1. மூன்றாம் நாள், கலிலேயாவிலுள்ள கானாவூரில் திருமணம் ஒன்று நடைபெற்றது. 'இயேசுவின் தாய் அங்கு இருந்தாள்.
|
6. யூதரின் துப்புரவு முறைமைப்படி ஆறு கற்சாடிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் பிடிக்கும்.
|
7. இயேசு அவர்களை நோக்கி, "இச்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்றார். அவர்கள் அவற்றை வாய்மட்டும் நிரப்பினார்கள்.
|
9. அவர்கள் அப்படியே செய்தனர். பந்தி மேற்பார்வையாளன் திராட்சை இரசமாய் மாறின தண்ணீரைச் சுவைத்தான். இத் திராட்சை இரசம் எங்கிருந்து வந்ததென்று அவனுக்குத் தெரியாது. - ஆனால் தண்ணீரைக் கொண்டுவந்த பணியாட்களுக்குத் தெரியும். -
|
10. அவன் மணமகனை அழைத்து, "எல்லாரும் முதலில் நல்ல இரசத்தைப் பரிமாறுவர். நன்றாய்க் குடித்தபின் கீழ்த்தரமானதைத் தருவர். நீரோ நல்ல இரசத்தை இதுவரை வைத்திருந்தீரே" என்றான்.
|
11. இதுவே இயேசு செய்த அருங்குறிகளில் முதலாவது. இது கலிலேயாவிலுள்ள கானாவூரில் நிகழ்ந்தது. இவ்வாறு அவர் நமது மாட்சிமையை வெளிப்படுத்தினார். அவருடைய சீடர் அவரில் விசுவாசங்கொண்டனர்.
|
12. இதற்குப்பின், அவரும் அவருடைய தாயும் சகோதரரும் அவருடைய சீடரும் கப்பர் நகூமுக்குச் சென்றனர். அங்குச் சில நாட்களே தங்கினர்.
|
15. அப்போது கயிறுகளால் சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோயிலிலிருந்து துரத்தினார். ஆடு மாடுகளையும் விரட்டிவிட்டார். நாணயமாற்றுவோரின் காசுகளை வீசியெறிந்து, பலகைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
|
16. புறா விற்பவர்களைப் பார்த்து, "இதெல்லாம் இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை வாணிபக்கூடமாக்க வேண்டாம்" என்றார்.
|
17. "உமது இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்" என்று எழுதியுள்ளதை அவருடைய சீடர் நினைவுகூர்ந்தனர்.
|
18. அப்போது யூதர், "இப்படியெல்லாம் செய்கிறீரே, இதற்கு என்ன அறிகுறி காட்டுகிறீர் ?" என்று அவரைக் கேட்டனர்.
|
20. யூதர்களோ, "இவ்வாலயத்தைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகளாயினவே, நீ மூன்றே நாளில் எழுப்பிவிடுவாயோ ?" என்று கேட்டனர்.
|
22. அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்தபொழுது, அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும், இயேசு கூறிய வார்த்தைகளையும் விசுவசித்தனர்.
|
23. பாஸ்காத் திருவிழாவின்போது அவர் யெருசலேமிலிருக்கையில், அவர் செய்த அருங்குறிகளைக் கண்டு, பலர் அவருடைய பெயரில் விசுவாசங்கொண்டனர்.
|
25. மனிதனைப்பற்றி எவரும் அவருக்கு எடுத்துக்கூறத் தேவையில்லை. மனித உள்ளத்திலிருப்பதை அறிந்திருந்தார்.
|