2. கடவுள் சார்பில் நான் சொல்ல வேண்டியது இன்னும் கொஞ்சம் உள்ளது; ஆகவே சற்றுப்பொறுத்திருந்து கேளும், அதையும் உமக்கு வெளிப்படுத்துவேன்.
|
6. கொடியவர்களை அவர் உயிரோடு விட்டு வைக்க மாட்டார், துன்புறுத்தப் படுகிறவர்களுக்கு நீதி வழங்குகிறார்.
|
7. நீதிமான்கள் மேலிருந்து தம் பார்வையே அகற்றுகிறார் அல்லர், அரசர்களை அரியணையில் என்றென்றைக்கும் அமர்த்துகிறார், அவர்களும் உயர்வு பெறுகிறார்கள்.
|
9. அவர்களுடைய செயல்களையும் மீறுதல்களையும் எடுத்துக்காட்டி, அவர்களுடைய இறுமாப்பான நடத்தையைத் தெரியப்படுத்துகிறார்.
|
10. அறிவுரைகளுக்கு அவர்களுடைய செவிகளைத் திறக்கிறார்; அக்கிரமத்திலிருந்து மனந்திரும்பக் கட்டளையிடுகிறார்.
|
11. அவர்கள் அதற்குச் செவிமடுத்து அவருக்கு ஊழியம் செய்தால், வளமான வாழ்வில் தங்கள் நாட்களையும், இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பார்கள்.
|
12. ஆனால் அவர்கள் செவிமடுக்காமற் போனால், வாளுக்கு இரையாகி மடிவார்கள், அறிவில்லாதவர்களாய்ச் சாவார்கள்.
|
13. பொல்லாத உள்ளத்தினர் தங்கள் சினத்தைப் பேணுகின்றார்கள், அவர்களை அவர் விலங்கிடும் போது, அவர்கள் உதவி கேட்பதில்லை;
|
15. துன்புறுகிறவர்களை அவர்கள் துன்பத்தாலேயே மீட்கிறார், இடுக்கண் அனுப்பி அவர்களது செவியைத் திறக்கிறார்.
|
16. இப்பொழுது உம்மையும் வேதனையிலிருந்து இழுத்து விடப்போகிறார்; வளமான வாழ்வைத் தாராளமாய்த் துய்த்தீர்; உமது பந்தியில் கொழுமையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
|
17. ஆனால் முன்பு பொல்லாதவர் மீது நீர் தீர்ப்புச் செலுத்தவில்லை, திக்கற்றவனுக்கு உரிமை தராமல் வஞ்சித்தீர்.
|
18. இனிமேல் கையூட்டுகள் பெற்றுச் சீர்குலையாமல், செல்வப் பெருக்கினால் வழி தவறிப் போகாமல் எச்சரிக்கையாயிரும்.
|
19. பணமில்லாதவனையும் பணம் படைத்தவனையும், வலுவில்லாதவனையும் வலுவுள்ளவனையும் ஒருங்கே விசாரணைக்குக் கொண்டு வாரும்.
|
23. அவருக்கு வழிவகுத்துக் கொடுத்தவன் யார்? அல்லது, 'நீர் செய்தது தவறு' என்று அவரிடம் சொல்லக்கூடியவன் யார்?
|
26. இதோ கடவுள் பெரியவர், தம் அறிவுக்கு எட்டாதவர்; அவர் ஆண்டுகளின் கணக்கு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது.
|
31. ஏனெனில் இவற்றால் தான் மக்களினங்களை அவர் தீர்ப்பிடுகிறார், ஏராளமாய் உணவுப் பொருளை விளைவிக்கிறார்.
|