தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ரோமர்
1. 'அப்படியானால், மற்றவர்களைவிட யூதனுக்குக் கிடைத்த நன்மை என்ன'? விருத்தசேதனத்தால் பயன் என்ன? எவ்வகையிலும் பெரிதே.
2. முதலாவது கடவுளின் திருமொழி அவர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.
3. சரி, ஆனால், சிலர் அத்திருமொழியில் பற்றுறுதி கொள்ளவில்லையே; அவ்வுறுதியின்மையால் கடவுளுடைய சொல்லுறுதி வெறுமையாகிவிடுமோ?
4. ஒருக்காலுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர், கடவுளோ, உண்மை உள்ளவர் என்பது வெளியாகவேண்டும். ஏனெனில், 'உமது சொல்லில் நீர் குற்றமற்றவராய் விளங்குவீர், நீர் தீர்ப்பிடப்படும்போது வெற்றி பெறுவீர்'. என எழுதியுள்ளதன்றோ?
5. நம்முடைய அநீதி கடவுளுடைய நேர்மையை விளங்கச் செய்யுமாயின், நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தொழுந்து தண்டித்தால், அவர் அநீதர் என்போமோ ? - இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன் - ஒருகாலுமில்லை.
6. கடவுள் அநீதர் என்போமாயீன் எப்படி அவர் உலகத்திற்குத் தீர்ப்பிடக்கூடும்?
7. என்னுடைய பொய்ம்மை கடவுளின் உண்மையைத் துலங்கச் செய்து, அவரது மகிமையை அதிகரிக்கிறதென்றால் ஏன் நான் இன்னும் பாவி எனத் தண்டனைத் தீர்ப்புப் பெறவேண்டும்?
8. அப்படியானால், 'நன்மை விளையுமாறு தீமையைச் செய்வோம்' என்று சொல்லாலாமே. நான் அவ்வாறு கூறுவதாகச் சிலர் என்மீது வீண் பழி சுமத்துகின்றனர். இவர்கள் தண்டனைத் தீர்ப்புப் பெறுவது நீதியே.
9. அப்படியானால் மற்றவர்களைவிட யூதர்கள் தாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்தின் பிடியிலுள்ளதாக ஏற்கெனவே எண்பித்தாயிற்று.
10. அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: 'இறைவனுக்கு ஏற்புடையவனே இல்லை, ஒருவன் கூட இல்லை:
11. உணர்வுள்ளவன் ஒருவனுமில்லை, கடவுளைத் தேடுபவன் எவனுமில்லை.
12. எல்லாரும் நெறி பிறழ்ந்தனர். ஒருங்கே கெட்டுப்போயினர்; நன்மை செய்பவன் எவனுமில்லை, ஒருவன் கூட இல்லை.
13. அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி, அவர்களது நாக்கு வஞ்சனையே பேசிற்று. அவர்கள் உதட்டில் பாம்பின் நஞ்சுள்ளது.
14. வாயில் சாபமும் கசப்பும் நிரம்பியுள்ளது,
15. இரத்தம் சிந்துவதென்றால் அவர்கள் கால்கள் விரைகின்றன;
16. அவர்கள் கால்கள் படும் இடத்தில் அழிவும் துயருமே உண்டு,
17. அமைதியின் நெறியோ அவர்களுக்குத் தெரியவில்லை,
18. அவர்கள் மனத்தில் கடவுள் அச்சம் என்பதில்லை '.
19. திருச்சட்டம் சொல்வதெல்லாம், அதற்கு உட்பட்டவர்களுக்கே பொருந்தும் என்று நமக்குத் தெரியும். சாக்குச் சொல்லாமல் அனைவருடைய வாயையும் அடைக்கவும், உலகம் முழுவதையும் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கவுமே திருச்சட்டம் இருக்கிறது.
20. ஏனெனில், திருச்சட்டம் விதித்திருப்பதைச் செய்வதால் மட்டும், எம்மனிதனும் இறைவன் முன்னிலையில் ஏற்புடையவன் ஆவதில்லை. ஏனெனில் சட்டத்தின் வழியாக உண்டாவது பாவத்தை உணர்த்தும் அறிவே.
21. இப்பொழுதோ கடவுளின் திருவருட் செயல்முறை திருச்சட்டத்தின் சார்பின்றியே வெளியாக்கப்பட்டுள்ளது; அச்செயல்முறையையே திருச்சட்டமும் இறைவாக்கினரும் முன்னறிவித்தனர்.
22. இத்திருவருட் செயல்முறை இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் வழியாய்ச் செயலாற்றுவதாகும்., விசுவசிக்கும் அனைவருக்காகவுமே இது செயலாற்றுகிறது. இதில் இன வேறுபாடே இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்தனர்.
23. எல்லாருமே கடவுளது மாட்சிமையின் சாயலின்றி உள்ளனர்.
24. ஆனால் இறைவன் அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகிறார்கள்; கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய விடுதலைச் செயலின் வாயிலாய் அங்ஙனம் ஆக்கப்படுகிறார்கள்.
25. விசுவாசத்தின் வழியாய்ச் செயல்படும் பரிகாரச்சாதனமாக அவரைக் கடவுள் இரத்தப் பலியாக்கினார். கடந்த காலத்தில் தம்முடைய திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பிய கடவுள் பொறுமையாய் இருந்து, மனிதர் செய்த பாவங்களைத் தண்டிக்காமல் விட்டார்.
26. இக்காலத்திலோ, அத்திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பி, அவர் அருள் மிக்கவராகவும், இயேசுவில் விசுவாசம் கொள்பவன் தமக்கு ஏற்புடையவன் ஆகும்படி அருள் அளிப்பவராகவும் விளங்குகிறார்.,
27. அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா ? இல்லை; விசுவாசத்தின் அடிப்படையில் என்க.
28. ஏனெனில், திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே மனிதன் விசுவாசத்தினாலே இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப்படுகின்றான் என்பது என் கருத்து.
29. கடவுள் யூதர்களுக்கு மட்டுமே கடவுளா? புறவினத்தாருக்கும் கடவுள் அல்லரா? ஆம், புறவினத்தாருக்கும் அவர் கடவுளே,
30. ஏனெனில், விருத்தசேதனம் பெற்றவர்களை விசுவாசித்தினாலும், விருத்த சேதனம் பெறாதவர்களை விசுவாசத்தின் வழியாகவும், தமக்கு ஏற்புடையவர்களாக்கும் கடவுள் ஒருவரே.
31. அப்படியானால், விசுவாசத்தின் வழியாய்த் திருச்சட்டத்தை வெறுமை ஆக்குகிறோமோ? ஒருகாலும் இல்லை. அதற்கு மாறாக, திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 3 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11
ரோமர் 3:29
1. 'அப்படியானால், மற்றவர்களைவிட யூதனுக்குக் கிடைத்த நன்மை என்ன'? விருத்தசேதனத்தால் பயன் என்ன? எவ்வகையிலும் பெரிதே.
2. முதலாவது கடவுளின் திருமொழி அவர்களிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.
3. சரி, ஆனால், சிலர் அத்திருமொழியில் பற்றுறுதி கொள்ளவில்லையே; அவ்வுறுதியின்மையால் கடவுளுடைய சொல்லுறுதி வெறுமையாகிவிடுமோ?
4. ஒருக்காலுமில்லை. மனிதர் எல்லாரும் பொய்யர், கடவுளோ, உண்மை உள்ளவர் என்பது வெளியாகவேண்டும். ஏனெனில், 'உமது சொல்லில் நீர் குற்றமற்றவராய் விளங்குவீர், நீர் தீர்ப்பிடப்படும்போது வெற்றி பெறுவீர்'. என எழுதியுள்ளதன்றோ?
5. நம்முடைய அநீதி கடவுளுடைய நேர்மையை விளங்கச் செய்யுமாயின், நாம் என்ன சொல்வோம்? கடவுள் சினந்தொழுந்து தண்டித்தால், அவர் அநீதர் என்போமோ ? - இதை நான் மனிதர் பேசும் முறையில் சொல்லுகிறேன் - ஒருகாலுமில்லை.
6. கடவுள் அநீதர் என்போமாயீன் எப்படி அவர் உலகத்திற்குத் தீர்ப்பிடக்கூடும்?
7. என்னுடைய பொய்ம்மை கடவுளின் உண்மையைத் துலங்கச் செய்து, அவரது மகிமையை அதிகரிக்கிறதென்றால் ஏன் நான் இன்னும் பாவி எனத் தண்டனைத் தீர்ப்புப் பெறவேண்டும்?
8. அப்படியானால், 'நன்மை விளையுமாறு தீமையைச் செய்வோம்' என்று சொல்லாலாமே. நான் அவ்வாறு கூறுவதாகச் சிலர் என்மீது வீண் பழி சுமத்துகின்றனர். இவர்கள் தண்டனைத் தீர்ப்புப் பெறுவது நீதியே.
9. அப்படியானால் மற்றவர்களைவிட யூதர்கள் தாம் மேலானவர்களா? இல்லவே இல்லை. ஏனெனில் யூதர், கிரேக்கர் யாவரும் பாவத்தின் பிடியிலுள்ளதாக ஏற்கெனவே எண்பித்தாயிற்று.
10. அவ்வாறே மறைநூலிலும் எழுதியுள்ளது: 'இறைவனுக்கு ஏற்புடையவனே இல்லை, ஒருவன் கூட இல்லை:
11. உணர்வுள்ளவன் ஒருவனுமில்லை, கடவுளைத் தேடுபவன் எவனுமில்லை.
12. எல்லாரும் நெறி பிறழ்ந்தனர். ஒருங்கே கெட்டுப்போயினர்; நன்மை செய்பவன் எவனுமில்லை, ஒருவன் கூட இல்லை.
13. அவர்களது தொண்டை திறந்த பிணக்குழி, அவர்களது நாக்கு வஞ்சனையே பேசிற்று. அவர்கள் உதட்டில் பாம்பின் நஞ்சுள்ளது.
14. வாயில் சாபமும் கசப்பும் நிரம்பியுள்ளது,
15. இரத்தம் சிந்துவதென்றால் அவர்கள் கால்கள் விரைகின்றன;
16. அவர்கள் கால்கள் படும் இடத்தில் அழிவும் துயருமே உண்டு,
17. அமைதியின் நெறியோ அவர்களுக்குத் தெரியவில்லை,
18. அவர்கள் மனத்தில் கடவுள் அச்சம் என்பதில்லை '.
19. திருச்சட்டம் சொல்வதெல்லாம், அதற்கு உட்பட்டவர்களுக்கே பொருந்தும் என்று நமக்குத் தெரியும். சாக்குச் சொல்லாமல் அனைவருடைய வாயையும் அடைக்கவும், உலகம் முழுவதையும் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கவுமே திருச்சட்டம் இருக்கிறது.
20. ஏனெனில், திருச்சட்டம் விதித்திருப்பதைச் செய்வதால் மட்டும், எம்மனிதனும் இறைவன் முன்னிலையில் ஏற்புடையவன் ஆவதில்லை. ஏனெனில் சட்டத்தின் வழியாக உண்டாவது பாவத்தை உணர்த்தும் அறிவே.
21. இப்பொழுதோ கடவுளின் திருவருட் செயல்முறை திருச்சட்டத்தின் சார்பின்றியே வெளியாக்கப்பட்டுள்ளது; அச்செயல்முறையையே திருச்சட்டமும் இறைவாக்கினரும் முன்னறிவித்தனர்.
22. இத்திருவருட் செயல்முறை இயேசு கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் வழியாய்ச் செயலாற்றுவதாகும்., விசுவசிக்கும் அனைவருக்காகவுமே இது செயலாற்றுகிறது. இதில் இன வேறுபாடே இல்லை. ஏனெனில், எல்லாருமே பாவம் செய்தனர்.
23. எல்லாருமே கடவுளது மாட்சிமையின் சாயலின்றி உள்ளனர்.
24. ஆனால் இறைவன் அருளால் இலவசமாய் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுகிறார்கள்; கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய விடுதலைச் செயலின் வாயிலாய் அங்ஙனம் ஆக்கப்படுகிறார்கள்.
25. விசுவாசத்தின் வழியாய்ச் செயல்படும் பரிகாரச்சாதனமாக அவரைக் கடவுள் இரத்தப் பலியாக்கினார். கடந்த காலத்தில் தம்முடைய திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பிய கடவுள் பொறுமையாய் இருந்து, மனிதர் செய்த பாவங்களைத் தண்டிக்காமல் விட்டார்.
26. இக்காலத்திலோ, அத்திருவருட் செயல்முறையைக் காட்ட விரும்பி, அவர் அருள் மிக்கவராகவும், இயேசுவில் விசுவாசம் கொள்பவன் தமக்கு ஏற்புடையவன் ஆகும்படி அருள் அளிப்பவராகவும் விளங்குகிறார்.,
27. அப்படியிருக்க, பெருமை பாராட்ட இடமேது? இடமில்லை. எந்த அடிப்படையில் இடமில்லை? செயல்களின் அடிப்படையிலா ? இல்லை; விசுவாசத்தின் அடிப்படையில் என்க.
28. ஏனெனில், திருச்சட்டம் விதித்திருக்கும் செயல்களின்றியே மனிதன் விசுவாசத்தினாலே இறைவனுக்கு ஏற்புடையவனாக்கப்படுகின்றான் என்பது என் கருத்து.
29. கடவுள் யூதர்களுக்கு மட்டுமே கடவுளா? புறவினத்தாருக்கும் கடவுள் அல்லரா? ஆம், புறவினத்தாருக்கும் அவர் கடவுளே,
30. ஏனெனில், விருத்தசேதனம் பெற்றவர்களை விசுவாசித்தினாலும், விருத்த சேதனம் பெறாதவர்களை விசுவாசத்தின் வழியாகவும், தமக்கு ஏற்புடையவர்களாக்கும் கடவுள் ஒருவரே.
31. அப்படியானால், விசுவாசத்தின் வழியாய்த் திருச்சட்டத்தை வெறுமை ஆக்குகிறோமோ? ஒருகாலும் இல்லை. அதற்கு மாறாக, திருச்சட்டத்தை நிலைநாட்டுகிறோம்.
Total 16 Chapters, Current Chapter 3 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11
×

Alert

×

tamil Letters Keypad References