தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சகரியா
1. ஓர் இறைவாக்கு. இஸ்ராயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: விண்ணை விரித்தவரும், மண்ணுலகை நாட்டியவரும், மனிதனின் ஆவியை அவனுக்குள் கொடுத்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:
2. இதோ, சுற்றியுள்ள மக்களினங்களுக்கெல்லாம் போதையேற்றும் மதுக்கிண்ணமாக நாம் யெருசலேமைச் செய்யப்போகிறோம்; யெருசலேமுக்கு எதிராக முற்றுகையிடப்படும் போது அக்கிண்ணம் யூதாவுக்குக் கொடுக்கப்படும்.
3. அந்நாளில் மக்களினங்களுக்கெல்லாம் யெருசலேமை ஒரு பளுவான கல்லாக்குவோம்; அதைத் தூக்குகிறவர் யாவரும் காயமடைவர், உலகத்தின் மக்களினங்கள் அனைத்தும் அதற்கெதிராய்த் திரண்டு வருவர்.
4. அந்நாளில், குதிரைகளுக்கெல்லாம் திகிலையும், அவற்றின் மேல் வரும் வீரர்களுக்குப் பைத்தியத்தையும் உண்டாக்குவோம். மக்களினங்களின் குதிரை ஒவ்வொன்றையும் குருடாக்குவோம்; ஆனால், யூதாவின் வீட்டாரைக் கண்ணோக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
5. அப்போது யூதாவின் குலங்கள் தங்களுக்குள், 'யெருசலேம் மக்களின் வலிமை அவர்களுடைய கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரில் தான் இருக்கிறது' என்று சொல்லிக் கொள்வார்கள்.
6. அந்நாளில் யூதாவின் குலங்களை விறகுகள் நடுவில் வைத்த தீயைப் போலவும், வைக்கோல் கட்டுகளுக்குள் இட்ட கொள்ளியைப் போலவும் ஆக்குவோம்; சூழ்ந்துள்ள மக்களினங்கள் யாவற்றையும் அவர்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் விழுங்குவார்கள்; யெருசலேம் மக்களோ முன்னிருந்த இடத்திலேயே- யெருசலேமிலேயே குடியிருப்பார்கள்.
7. தாவீதின் வீட்டாருடைய பெருமையும், யெருசலேம் மக்களுடைய பெருமையும் யூதாவின் பெருமையை விட மிகுந்து விடாமலிருக்க, ஆண்டவர் முதலில் யூதாவின் கூடாரங்களுக்கே வெற்றி தருவார்.
8. அந்நாளில், யெருசலேமில் வாழும் மக்களை ஆண்டவர் பாதுகாப்பார்; அப்போது அவர்களுள் நிற்க வலுவில்லாதவன் கூடத் தாவீதைப் போல் இருப்பான்; தாவீதின் வீட்டார் கடவுளைப் போலும், அவர்கள் முன் செல்லும் ஆண்டவரின் தூதரைப் போலும் இருப்பார்கள்.
9. அந்நாளில் யெருசலேமுக்கு எதிராக வரும் மக்களினங்கள் அனைத்தையும் அழிக்க வழி செய்வோம்.
10. ஆனால் நாம் தாவீதின் வீட்டார் மேலும், யெருசலேம் மக்கள் மேலும் இரக்க உள்ளத்தையும், மன்றாடும் மனநிலையையும் பொழிவோம்; அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனை நோக்குவர்; நோக்கி, ஒருவன் தன் ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து விட்டுப் புலம்புவது போலும், இறந்து போன தன் தலைப் பேற்றுக்காக ஒருவன் கதறியழுவது போலும் அவனுக்காக அழுவார்கள்.
11. அந்நாளில் யெருசலேமில் எழும்பும் புலம்பல் மெகித்தோ சமவெளியில் ஆதாதிரம்மோன் பட்டணத்தில் எழுந்த புலம்பலை போலப் பெரிதாயிருக்கும்.
12. குடும்பம் குடும்பமாய் நாடெங்கும் அழுது புலம்புவர்; தாவீதின் வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் மறுபுறமும்,
13. நாத்தான் வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், லேவி வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், செமேயி கோத்திரங்கள் ஒருபக்கமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு பக்கமுமாய்ப் புலம்புவார்கள்;
14. மற்றுமுள்ள கோத்திரங்களின் எல்லாக் குடும்பங்களும் அவற்றிலுள்ள பெண்களும் தனித்தனியே புலம்பியழுவார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 14 Chapters, Current Chapter 12 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
சகரியா 12
1. ஓர் இறைவாக்கு. இஸ்ராயேலைக் குறித்து அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: விண்ணை விரித்தவரும், மண்ணுலகை நாட்டியவரும், மனிதனின் ஆவியை அவனுக்குள் கொடுத்தவருமான ஆண்டவர் கூறுவது இதுவே:
2. இதோ, சுற்றியுள்ள மக்களினங்களுக்கெல்லாம் போதையேற்றும் மதுக்கிண்ணமாக நாம் யெருசலேமைச் செய்யப்போகிறோம்; யெருசலேமுக்கு எதிராக முற்றுகையிடப்படும் போது அக்கிண்ணம் யூதாவுக்குக் கொடுக்கப்படும்.
3. அந்நாளில் மக்களினங்களுக்கெல்லாம் யெருசலேமை ஒரு பளுவான கல்லாக்குவோம்; அதைத் தூக்குகிறவர் யாவரும் காயமடைவர், உலகத்தின் மக்களினங்கள் அனைத்தும் அதற்கெதிராய்த் திரண்டு வருவர்.
4. அந்நாளில், குதிரைகளுக்கெல்லாம் திகிலையும், அவற்றின் மேல் வரும் வீரர்களுக்குப் பைத்தியத்தையும் உண்டாக்குவோம். மக்களினங்களின் குதிரை ஒவ்வொன்றையும் குருடாக்குவோம்; ஆனால், யூதாவின் வீட்டாரைக் கண்ணோக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
5. அப்போது யூதாவின் குலங்கள் தங்களுக்குள், 'யெருசலேம் மக்களின் வலிமை அவர்களுடைய கடவுளாகிய சேனைகளின் ஆண்டவரில் தான் இருக்கிறது' என்று சொல்லிக் கொள்வார்கள்.
6. அந்நாளில் யூதாவின் குலங்களை விறகுகள் நடுவில் வைத்த தீயைப் போலவும், வைக்கோல் கட்டுகளுக்குள் இட்ட கொள்ளியைப் போலவும் ஆக்குவோம்; சூழ்ந்துள்ள மக்களினங்கள் யாவற்றையும் அவர்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் விழுங்குவார்கள்; யெருசலேம் மக்களோ முன்னிருந்த இடத்திலேயே- யெருசலேமிலேயே குடியிருப்பார்கள்.
7. தாவீதின் வீட்டாருடைய பெருமையும், யெருசலேம் மக்களுடைய பெருமையும் யூதாவின் பெருமையை விட மிகுந்து விடாமலிருக்க, ஆண்டவர் முதலில் யூதாவின் கூடாரங்களுக்கே வெற்றி தருவார்.
8. அந்நாளில், யெருசலேமில் வாழும் மக்களை ஆண்டவர் பாதுகாப்பார்; அப்போது அவர்களுள் நிற்க வலுவில்லாதவன் கூடத் தாவீதைப் போல் இருப்பான்; தாவீதின் வீட்டார் கடவுளைப் போலும், அவர்கள் முன் செல்லும் ஆண்டவரின் தூதரைப் போலும் இருப்பார்கள்.
9. அந்நாளில் யெருசலேமுக்கு எதிராக வரும் மக்களினங்கள் அனைத்தையும் அழிக்க வழி செய்வோம்.
10. ஆனால் நாம் தாவீதின் வீட்டார் மேலும், யெருசலேம் மக்கள் மேலும் இரக்க உள்ளத்தையும், மன்றாடும் மனநிலையையும் பொழிவோம்; அப்போது அவர்கள் தாங்கள் ஊடுருவக் குத்தியவனை நோக்குவர்; நோக்கி, ஒருவன் தன் ஒரே பிள்ளையைப் பறிகொடுத்து விட்டுப் புலம்புவது போலும், இறந்து போன தன் தலைப் பேற்றுக்காக ஒருவன் கதறியழுவது போலும் அவனுக்காக அழுவார்கள்.
11. அந்நாளில் யெருசலேமில் எழும்பும் புலம்பல் மெகித்தோ சமவெளியில் ஆதாதிரம்மோன் பட்டணத்தில் எழுந்த புலம்பலை போலப் பெரிதாயிருக்கும்.
12. குடும்பம் குடும்பமாய் நாடெங்கும் அழுது புலம்புவர்; தாவீதின் வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் மறுபுறமும்,
13. நாத்தான் வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், லேவி வீட்டாரின் குடும்பங்கள் ஒருபுறமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு புறமும், செமேயி கோத்திரங்கள் ஒருபக்கமும், அவர்களுடைய பெண்கள் இன்னொரு பக்கமுமாய்ப் புலம்புவார்கள்;
14. மற்றுமுள்ள கோத்திரங்களின் எல்லாக் குடும்பங்களும் அவற்றிலுள்ள பெண்களும் தனித்தனியே புலம்பியழுவார்கள்.
Total 14 Chapters, Current Chapter 12 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

tamil Letters Keypad References