TOV
16. அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
ERVTA
16. உனது தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவரைத் துதி. இல்லையெனில் அவர் இருளைக் கொண்டுவருவார். இருளான குன்றுகளின்மேல் விழுமுன், அவரைத் துதி. இல்லாவிட்டால் யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் ஒளிக்காக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால், கர்த்தர் அடர்த்தியான இருளைக் கொண்டு வருவார். கர்த்தர் ஒளியை மிக அடர்த்தியான இருளாக மாற்றிவிடுவார்.
IRVTA
16. அவர் அந்தகாரத்தை வரச்செய்வதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் தடுமாறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்திற்குக் காத்திருக்கும்போது, அவர் அதை இருளும் காரிருளுமாக மாறச்செய்வதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
ECTA
16. உங்கள் கடவுளாகிய ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இருள்படரச் செய்யுமுன்பும், உங்கள் பாதங்கள் இருளடைந்த மலைகளில் இடறுமுன்பும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள். நீங்கள் ஒளியை எதிர்பார்த்து நிற்கும் போதே இருளின் நிழல்கள் சூழச்செய்வார்; இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.
RCTA
16. உங்களை இருள் மூடிக்கொள்வதற்கு முன்னும், உங்கள் கால்கள் மலைகளின் இருளில் இடறு முன்னரும், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மகிமைப் படுத்துங்கள்; நீங்கள் ஒளியைத் தேடிப் பார்ப்பீர்கள்; அவரோ அதனை உங்களுக்கு மந்தாரமாகவும் காரிருளாகவும் மாற்றி விடுவார்.
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN