் அதிகாரம் 13  
  • நீதிமொழிகள் அதிகாரம் 14  
  • நீதிமொழிகள் அதிகாரம் 15  
  • நீதிமொழிகள் அதிகாரம் 16  
  • நீதிமொழிகள் அதிகாரம் 17  
  • நீதிமொழிகள் அதிகாரம் 18  
  • நீதிமொழிகள் அதிகாரம் 19  
  • நீதிமொழிகள் அதிகாரம் 20  
  • நீதிமொழிகள் அதிகாரம் 21  
  • நீதிமொழிகள் அதிகாரம் 22  
  • நீதிமொழிகள் அதிகாரம் 23  
  • நீதிமொழிகள் அதிகாரம் 24  
  • நீதிமொழிகள் அதிகாரம் 25  
  • நீதிமொழிகள் அதிகாரம் 26  
  • நீதிமொழிகள் அதிகாரம் 27  
  • நீதிமொழிகள் அதிகாரம் 28  
  • நீதிமொழிகள் அதிகாரம் 29  
  • நீதிமொழிகள் அதிகாரம் 30  
  • நீதிமொழிகள் அதிகாரம் 31  
×

Alert

×

Tamil Letters Keypad References