தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
எசேக்கியேல்

எசேக்கியேல் அதிகாரம் 29

எகிப்துக்கு எதிரான இறைவாக்கு 1 பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; * எசா 19:1-25; எரே 46:2- 26. 2 மானிடா! உன் முகத்தை எகிப்திய மன்னன் பார்வோனுக்கு நேராகத் திருப்பி அவனுக்கு எதிராகவும் அனைத்து எகிப்துக்கு எதிராகவும் இறைவாக்குரை. * எசா 19:1-25; எரே 46:2- 26. 3 அவனிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்து மன்னனாகிய பார்வோனே! நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்; உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ! “நைல் என்னுடையது; நானே அதை உருவாக்கிக்கொண்டேன்” என்கிறாய் நீ! * எசா 19:1-25; எரே 46:2- 26. 4 ஆனால், நான் உன் வாயில் தூண்டில்களை மாட்டி உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்; உன்னையும் உன் செதில்களில் ஒட்டியுள்ள மீன்களையும் உன் ஆறுகளினின்று வெளியே இழுத்துப் போடுவேன். * எசா 19:1-25; எரே 46:2- 26. 5 உன்னையும் உன் ஆறுகளின் மீன்களையும் பாலை நிலத்தில் விட்டுவிடுவேன்; உலர்ந்த தரையில் விழுந்து மடிவாய் நீ; உன்னைச் சேகரிக்கவோ பொறுக்கி எடுக்கவோ எவரும் இரார்; காட்டு விலங்குகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உன்னை இரையாய்த் தருவேன். * எசா 19:1-25; எரே 46:2- 26. 6 அப்போது எகிப்தில் வாழும் யாவரும் ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2- 26 ; எசா 36:6.. ] 7 இஸ்ரயேல் வீட்டாருக்கு நாணற் கோலாய் இருந்தாய் நீ; அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது நீ முறித்தாய்; அவர்கள் தோள்களைக் கிழித்தாய்; உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது நீ ஒடிந்தாய்; அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று. * எசா 19:1-25; எரே 46:2- 26. 8 எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன். * எசா 19:1-25; எரே 46:2- 26. 9 எகிப்து நாடு, பாழடைந்த பாலைநிலமாகும். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நைல் என்னுடையது, நானே அதை உருவாக்கிக் கொண்டேன்’ என்று உரைத்தாய். * எசா 19:1-25; எரே 46:2- 26. 10 எனவே, நான் உனக்கெதிராகவும் உன் ஆறுகளுக்கு எதிராகவும் இருக்கிறேன். மிக்தோல் முதல் சீனிம் வரை — கூசு எல்லைப் பகுதிவரை — எகிப்து நாட்டைப் பாழடைந்த பாலைநிலமாக மாற்றுவேன். * எசா 19:1-25; எரே 46:2- 26. 11 ஆள் நடமாட்டமோ கால்நடை நடமாட்டமோ அதில் இராது; நாற்பது ஆண்டுகள் யாரும் அங்கே குடியிரார். * எசா 19:1-25; எரே 46:2- 26. 12 அழிந்த நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை மாற்றுவேன். நாற்பது ஆண்டுகள் அதன் நகர்கள், அழிந்த நகர்களிடையே பாழடைந்து கிடக்கும். எகிப்தியரை மக்களினங்களிடையே சிதறடித்து, நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன். * எசா 19:1-25; எரே 46:2- 26. 13 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நாற்பதாண்டுகள் முடிந்தபின் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்ப்பேன். * எசா 19:1-25; எரே 46:2- 26. 14 எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன். * எசா 19:1-25; எரே 46:2- 26. 15 அங்கே எல்லா அரசுகளையும் விடச் சிறிய அரசாய் அது இருக்கும். மற்ற நாடுகளைவிட ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொள்ளாது. நாடுகளை ஒருபோதும் அது ஆட்சி செய்ய இயலாதவாறு அதை மிகவும் வலுவிழக்கச் செய்வேன். * எசா 19:1-25; எரே 46:2- 26. 16 இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்து ஒருபோதும் நம்பிக்கையின் அடிப்படையாய் இராமல், அதனிடம் அவர்கள் உதவி கேட்ட பாவத்தின் நினைவாக மட்டுமே இருக்கும். அப்போது ‘நானே தலைவராகிய ஆண்டவர்’ என அறிந்து கொள்வர். * எசா 19:1-25; எரே 46:2- 26. மாமன்னன் நெபுகத்னேசர் எகிப்தைக் கைப்பற்றுதல் 17 இருபத்து ஏழாம் ஆண்டு, முதல் மாதம், முதல் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; * எசா 19:1-25; எரே 46:2- 26. 18 “மானிடா! பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் தீர் நகரை முற்றுகையிடுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன; தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின. ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும் அவன் படைகளும் செய்த முற்றுகையில் அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று. * எசா 19:1-25; எரே 46:2- 26. 19 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக் கொடுக்கப் போகிறேன். அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான். அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும். * எசா 19:1-25; எரே 46:2- 26. 20 அவனுடைய முயற்சிகளுக்குக் கைம்மாறாய் நான் எகிப்தை அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், அவனும் அவன் படைகளும் அதை எனக்காகவே செய்தனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். * எசா 19:1-25; எரே 46:2- 26. 21 அந்நாளில் இஸ்ரயேல் வீட்டாருக்காக ஒரு கொம்பு முளைக்கச் செய்வேன். அவர்கள் நடுவில் உன்னைப் பேச வைப்பேன். அப்போது, ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர். * எசா 19:1-25; எரே 46:2- 26.
1. {எகிப்துக்கு எதிரான இறைவாக்கு} பத்தாம் ஆண்டின் பத்தாம் மாதத்தில் பன்னிரண்டாம் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 2. மானிடா! உன் முகத்தை எகிப்திய மன்னன் பார்வோனுக்கு நேராகத் திருப்பி அவனுக்கு எதிராகவும் அனைத்து எகிப்துக்கு எதிராகவும் இறைவாக்குரை. [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 3. அவனிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்து மன்னனாகிய பார்வோனே! நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்; உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ! “நைல் என்னுடையது; நானே அதை உருவாக்கிக்கொண்டேன்” என்கிறாய் நீ! [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 4. ஆனால், நான் உன் வாயில் தூண்டில்களை மாட்டி உன் ஆறுகளின் மீன்கள் யாவும் உன் செதில்களில் ஒட்டிக்கொள்ளச் செய்வேன்; உன்னையும் உன் செதில்களில் ஒட்டியுள்ள மீன்களையும் உன் ஆறுகளினின்று வெளியே இழுத்துப் போடுவேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 5. உன்னையும் உன் ஆறுகளின் மீன்களையும் பாலை நிலத்தில் விட்டுவிடுவேன்; உலர்ந்த தரையில் விழுந்து மடிவாய் நீ; உன்னைச் சேகரிக்கவோ பொறுக்கி எடுக்கவோ எவரும் இரார்; காட்டு விலங்குகளுக்கும் வானத்துப் பறவைகளுக்கும் உன்னை இரையாய்த் தருவேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 6. அப்போது எகிப்தில் வாழும் யாவரும் ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ; எசா 36:6.. ] 7. இஸ்ரயேல் வீட்டாருக்கு நாணற் கோலாய் இருந்தாய் நீ; அவர்கள் உன்னைப் பற்றிப் பிடித்தபோது நீ முறித்தாய்; அவர்கள் தோள்களைக் கிழித்தாய்; உன்மேல் அவர்கள் சாய்ந்தபோது நீ ஒடிந்தாய்; அவர்கள் இடுப்பு நொறுங்கிற்று. [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 8. எனவே தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் உனக்கு எதிராய் ஒரு வாளைக் கொண்டுவந்து உன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 9. எகிப்து நாடு, பாழடைந்த பாலைநிலமாகும். அப்போது ‘நானே ஆண்டவர்’ என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நைல் என்னுடையது, நானே அதை உருவாக்கிக் கொண்டேன்’ என்று உரைத்தாய். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 10. எனவே, நான் உனக்கெதிராகவும் உன் ஆறுகளுக்கு எதிராகவும் இருக்கிறேன். மிக்தோல் முதல் சீனிம் வரை — கூசு எல்லைப் பகுதிவரை — எகிப்து நாட்டைப் பாழடைந்த பாலைநிலமாக மாற்றுவேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 11. ஆள் நடமாட்டமோ கால்நடை நடமாட்டமோ அதில் இராது; நாற்பது ஆண்டுகள் யாரும் அங்கே குடியிரார். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 12. அழிந்த நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை மாற்றுவேன். நாற்பது ஆண்டுகள் அதன் நகர்கள், அழிந்த நகர்களிடையே பாழடைந்து கிடக்கும். எகிப்தியரை மக்களினங்களிடையே சிதறடித்து, நாடுகளிடையே கலந்தொழியச் செய்வேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 13. ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நாற்பதாண்டுகள் முடிந்தபின் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்ப்பேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 14. எகிப்தின் செல்வங்களை அவர்களுக்குத் திருப்பிக் கொடுப்பேன். அவர்களை அவர்களின் முன்னோர் நாடாகிய பத்ரோசுக்குக் கொண்டு சேர்ப்பேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 15. அங்கே எல்லா அரசுகளையும் விடச் சிறிய அரசாய் அது இருக்கும். மற்ற நாடுகளைவிட ஒருபோதும் தன்னை உயர்த்திக் கொள்ளாது. நாடுகளை ஒருபோதும் அது ஆட்சி செய்ய இயலாதவாறு அதை மிகவும் வலுவிழக்கச் செய்வேன். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 16. இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்து ஒருபோதும் நம்பிக்கையின் அடிப்படையாய் இராமல், அதனிடம் அவர்கள் உதவி கேட்ட பாவத்தின் நினைவாக மட்டுமே இருக்கும். அப்போது ‘நானே தலைவராகிய ஆண்டவர்’ என அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 17. {மாமன்னன் நெபுகத்னேசர் எகிப்தைக் கைப்பற்றுதல்} இருபத்து ஏழாம் ஆண்டு, முதல் மாதம், முதல் நாள், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது; [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 18. “மானிடா! பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் தீர் நகரை முற்றுகையிடுகையில் தன் படைகளுடன் வருந்தி முயன்றான்; தலைகள் யாவும் மொட்டையடிக்கப்பட்டன; தோள்கள் யாவும் புண்ணாய்ப் போயின. ஆயினும் தீர் நகருக்கு எதிராக அவனும் அவன் படைகளும் செய்த முற்றுகையில் அவர்களுக்கு யாதொரு கைம்மாறும் கிட்டாமற் போயிற்று. [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 19. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தை பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசருக்குக் கொடுக்கப் போகிறேன். அவன் அதன் செல்வத்தைக் கொள்ளையிட்டு வாரிக் கொண்டு போவான். அது அவன் படைகளுக்குக் கூலியாக அமையும். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 20. அவனுடைய முயற்சிகளுக்குக் கைம்மாறாய் நான் எகிப்தை அவனுக்குக் கொடுப்பேன். ஏனெனில், அவனும் அவன் படைகளும் அதை எனக்காகவே செய்தனர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ] 21. அந்நாளில் இஸ்ரயேல் வீட்டாருக்காக ஒரு கொம்பு முளைக்கச் செய்வேன். அவர்கள் நடுவில் உன்னைப் பேச வைப்பேன். அப்போது, ‘நானே ஆண்டவர்’ என அறிந்து கொள்வர். [* எசா 19:1-25; எரே 46:2-26. ]
  • எசேக்கியேல் அதிகாரம் 1  
  • எசேக்கியேல் அதிகாரம் 2  
  • எசேக்கியேல் அதிகாரம் 3  
  • எசேக்கியேல் அதிகாரம் 4  
  • எசேக்கியேல் அதிகாரம் 5  
  • எசேக்கியேல் அதிகாரம் 6  
  • எசேக்கியேல் அதிகாரம் 7  
  • எசேக்கியேல் அதிகாரம் 8  
  • எசேக்கியேல் அதிகாரம் 9  
  • எசேக்கியேல் அதிகாரம் 10  
  • எசேக்கியேல் அதிகாரம் 11  
  • எசேக்கியேல் அதிகாரம் 12  
  • எசேக்கியேல் அதிகாரம் 13  
  • எசேக்கியேல் அதிகாரம் 14  
  • எசேக்கியேல் அதிகாரம் 15  
  • எசேக்கியேல் அதிகாரம் 16  
  • எசேக்கியேல் அதிகாரம் 17  
  • எசேக்கியேல் அதிகாரம் 18  
  • எசேக்கியேல் அதிகாரம் 19  
  • எசேக்கியேல் அதிகாரம் 20  
  • எசேக்கியேல் அதிகாரம் 21  
  • எசேக்கியேல் அதிகாரம் 22  
  • எசேக்கியேல் அதிகாரம் 23  
  • எசேக்கியேல் அதிகாரம் 24  
  • எசேக்கியேல் அதிகாரம் 25  
  • எசேக்கியேல் அதிகாரம் 26  
  • எசேக்கியேல் அதிகாரம் 27  
  • எசேக்கியேல் அதிகாரம் 28  
  • எசேக்கியேல் அதிகாரம் 29  
  • எசேக்கியேல் அதிகாரம் 30  
  • எசேக்கியேல் அதிகாரம் 31  
  • எசேக்கியேல் அதிகாரம் 32  
  • எசேக்கியேல் அதிகாரம் 33  
  • எசேக்கியேல் அதிகாரம் 34  
  • எசேக்கியேல் அதிகாரம் 35  
  • எசேக்கியேல் அதிகாரம் 36  
  • எசேக்கியேல் அதிகாரம் 37  
  • எசேக்கியேல் அதிகாரம் 38  
  • எசேக்கியேல் அதிகாரம் 39  
  • எசேக்கியேல் அதிகாரம் 40  
  • எசேக்கியேல் அதிகாரம் 41  
  • எசேக்கியேல் அதிகாரம் 42  
  • எசேக்கியேல் அதிகாரம் 43  
  • எசேக்கியேல் அதிகாரம் 44  
  • எசேக்கியேல் அதிகாரம் 45  
  • எசேக்கியேல் அதிகாரம் 46  
  • எசேக்கியேல் அதிகாரம் 47  
  • எசேக்கியேல் அதிகாரம் 48  
×

Alert

×

Tamil Letters Keypad References