தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. ஆண்டவரே, நீரே என் கடவுள்; நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்; உன் பெயரைப் போற்றுவேன்; நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்; நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர்.
2. ஏனெனில், நீ நகரத்தைக் கற்குவியலாக்கினீர்; அரண்சூழ்ந்த பட்டணத்தைப் பாழடையச் செய்தீர்; அயல் நாட்டினரின் கோட்டை அது; இனி நகராய் இராது; என்றுமே கட்டி எழுப்பப்படாது.
3. ஆதலால் வலிமைமிகு மக்களினம் உம்மைப் பெருமைப்படுத்தும்; முரடரான வேற்றின நகரத்தினர் உமக்கு அஞ்சுவர்.
4. ஏழைகளுக்கு நீர் அரணாய் இருக்கின்றீர்; வறியவனுக்கு அவன் துன்பத்தில் உறைவிடம் நீரே; புயற்காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்; ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிற்சுவரை மோதித் தாக்கும் பெரும் புயல் போலும்,
5. வறண்ட நிலத்தில் வெப்பம் போலும் இருக்கும். கார்மேக நிழல் வெயிலைத் தணிப்பது போல் அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடங்கச் செய்கின்றீர்; முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.
6. படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.
7. மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.
8. என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்;;தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.
9. அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம். "
10. ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்; எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல், மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.
11. நீந்துபவன் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபு தன் கைகளை விரிப்பான்; ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும் கைவினைச் செயல்களையும் விழச்; செய்வார்.
12. வானாளவ உயர்ந்துநிற்கும் உன் அரண்களை அவர் விழத் தள்ளி, தரைமட்டமாக்குவார்; அவை புழுதியோடு புழுதியாகி மண்ணோடு மண்ணாகும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 25 of Total Chapters 66
ஏசாயா 25
1. ஆண்டவரே, நீரே என் கடவுள்; நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்; உன் பெயரைப் போற்றுவேன்; நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்; நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர்.
2. ஏனெனில், நீ நகரத்தைக் கற்குவியலாக்கினீர்; அரண்சூழ்ந்த பட்டணத்தைப் பாழடையச் செய்தீர்; அயல் நாட்டினரின் கோட்டை அது; இனி நகராய் இராது; என்றுமே கட்டி எழுப்பப்படாது.
3. ஆதலால் வலிமைமிகு மக்களினம் உம்மைப் பெருமைப்படுத்தும்; முரடரான வேற்றின நகரத்தினர் உமக்கு அஞ்சுவர்.
4. ஏழைகளுக்கு நீர் அரணாய் இருக்கின்றீர்; வறியவனுக்கு அவன் துன்பத்தில் உறைவிடம் நீரே; புயற்காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்; ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிற்சுவரை மோதித் தாக்கும் பெரும் புயல் போலும்,
5. வறண்ட நிலத்தில் வெப்பம் போலும் இருக்கும். கார்மேக நிழல் வெயிலைத் தணிப்பது போல் அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடங்கச் செய்கின்றீர்; முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.
6. படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.
7. மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.
8. என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்;;தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார்.
9. அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம். "
10. ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்; எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல், மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.
11. நீந்துபவன் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபு தன் கைகளை விரிப்பான்; ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும் கைவினைச் செயல்களையும் விழச்; செய்வார்.
12. வானாளவ உயர்ந்துநிற்கும் உன் அரண்களை அவர் விழத் தள்ளி, தரைமட்டமாக்குவார்; அவை புழுதியோடு புழுதியாகி மண்ணோடு மண்ணாகும்.
Total 66 Chapters, Current Chapter 25 of Total Chapters 66
×

Alert

×

tamil Letters Keypad References