1. ஒருநாள் அவர் கோயிலில் மக்களுக்குப் போதித்து நற்செய்தியை அறிவிக்கும்போது, தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் மூப்பர்களோடு அங்கு வர நேர்ந்தது.
|
2. "எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர்? அல்லது உமக்கு இந்த அதிகாரம் கொடுத்தவர் யார் என்று எங்களுக்குச் சொல்லும்" என அவரைக் கேட்டனர்.
|
5. அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டதாவது: "' வானகத்திலிருந்து வந்தது' என்போமாயின், 'ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை?' என்று கேட்பார்.
|
6. 'மனிதரிடமிருந்து வந்தது' ¢எனபோமாயின், மக்கள் அனைவரும் நம்மைக் கல்லால் எறிந்து கொல்வர். ஏனெனில், அருளப்பரை இறைவாக்கினர் என்று நம்பியிருக்கின்றனர்,"
|
9. பின்னும் அவர் இவ்வுவமையை மக்களுக்குச் சொல்லத் தொடங்கினார்: "ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டம் வைத்து, குடியானவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுவிட்டு நீண்டகாலம் வெளியூர் சென்றிருந்தான்.
|
10. பருவகாலத்தில் தோட்டத்துப் பலனைக் குடியானவர்கள் தனக்குக் கொடுக்கும்படி, ஊழியன் ஒருவனை அனுப்பினான். குடியானவரோ அவனை அடித்து வெறுங்கையாய் அனுப்பிவிட்டனர்.
|
11. மீண்டும் ஓர் ஊழியனை அனுப்பினான். அவனையும் அவர்கள் அடித்து இழிவுபடுத்தி வெறுங்கையாய் அனுப்பினார்கள்.
|
13. திராட்சைத் தோட்டத்துக்குரியவன், 'இனி என்ன செய்வது? என் அன்பார்ந்த மகனை அனுப்புவேன். அவனையாவது அவர்கள் மதிக்கக்கூடும்' என்றான்.
|
14. குடியானவர்கள் அவனைக் கண்டதும், 'இவனே சொத்துக்குரியவன். சொத்து நம்முடையதாகும்படி இவனைக் கொன்றுபோடுவோம்' என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டு,
|
15. அவனைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றார்கள். "அப்படியானால், தோட்டத்துக்குரியவன் அவர்களை என்ன செய்வான்?
|
16. அவன் வந்து, அக்குடியானவர்களை ஒழித்து, தோட்டத்தை வேறு ஆட்களுக்கு விடுவான்." இதைக் கேட்ட அவர்கள், "ஐயோ, வேண்டாமே! ', என்றனர்.
|
17. அவர் அவர்களை நோக்கி, "கட்டுவோர் விலக்கிய கல்லே மூலைக்கல்லாய் அமைந்தது! ' என்று எழுதியிருக்கிறதே, அதன் பொருள் என்ன?
|
18. அக்கல்லின் மேல் விழுபவன் எவனும் நொறுங்கிப்போவான். அது எவன்மேல் விழுமோ, அவன் தவிடுபொடியாவான்." என்றார்.
|
19. தங்களைக் குறித்தே இவ்வுவமையை அவர் கூறினார் என்று உணர்ந்து, தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அப்போதே அவரைப் பிடிக்க வழிதேடினர். ஆனால் பொது மக்களுக்கு அஞ்சினர்.
|
20. ஆகையால் அவர்கள் சமயம்பார்த்து வேவுகாரர்களை அனுப்பினார்கள். இவர்கள் ஆளுநரின் ஆட்சி அதிகாரத்திற்கு அவரைக் கையளிக்கும்படி, நேர்மையானவர்களைப்போல நடித்து, அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்கப் பார்த்தனர்.
|
21. " போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் சரியே. முகத்தாட்சணியம் பாராமல் கடவுளின் வழியை உண்மைக்கேற்பப் போதிக்கின்றீர் என்று எங்களுக்குத் தெரியும்.
|
24. "ஒரு வெள்ளிக்காசை எனக்குக் காட்டுங்கள். அதிலுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்றார். "செசாருடையவை" என்றனர்.
|
25. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "அப்படியானால், செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்று சொன்னார்.
|
26. மக்கள் முன்னிலையில் அவருடைய பேச்சில் குற்றம் கண்டுபிடிக்க முடியாமல், அவருடைய மறுமொழியைக் கேட்டு வியந்து பேசாதிருந்தனர்.
|
28. "போதகரே, மனைவியுள்ள ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவனுடைய சகோதரன் அவளை மணந்து தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் என்று மோயீசன் எழுதிவைத்துள்ளார்.
|
33. உயிர்த்தெழும்போது அவள் யாருக்கு மனைவியாக இருப்பாள்? எழுவரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தனரே! " என்றனர்.
|
35. மறு உலகையும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலையும் அடைவதற்குத் தகுதியுள்ளவராக எண்ணப்படுவோர் அங்கே பெண்கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை.
|
36. ஏனெனில், இனி, அவர்கள் இறக்கமாட்டார்கள். வானதூதருக்கு ஒப்பாயிருப்பார்கள். மேலும் உயிர்த்த மக்களாயிருப்பதால் கடவுளின் மக்களாயும் இருப்பார்கள்.
|
37. இறந்தோர் உயிர்த்தெழுவர் என்பதை, மோயீசனும் முட்செடியைப்பற்றிய பகுதியில் வெளிப்படுத்தினார். அதில் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று குறிப்பிடுகிறார்.
|
38. அப்படியெனில், அவர் வாழ்வோரின் கடவுளேயன்றி, இறந்தோரின் கடவுள் அல்லர். ஏனெனில், அவருக்கு எல்லாரும் உயிருள்ளவர்களே" என்றார்.
|
43. நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும்' எனத் தாவீதே சங்கீத ஆகமத்தில் சொல்லுகிறார்.
|
44. ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாகமட்டும் இருப்பது எப்படி?" என்று வினவினார்.
|
46. "மறைநூல் அறிஞர்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் நீண்ட அங்கி தரித்து நடமாட விரும்புகிறார்கள். பொது இடங்களில் வணக்கத்தையும், செபக்கூடங்களில் முதல் இருக்கைகளையும், விருந்துகளில் முதல் இடங்களையும் பெற ஆசிக்கிறார்கள்.
|
47. கைம்பெண்களின் உடைமைகளை விழுங்குகிறார்கள். பார்வைக்கோ நீண்ட செபம் செய்கிறார்கள். இவர்கள் அதிக தண்டனைக்கு ஆளாவார்கள்" என்றார்.
|