TOV
2. சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத்தரித்தார்கள்; சொப்பனக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.
ERVTA
2. ஜனங்கள், தங்கள் சிறிய சிலைகளையும், மந்திரத்தையும் பயன்படுத்தி வருங்காலத்தை அறிந்துக்கொள்ள முயல்வார்கள். ஆனால் அவை பயனற்றதாகும். அந்த ஜனங்கள் தரிசனங்களைப் பார்த்து, அவர்கள் கனவுகளைப்பற்றி சொல்வார்கள். ஆனால் இது வீணானது. அவைகள் பொய்கள். எனவே ஜனங்கள் உதவிக்காக அங்கும் இங்கும் அலைந்து ஆடுகளைப்போல் கதறுவார்கள். ஆனால் அவர்களை வழிகாட்டி அழைத்துச் செல்ல மேய்ப்பன் எவரும் இருக்கமாட்டார்கள்.
IRVTA
2. சுரூபங்கள் பொய்யானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யை கண்டார்கள்; சொப்பனக்காரர்கள் வீணானதைச் சொல்லி, பயனில்லாததைச் சொல்லி தேற்றினார்கள்; ஆகையால் மக்கள் ஆடுகளைப்போல சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள்.
ECTA
2. குலதெய்வங்களை வீணானதையே கூறுகின்றன; குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்; அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்; வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்; ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்; ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.
RCTA
2. குலதெய்வங்கள் சொல்வது வீண், குறிசொல்பவர்கள் பொய்களையே பார்த்துச் சொல்லுகிறார்கள்; கனவு காண்கிறவர்கள் ஏமாற்றுக் கனவுகளையே காண்கின்றனர், அவர்களுடைய ஆறுதல் மொழிகள் வெறும் சொற்கள் தான். ஆதலால் மக்கள் ஆடுகளைப் போல் அலைகின்றனர், ஆயனில்லாததால் துன்புறுகின்றனர்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN