தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சகரியா
1. மீண்டும் நான் கண்களை உயர்த்திய போது, இதோ, பறக்கின்ற ஓலைச்சுருள் ஒன்றைக் கண்டேன்.
2. அந்தத் தூதர், "என்ன பார்க்கின்றாய்?" என்று என்னைக் கேட்க, நான், "பறக்கும் ஓலைச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்; அதன் நீளம் இருபது முழமும், அகலம் பத்து முழமும் உள்ளது" என்றேன்.
3. அதற்கு அவர் என்னிடம், "நாடெங்கும் உலவி வரும் சாபனையே இது; ஏனெனில் கள்வனெவனும் அதில் எழுதப்பட்டுள்ளபடி இங்கிருந்து விரட்டப்படுவான்; பொய்யாணை இடுகிறவனெவனும் அதில் எழுதப்பட்டுள்ளபடி இங்கிருந்து விரட்டப்படுவான்.
4. நாம் அதனை வெளியில் அனுப்புவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; அது கள்வன் வீட்டிலும், நமது திருப்பெயரால் பொய்யாணை செய்கிறவன் வீட்டிலும் நுழைந்து, அங்கே தங்கி, மரங்கள், கற்கள் இவற்றோடு அவ்வீட்டையும் அழித்து விடும்" என்றார்.
5. என்னிடம் பேசிய தூதர் வெளியே வந்து, என்னிடம், "உன் கண்களை உயர்த்திப் பார், அங்கே போவது என்ன?" என்று கேட்டார்.
6. என்ன அது?" என்று நான் திரும்பிக்கேட்டேன். அவர், "அது வெளியேறிப்போகும் மரக்கால்" என்றார். தொடர்ந்து அவரே, "அதுதான் உலகெங்கும் பரவியிருக்கும் அக்கிரமம்" என்று சொன்னார்.
7. இதோ, அதனுடைய ஈயமூடி திறக்கப்பட்டது; மரக்காலுக்குள் பெண்ணொருத்தி உட்கார்ந்திருப்பதைக் கண்டேன்!
8. அப்போது அந்தத் தூதர், "இவளே அந்த அக்கிரமம்" என்றார்; உடனே, அவளை அந்த மரக்காலுக்குள் திணித்து அதன் வாயைப் பளுவான ஈயமூடியால் அடைத்தார்.
9. இப்போது என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்; இதோ, இரண்டு பெண்கள் வெளிப்பட்டார்கள்! நாரையின் இறக்கைகள் போல் அவர்களுக்கும் இறக்கைகள் இருந்தன; அவற்றில் காற்று நிரம்பியிருந்தது; அவர்கள் அந்த மரக்காலை விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் தூக்கிக் கொண்டு பறந்தனர்.
10. என்னிடம் பேசிய தூதரைப் பார்த்து, "மரக்காலை எங்கே தூக்கிக்கொண்டு போகிறார்கள்?" என்று கேட்டேன்.
11. அவர், "சென்னார் நாட்டுக்குக் கொண்டுபோகிறார்கள்; ஆங்கே அதற்கொரு கோயில் கட்டப்போகிறார்கள்; கட்டியானதும், மரக்காலை அதற்குரிய மேடையில் வைப்பார்கள்" என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 14 Chapters, Current Chapter 5 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
சகரியா 5:6
1. மீண்டும் நான் கண்களை உயர்த்திய போது, இதோ, பறக்கின்ற ஓலைச்சுருள் ஒன்றைக் கண்டேன்.
2. அந்தத் தூதர், "என்ன பார்க்கின்றாய்?" என்று என்னைக் கேட்க, நான், "பறக்கும் ஓலைச்சுருள் ஒன்றைக் காண்கிறேன்; அதன் நீளம் இருபது முழமும், அகலம் பத்து முழமும் உள்ளது" என்றேன்.
3. அதற்கு அவர் என்னிடம், "நாடெங்கும் உலவி வரும் சாபனையே இது; ஏனெனில் கள்வனெவனும் அதில் எழுதப்பட்டுள்ளபடி இங்கிருந்து விரட்டப்படுவான்; பொய்யாணை இடுகிறவனெவனும் அதில் எழுதப்பட்டுள்ளபடி இங்கிருந்து விரட்டப்படுவான்.
4. நாம் அதனை வெளியில் அனுப்புவோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; அது கள்வன் வீட்டிலும், நமது திருப்பெயரால் பொய்யாணை செய்கிறவன் வீட்டிலும் நுழைந்து, அங்கே தங்கி, மரங்கள், கற்கள் இவற்றோடு அவ்வீட்டையும் அழித்து விடும்" என்றார்.
5. என்னிடம் பேசிய தூதர் வெளியே வந்து, என்னிடம், "உன் கண்களை உயர்த்திப் பார், அங்கே போவது என்ன?" என்று கேட்டார்.
6. என்ன அது?" என்று நான் திரும்பிக்கேட்டேன். அவர், "அது வெளியேறிப்போகும் மரக்கால்" என்றார். தொடர்ந்து அவரே, "அதுதான் உலகெங்கும் பரவியிருக்கும் அக்கிரமம்" என்று சொன்னார்.
7. இதோ, அதனுடைய ஈயமூடி திறக்கப்பட்டது; மரக்காலுக்குள் பெண்ணொருத்தி உட்கார்ந்திருப்பதைக் கண்டேன்!
8. அப்போது அந்தத் தூதர், "இவளே அந்த அக்கிரமம்" என்றார்; உடனே, அவளை அந்த மரக்காலுக்குள் திணித்து அதன் வாயைப் பளுவான ஈயமூடியால் அடைத்தார்.
9. இப்போது என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்; இதோ, இரண்டு பெண்கள் வெளிப்பட்டார்கள்! நாரையின் இறக்கைகள் போல் அவர்களுக்கும் இறக்கைகள் இருந்தன; அவற்றில் காற்று நிரம்பியிருந்தது; அவர்கள் அந்த மரக்காலை விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் தூக்கிக் கொண்டு பறந்தனர்.
10. என்னிடம் பேசிய தூதரைப் பார்த்து, "மரக்காலை எங்கே தூக்கிக்கொண்டு போகிறார்கள்?" என்று கேட்டேன்.
11. அவர், "சென்னார் நாட்டுக்குக் கொண்டுபோகிறார்கள்; ஆங்கே அதற்கொரு கோயில் கட்டப்போகிறார்கள்; கட்டியானதும், மரக்காலை அதற்குரிய மேடையில் வைப்பார்கள்" என்றார்.
Total 14 Chapters, Current Chapter 5 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

tamil Letters Keypad References