1 நான் மதில்களைக் கட்டிக் கதவுகளை அமைத்த பின் வாயிற்காவலரையும் பாடகரையும் லேவியரையும் கணக்கிட்டேன்.2 என் சகோதரன் அனானியிடமும் அரண்மனைத் தலைவன் அனானியாவிடமும் யெருசலேமின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தேன். ஏனெனில் இந்த அனானியா மற்றவர்களைவிட நேர்மையுள்ளவன்; தெய்வ பயம் கொண்டவன்.3 நான் அவர்களைப் பார்த்து, "வெயில் வரும் வரை யெருசலேமின் கதவுகளைத் திறக்க வேண்டாம். சூரியன் இன்னும் உச்சியில் இருக்கும் போதே கதவுகளை மூடித் தாழிட வேண்டும். யெருசலேம் மக்களுள் காவலரை ஏற்படுத்தி அவர்கள் ஒவ்வொருவரும் முறைப்படி தத்தம் வீடுகளுக்கு எதிராகக் காவல் புரியுமாறு செய்ய வேண்டும்" என்று சொன்னேன்.4 நகர் பரந்ததும் பெரியதுமாயிருந்தது. ஆனால் அதனுள் வாழ்ந்து வந்த மக்கள் வெகு சிலரே. வீடுகள் இன்னும் அதில் கட்டப்படவில்லை.5 இந்நிலையில் கடவுளின் ஏவுதலின்படி, பெரியோர், ஆளுநர்கள், பொதுமக்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டி அவர்களைக் கணக்கெடுத்தேன். அப்பொழுது அடிமைத்தனத்தினின்று திரும்பி வந்திருந்த முதற் கூட்டத்தினரின் குடும்ப வரிசைப் பதிவேடு ஒன்று அகப்பட்டது. அதில் எழுதியிருந்ததாவது:6 இது பபிலோனிய அரசர் நபுகோதனசாரால் சிறைப்படுத்தப்பட்டு, பின் யூதேயா நாட்டிலிருந்த தத்தம் நகருக்குத் திரும்பி வந்த இம்மாநில மக்கள் தொகைக் கணக்காவது:7 ஜெரோபாபேல், யோசுவா, நெகேமியா, ஆசாரியாசு, இரவாமியாசு, நகாமணி, மர்தோக்கே, பெல்சாம், மெஸ்பராத், பெகோவாயி, நகோம், பாவானா ஆகியோரோடு திரும்பிவந்த இஸ்ராயேல் மக்களில் ஆடவரின் கணக்காவது:8 பாரேசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்றெழுபத்திரண்டு;9 சவாத்தியாவின் மக்கள் முந்நூற்றெழுபத்திரண்டு;10 அரேயாவின் மக்கள் அறுநூற்றைம்பத்திரண்டு;11 பாகாத் மோவாபின் புதல்வர்களான யோசுவா, யோவாபு ஆகியோரின் மக்கள் இரண்டாயிரத்து எண்ணுற்றுப் பதினெட்டு;12 ஏலாமின் மக்கள் ஆயிரத்திருநூற்றைம்பத்து நான்கு;13 ஜெத்துவாவின் மக்கள் எண்ணுற்று நாற்பத்தைந்து;14 ஜாக்காயீயின் மக்கள் எழுநூற்றறுபது;15 பண்ணுயியின் மக்கள் அறுநூற்று நாற்பத்தெட்டு;16 பேபாயியின் மக்கள் அறுநூற்றிருபத்தெட்டு;17 அசுகாத்தின் மக்கள் இரண்டாயிரத்து முந்நூற்றிருபத்திரண்டு;18 அதோனிக்காமின் மக்கள் அறுநூற்றறுபத்தேழு;19 பேகுவாயின் மக்கள் இரண்டாயிரத்தறுபத்தேழு;20 ஆதீனின் மக்கள் அறுநூற்றைம்பத்தைந்து;21 எசேக்கியாவின் மகன் ஆத்தேரின் மக்கள் தொண்ணுற்றெட்டு;22 ஆசேமின் மக்கள் முந்நூற்றிருபத்தெட்டு;23 பேசாயியின் மக்கள் முந்நூற்றிருபத்து நான்கு;24 ஆரேப்பின் மக்கள் நூற்றுப் பன்னிரண்டு;25 கபவோனின் மக்கள் தொண்ணுற்றைந்து;26 பெத்லகேம், நேத்துபா என்ற ஊர்களின் மக்கள் நூற்றெண்பத்தெட்டு;27 அநத்தோத்தின் ஆடவர் நூற்றிருபத்தேட்டு;28 பேத் தஸ்மோத்தின் ஆடவர் நாற்பத்திரண்டு;29 காரியாத்தியாரிம், சேபிரா, பெரெத் என்ற ஊர்களின் மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று;30 ராமா, கேபா என்ற ஊர்களின் மக்கள் அறுநூற்றிருபத்தொன்று;31 மக்மாசின் ஆடவர் நூற்றிருபத்திரண்டு;32 பேத்தேல், ஹாயீன் என்ற ஊர்களின் மனிதர் நூற்றிருபத்து மூன்று;33 மற்றொரு நெபோவின் மனிதர் ஐம்பத்திரண்டு;34 மற்றொரு ஏலாமின் மனிதர் ஆயிரத்திருநூற்று ஐம்பத்து நான்கு;35 ஹாரேமின் மக்கள் முந்நூற்றிருபது;36 யெரிக்கோவின் மக்கள் முந்நூற்று நாற்பத்தைந்து;37 லோத், ஹதீத் ஒனோ என்பவர்களின் மக்கள் எழுநூற்றிருபத்தொன்று;38 சேனவாவின் மக்கள் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பது.39 குருக்களிலே: யோசுவா குடும்பத்தைச் சேர்ந்த இதாயியாவின் மக்கள் தொள்ளாயிரத்தெழுபத்து மூன்று;40 எம்மேரின் மக்கள் ஆயிரத்தைம்பத்திரண்டு;41 பாசூரின் மக்கள் ஆயிரத்திருநூற்று நாற்பத்தேழு;42 ஆரேமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு.43 லேவியர்களிலே: ஒதுயியாவின் புதல்வரான யோசுவா,கெத்மிஹேல் என்போரின் மக்கள் எழுபத்து நான்கு;44 பாடகரில் ஆசாப்பின் மக்கள் நூற்று நாற்பத்தெட்டு.45 வாயிற்காவலரில்: செல்லோம், ஆத்தேர், தெல்மோன், ஆக்கூப், அதிதா, சோபாயி ஆகியோரின் மக்கள் நூற்று முப்பத்தெட்டு.46 ஆலய ஊழியர்களில்: சோஹா மக்கள், ஹசுப்பா மக்கள், தெபாவோத் மக்கள்,47 சேறோஸ் மக்கள், சீயவா மக்கள், பதோன் மக்கள்,48 லெபனா மக்கள், ஹாகபா மக்கள்,49 செல்மாயீ மக்கள், ஹானான் மக்கள், கேதேல் மக்கள்,50 காஹேர் மக்கள், இராவாயியாவின் மக்கள், ராசீனின் மக்கள், நேகொதாவின் மக்கள்,51 கேசேம் மக்கள், ஆசா மக்கள்,52 பாசேயியாவின் மக்கள், பேசாயியின் மக்கள்,53 முனிம் மக்கள், நோப்புசீம் மக்கள், பக்பூக் மக்கள், ஹகுவா மக்கள், ஹற்கூர் மக்கள்,54 பேஸ்லோத் மக்கள், மாருதா மக்கள், ஆர்சா மக்கள்,55 பெற்கோஸ் மக்கள், சீசறா மக்கள்,56 தேமா மக்கள், நாசியா மக்கள், ஆதிபா மக்கள்,57 சாலமோனுடைய ஊழியர்களின் மக்கள், சோதயீயின் மக்கள், சோபெரேத் மக்கள்,58 பாரிதா மக்கள், யாஹலா மக்கள், தற்கோன் மக்கள்,59 யெதேல் மக்கள், சபாதியா மக்கள், ஆதில் மக்கள், ஆமோனின் மகன் சபாயீமுக்குப் பிறந்த போக்கெரெத்தின் மக்கள் ஆகிய இவர்களே.60 ஆலய ஊழியர்களும், சாலமோனின் ஊழியர்களுடைய மக்களும் முந்நூற்றுத் தொண்ணுற்றிரண்டு பேர்.61 அன்றியும் தெல்மலா, தெல்கர்சா, கெரூப், அத்தோன், எம்மேர் என்ற இடங்களிலிருந்து வந்தவர்களும், தாங்கள் இஸ்ராயேலின் வழி வந்தவர் என்று நிரூபிக்க முடியாமல் இருந்தவர்களும் வருமாறு:62 தலாயியா, தோபியா, நேக்கொதா ஆகியோரின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.63 குருக்களிலே ஹபியா மக்கள், அக்கோஸ் மக்கள், பெர்செலாயி மக்கள்- இவன் கலாதியனான பெர்செலாயின் புதல்வியரில் ஒருத்தியை மணந்து கொண்டதனால் அவர்களின் பெயரால் பெர்செலாயி என அழைக்கப்பட்டான்- ஆகிய அனைவரும்64 தங்கள் தலைமுறை அட்டவணையைத் தேடியும் அடையாததால் குருத்துவப் பணியினின்று நீக்கப்பட்டனர்.65 அறிஞரும் உத்தமருமான ஒரு குரு தோன்றுவம் வரை நீங்கள் உள் தூயகப் பொருட்களில் எதையும் உண்ணக் கூடாது" என்று ஆளுநர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்.66 மக்கள் அனைவரின் மொத்தத் தொகை நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபது.67 அவர்களைத் தவிர, அவர்களின் வேலைக்காரரும் வேலைக்காரிகளும் ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு பேர். மற்றும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் இருந்தனர்.68 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இரு நூற்று நாற்பத்தைந்து;69 அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆயிரத்து எழுநூற்றிருபது.70 குலத் தலைவர்களிலே பலர் ஆலய வேலைக்காகக் கொடுத்த காணிக்கைகளின் கணக்காவது: ஆளுநர் கருவூலத்திற்கு ஆயிரம் திராக்மா என்ற பொற்காசுகளையும் ஐம்பது பாத்திரங்களையும் ஐந்நூற்று முப்பது குருவுடைகளையும் தந்தார்.71 குலத் தலைவர்களில் வேறு சிலர் ஆலய வேலை நிதிக்கென்று இருபதாயிரம் திராக்மா என்ற பொற் காசுகளையும், இரண்டாயிரத்திருநூறு மினா என்ற வெள்ளிக் காசுகளையும் தந்தனர்.72 ஏனைய மக்களோ இருபதினாயிரம் திராக்மா என்ற பொற்காசுகளையும், இரண்டாயிரம் மினா என்ற வெள்ளிக் காசுகளையும், அறுபத்தேழு குருவுடைகளையும் கொடுத்தனர்.73 குருக்களும் லேவியர்களும் வாயிற்காவலரும் பாடகரும் பொதுமக்களுள் சிலரும் ஆலய ஊழியர்களும் இஸ்ராயேலர் அனைவரும் தத்தம் நகர்களில் வாழ்ந்து வந்தனர்.