1. நான் மதில்களைக் கட்டிக் கதவுகளை அமைத்த பின் வாயிற்காவலரையும் பாடகரையும் லேவியரையும் கணக்கிட்டேன்.
|
2. என் சகோதரன் அனானியிடமும் அரண்மனைத் தலைவன் அனானியாவிடமும் யெருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் இந்த அனானியா மற்றவர்களைவிட நேர்மையுள்ளவன்; தெய்வ பயம் கொண்டவன்.
|
3. நான் அவர்களைப் பார்த்து, "வெயில் வரும் வரை யெருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம். சூரியன் இன்னும் உச்சியில் இருக்கும் போதே கதவுகளை மூடித் தாழிட வேண்டும். யெருசலேம் மக்களுள் காவலரை ஏற்படுத்தி அவர்கள் ஒவ்வொருவரும் முறைப்படி தத்தம் வீடுகளுக்கு எதிராகக் காவல் புரியுமாறு செய்ய வேண்டும்" என்று சொன்னேன்.
|
4. நகர் பரந்ததும் பெரியதுமாயிருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து வந்த மக்கள் வெகு சிலரே. வீடுகள் இன்னும் அதில் கட்டப்படவில்லை.
|
5. இந்நிலையில் கடவுளின் ஏவுதலின்படி, பெரியோர், ஆளுநர்கள், பொதுமக்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டி அவர்களைக் கணக்கெடுத்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த முதற் கூட்டத்தினரின் குடும்ப வரிசைப் பதிவேடு ஒன்று அகப்பட்டது. அதில் எழுதியிருந்ததாவது:
|
6. இது பபிலோனிய அரசர் நபுகோதனசாரால் சிறைப்படுத்தப்பட்டு, பின் யூதேயா நாட்டிலிருந்த தத்தம் நகருக்குத் திரும்பி வந்த இம்மாநில மக்கள் தொகைக் கணக்காவது:
|
7. ஜெரோபாபேல், யோசுவா, நெகேமியா, ஆசாரியாசு, இரவாமியாசு, நகாமணி, மர்தோக்கே, பெல்சாம், மெஸ்பராத், பெகோவாயி, நகோம், பாவானா ஆகியோரோடு திரும்பிவந்த இஸ்ராயேல் மக்களில் ஆடவரின் கணக்காவது:
|
11. பாகாத் மோவாபின் புதல்வர்களான யோசுவா, யோவாபு ஆகியோரின் மக்கள் இரண்டாயிரத்து எண்ணுற்றுப் பதினெட்டு;
|
45. வாயிற்காவலரில்: செல்லோம், ஆத்தேர், தெல்மோன், ஆக்கூப், அதிதா, சோபாயி ஆகியோரின் மக்கள் நூற்று முப்பத்தெட்டு.
|
59. யெதேல் மக்கள், சபாதியா மக்கள், ஆதில் மக்கள், ஆமோனின் மகன் சபாயீமுக்குப் பிறந்த போக்கெரெத்தின் மக்கள் ஆகிய இவர்களே.
|
61. அன்றியும் தெல்மலா, தெல்கர்சா, கெரூப், அத்தோன், எம்மேர் என்ற இடங்களிலிருந்து வந்தவர்களும், தாங்கள் இஸ்ராயேலின் வழி வந்தவர் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தவர்களும் வருமாறு:
|
63. குருக்களிலே ஹபியா மக்கள், அக்கோஸ் மக்கள், பெர்செலாயி மக்கள்- இவன் கலாதியனான பெர்செலாயின் புதல்வியரில் ஒருத்தியை மணந்து கொண்டதனால் அவர்களின் பெயரால் பெர்செலாயி என அழைக்கப்பட்டான்- ஆகிய அனைவரும்
|
65. அறிஞரும் உத்தமருமான ஒரு குரு தோன்றுவம் வரை நீங்கள் உள் தூயகப் பொருட்களில் எதையும் உண்ணக் கூடாது" என்று ஆளுநர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.
|
67. அவர்களைத் தவிர, அவர்களின் வேலைக்காரரும் வேலைக்காரிகளும் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு பேர். மற்றும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் இருந்தனர்.
|
70. குலத் தலைவர்களிலே பலர் ஆலய வேலைக்காகக் கொடுத்த காணிக்கைகளின் கணக்காவது: ஆளுநர் கருவூலத்திற்கு ஆயிரம் திராக்மா என்ற பொற்காசுகளையும் ஐம்பது பாத்திரங்களையும் ஐந்நூற்று முப்பது குருவுடைகளையும் தந்தார்.
|
71. குலத் தலைவர்களில் வேறு சிலர் ஆலய வேலை நிதிக்கென்று இருபதாயிரம் திராக்மா என்ற பொற் காசுகளையும், இரண்டாயிரத்திருநூறு மினா என்ற வெள்ளிக் காசுகளையும் தந்தனர்.
|
72. ஏனைய மக்களோ இருபதினாயிரம் திராக்மா என்ற பொற்காசுகளையும், இரண்டாயிரம் மினா என்ற வெள்ளிக் காசுகளையும், அறுபத்தேழு குருவுடைகளையும் கொடுத்தனர்.
|
73. குருக்களும் லேவியர்களும் வாயிற்காவலரும் பாடகரும் பொதுமக்களுள் சிலரும் ஆலய ஊழியர்களும் இஸ்ராயேலர் அனைவரும் தத்தம் நகர்களில் வாழ்ந்து வந்தனர்.
|