TOV
58. பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே ஜனங்கள் பிரயாசப்பட்டது விருதாவும், ஜாதிகள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையுமாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ERVTA
58. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், “பாபிலோனின் அகலமான வலிமையான சுவர் கீழேத்தள்ளப்படும். அவளது உயர்ந்த வாசல்கள் எரிக்கப்படும். பாபிலோன் ஜனங்கள் கடினமான வேலை செய்வார்கள். ஆனால் அது உதவாது. அவர்கள் நகரைக் காப்பாற்ற முயல்வதில் சோர்ந்து போவார்கள். ஆனால் அவர்கள் எரியும் நெருப்புக்கு எண்ணெய் போன்று ஆவார்கள்.”
IRVTA
58. பாபிலோனின் அகலமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான இடங்கள் நெருப்பால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே மக்கள் பிரயாசப்பட்டது வீணும், மக்கள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது நெருப்புக்கு இரையுமாகும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
ECTA
58. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; பாபிலோனின் அகன்ற மதில்கள் முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்; அதன் உயர்ந்த வாயில்கள் தீக்கிரையாகும்; மக்களின் உழைப்பு வீணாகும்; மக்களினங்களின் முயற்சிகள் தீயோடு தீயாகும்.
RCTA
58. "சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: பபிலோனின் மிகப் பரந்த கோட்டைச் சுவர் அடிப்படையிலிருந்தே தரைமட்டமாக்கப்படும்: அதன் உயர்ந்த கதவுகள் நெருப்புக்கு இரையாகும், மக்களின் முயற்சிகள் வீணாகும், மக்களினங்களின் உழைப்புகள் தீக்கிரையாகிப் பாழாகும்."
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN