1. குற்றவாளிகள் கொல்லப்பட்ட பின்பு ஆண்டவர் மோயீசனையும், ஆரோனின் புதல்வனும் குருவுமாகிய எலெயஸாரையும் நோக்கி:
|
2. நீங்கள் இஸ்ராயேல்மக்களின் சபையார் எல்லாரையும் எண்ணக்கடவீர்கள். அவர்களைத் தத்தம் வீடுகளின்படியும் குடும்பத்தின்படியும், இருபதுவயதும் அதற்கு மேற்பட்டும் உள்ளவர்களில் எவரெவர் போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று கணக்கிட்டுப் பாருங்கள் என்றார்.
|
3. அவ்வாறு மோயீசனும் குருவாகிய எலெயஸாரும் எரிக்கோ நகரத்திற்கு எதிரெயுள்ள யோர்தான் நதிக்கு அருகிலிருக்கும் மோவாபின் வெளிகளிலே,
|
4. ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமாய் இருந்தவர்களோடு பேசிக்கொண்டார்கள். எண்ணிக்கையின் தொகையாவது:
|
5. இஸ்ராயேலின் மூத்த புதல்வன் ரூபன். அவனுடைய புதல்வர்களோ ஏனோக்கிய வம்சத் தலைவனான ஏனோக்கும், பலுய வம்சத்தலைவனான பலுவும்,
|
7. இவைகளே ரூபன் கோத்திரத்தின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.
|
9. இவன் புதல்வர்களோ நமுயேல், தாத்தான், அபிரோன் என்பவர்கள். அந்தத் தாத்தான், அபிரோன் என்பவர்களே சபையின் தலைவர்களாய் இருந்து, கொறேயுடைய குழப்பத்தின்போது மோயீசனுக்கும் ஆரோனுக்கும் விரோதமாய் நின்று, ஆண்டவருக்குத் துரோகம் செய்தார்கள்.
|
10. அப்பொழுது நிலம் தன் வாயைத் திறந்து கொறே என்பவனை விழுங்கிற்று. அவனோடு கூட நெருப்பு இருநூற்றைம்பது பேர்களை விழுங்கிய வேளையில், வேறு பலரும் இறந்தார்கள். அவ்வேளை நிகழ்ந்த ஒரு பெரிய புதுமை என்னவென்றால்,
|
12. தங்கள் வம்சப்படி சிமியோனின் புதல்வர்கள்: நமுயேலிய வம்சத்தலைவனான நமுயேலும், ஜமினிய வம்சத்தலைவனான ஜமினும், ஜக்கினிய வம்சத்தலைவனான ஜக்கினும்,
|
15. தங்கள் வம்சப்படி காத்தின் புதல்வர்கள்: செப்போனிய வம்சத்தலைவனான செப்போனும், அக்கிய வம்சத்தலைவனான அக்கியும்,
|
20. தங்கள் வம்சங்களின்படி யூதாவின் புதல்வர்கள்: சேலாய வம்சத்தலைவனான சேலாவும், பரேசிய வம்சத்தலைவனான பரேசும், சாரேய வம்சத்தலைவனான சாரேயுமாவர்.
|
23. தங்கள் வம்சத்தின்படி இஸக்காருடைய புதல்வர்கள்: தோலாய வம்சத்தலைவனான தோலாவும், புவாய வம்சத்தலைவனான புவாவும்,
|
26. தங்கள் வம்சங்களின்படி சபுலோனுடைய புதல்வர்கள்: ஸரேதிய வம்சத்தலைவனான ஸரேதும், எலோனிய வம்சத்தலைவனான எலோனும், ஜலேலிய வம்சத்தலைவனான ஜலேலுமாவர்.
|
29. மனாஸேயுக்கு மக்கீரிய வம்சத்தலைவனான மக்கீர் பிறந்தான். மக்கீருக்குக் கலாத்திய வம்சத்தலைவனான கலாத் பிறந்தான்.
|
30. கலாத்துக்குப் பிறந்த புதல்வர்கள்: ஜெஸேரிய வம்சத்தலைவனான ஜெஸேரும், ஏலேக்கிய வம்சத்தலைவனான ஏலெக்கும்,
|
33. ஏப்பேர் ஸல்பாதைப் பெற்றான். இவனுக்குப் புதல்வர் இல்லை; புதல்வியர் மட்டும் இருந்தனர். இவர்கள்: மாலா, நோவா, ஏகிலா, மேற்கா, தேற்சா என்பவர்கள்.
|
35. தங்கள் வம்சங்களின்படி எபிராயீமுடைய புதல்வர்கள்: சுத்தலாய வம்சத்தலைவனான சுத்தலாவும், பெக்கேரிய வம்சத்தலைவனான பெக்கேரும், தேயெனிய வம்சத்தலைவனான தேயெனுமாவர்.
|
37. இவைகளே எபிராயீம் புதல்வர்களின் குடும்பங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர் முப்பத்தீராயிரத்து ஐநூறு பேர்.
|
38. அவரவர்களுடைய குடும்பங்களின்படி சூசையுடைய புதல்வர்கள் இவர்களேயாவர். தங்கள் வம்சங்களின்படி பெஞ்சமின் புதல்வர்கள்: பெலாய வம்சத்தலைவனான பெலாவும், அஸ்பேலிய வம்சத்தலைவனான அஸ்பேலும், அகிராமிய வம்சத்தலைவனான அகிராமும்,
|
40. பெலாவின் புதல்வர்கள்: ஏரேதும், நொயெமானும்; ஏரேதிய வம்சத் தலைவனான ஏரேதும், நொயெமானிய வம்சத்தலைவனான நொயெமானுமாவர்.
|
41. தங்கள் குடும்பங்களின்படி பெஞ்சமினுடைய சந்ததியார்கள் இவர்களேயாம். அவர்களில் எண்ணப்பட்டவர்கள்: நாற்பத்தையாயிரத்து அறுநூறு பேர்.
|
42. தங்கள் குடும்பங்களின்படி தானுடைய புதல்வர்கள்: சுகாமிய வம்சத்தலைவன் சுகாம்; அவன் குடும்பங்களின்படி தானுடைய சுற்றம் அதுவேயாம்.
|
44. தங்கள் குடும்பங்களின்படி ஆஸேருடைய புதல்வர்கள்: ஜெம்னாய வம்சத்தலைவனான ஜெம்னாவும், ஜெசுவிய வம்சத்தலைவனான பிரியேயுமாவர்.
|
45. பிரியேயின் புதல்வர்கள்: ஏபேரிய வம்சத்தலைவனான ஏபேரும், மெற்கியேலிய வம்சத்தலைவனான மெற்கியேலுமாவர்.
|
47. இவைகளே ஆஸேர் புதல்வர்களுடைய வம்சங்கள். அவைகளில் எண்ணப்பட்டவர்கள்: ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.
|
48. தங்கள் குடும்பங்களின்படி நெப்தலியுடைய புதல்வர்கள்: ஜெஸியேலிய வம்சத்தலைவனான ஜெஸியேலும், குனிய வம்சத்தலைவனான குனியும்,
|
50. தத்தம் குடும்பங்களின்படி நெப்தலியின் வம்சங்கள் இவைகளேயாம். அவைகளில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர்.
|
54. அதிகம் பேருக்கு அதிகமாகவும், கொஞ்சம் பேருக்குக் கொஞ்சமாகவும், அவர்கள் இப்பொழுது எண்ணிக்கையிடப்பட்ட எண்ணிக்கைக்குத் தக்கபடியே அவரவருக்கு உரிமை கொடுக்கப்படும்.
|
55. ஆனாலும், திருவுளச் சீட்டுப் போட்டு, சீட்டு விழுந்தபடியே கோத்திரங்களுக்கும் குடும்பங்களுக்கும் நாடு பங்கிடப்படும்.
|
56. அதிகம் பேராயினும் கொஞ்சம் பேராயினும் திருவுளச் சீட்டினால் எவ்வளவு வந்ததோ அவ்வளவே அவரவர்கள் பொறுவார்கள் என்றருளினார்.
|
57. அவரவர்களுடைய குடும்பங்களின்படி எண்ணப்பட்ட லேவியரின் புதல்வர்களுடைய எண்ணிக்கை: ஜெற்சோனிய வம்சத்தலைவனான ஜெற்சோனும், ககாதிய வம்சத்தலைவனான ககாதும், மெறாரிய வம்சத்தலைவனான மெறாரியுமாவர்.
|
58. லேவியருடைய குடும்பங்கள்: லோப்னி குடும்பம், ஏபிரோன் குடும்பம், மொகோனி குடும்பம், மூஸி குடும்பம், கோறே குடும்பம் ஆகிய இவைகளாம். ககாது அபிராமைப் பெற்றான்.
|
59. இவனுடைய மனைவியின் பெயர் ஜோக்கப்பேத். இவள் லேவிக்கு எகிப்திலே பிறந்த புதல்வி. அவள் தன் கணவனாகிய அம்ராமுக்கு ஆரோனையும், மோயீசனையும், இவர்களின் சகோதரியாகிய மரியாளையும், பெற்றாள்.
|
61. இவர்களில் நதாப், அபியூ, எலெயஸார், ஈத்தமார் என்பவர்கள் ஆண்டவர் முன்னிலையில் அந்நிய நெருப்பைச் சமர்ப்பித்தமையால் இறந்தனர்.
|
62. ஆண் குழந்தைகளில் ஒரு மாதத்துப்பிள்ளை முதல் எண்ணப்பட்டவர்களின் தொகை: இருபத்து மூவாயிரம். இவர்கள் இஸ்ராயேல் மக்களின் கணக்கிலே சேர்க்கப்பட்டதுமில்லை; அவர்களுக்கு உரிமை கொடுக்கப்பட்டதுமில்லை.
|
63. மோயீசனாலும் குருவாகிய எலெயஸாராலும் யோர்தான் கரையில் எரிக்கோ நகரத்துக்கு எதிரேயுள்ள மோவாப் வெளிகளிலே எண்ணி எழுதப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை அதுவே.
|
64. முன்பே மோயீசனும் ஆரோனும் சீனாய்ப் பாலைவனத்திலே எண்ணி எழுதியவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
|
65. ஏனென்றால், அவர்கள் எல்லாரும் பாலைவனத்தில் சாவார்களென்று ஆண்டவர் திருவுளம்பற்றியிருந்தார். அப்படியே, ஜெப்போனேயின் புதல்வன் காலேவையும், நூனின் புதல்வன் ஜோசுவாவையும் தவிர, அவர்களில் வேறொருவரும் மீதி இருக்கவில்லை.
|