தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
1. பின்னர், செம்மறியானவர் ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்போது நான்கு உயிர்களுள் ஒன்று, 'வா' என இடிமுழக்கம்போன்ற குரலில் சொன்னதைக் கேட்டேன்.
2. என் கண்முன் ஒரு வெள்ளைக் குதிரை தோன்றிற்று. அதன்மேல் ஏறியிருந்தவனுடைய கையில் வில் ஒன்று இருந்தது. அவனுக்கு வெற்றிவாகை சூட்டப்பட்டது. வெற்றி வீரனான அவன் வெற்றிமேல் வெற்றி கொள்ளச் சென்றான்.
3. செம்மறியானவர் இரண்டாவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் இரண்டாவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன்.
4. அப்போது செந்நிறமான மற்றொரு குதிரை வெளிவந்தது. அதன்மேல் ஏறியிருந்தவனுக்கு, உலகில் அமைதியைக் குலைக்கவும், மனிதர் ஒருவரை ஒருவர் கொல்லும்படி செய்யவும் அலுவல் அளிக்கப்பட்டது. பெரியதொரு வாளும் அவனிடம் கொடுக்கப்பட்டது.
5. அவர் மூன்றாவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் மூன்றாவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். என் கண்முன் கருநிறக் குதிரை ஒன்று தோன்றிற்று. அதன்மீது ஏறியிருந்தவனுடைய கையில் துலாக்கோல் ஒன்று இருந்தது.
6. "ஒருநாள் கூலிக்குக் கோதுமை அரைப்படி, வாற்கோதுமை ஒன்றரைப்படி என்றாகட்டும். ஆனால் எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் சேதப்படுத்த வேண்டாம்" என்ற குரல் நான்கு உயிர்களின் நடுவினின்று எழக்கேட்டேன்.
7. நான்காவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் நான்காவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். வெளிறிய குதிரை ஒன்று என் கண்முன் தோன்றிற்று.
8. அதன்மீது ஏறியிருந்தவன் பெயர் சாவு. பாதாளம் அவனைப் பின் தொடர்ந்தது. வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மண்மீதுள்ள விலங்குகளாலும் மண்ணுலகில் கால் பாகத்தை வதைத்தொழிக்க அவர்களுக்கு வல்லமை அளிக்கப்பட்டது.
9. ஐந்தாவது முத்திரையை உடைத்தபோது, கடவுளுடைய வார்த்தையை அறிவித்துத் தாங்கள் கொடுத்த சாட்சியத்திற்காகக் கொலையுண்டவர்களின் ஆன்மாக்களைப் பீடத்தின் கீழே கண்டேன்.
10. அவர்கள் உரத்த குரலில் பரிசுத்தரும் உண்மையுமான ஆண்டவரே, எவ்வளவு காலம் நீதி வழங்காமல் இருப்பீர்? எங்கள் இரத்தத்தைச் சிந்திய மண்ணுலகத்தாரை எவ்வளவு காலம் பழிவாங்காமல் இருப்பீர்?" என்று கத்தினர்.
11. பின்பு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்ணாடை அளிக்கப்பட்டது. "இன்னும் சிறிது நேரம் பொறுத்திருங்கள். உங்களைப்போலவே கொல்லப்பட வேண்டிய உங்கள் உடன் ஊழியரான சகோதரர்களின் தொகை நிறைவு பெற வேண்டும்" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
12. ஆறாவது முத்திரையை உடைத்தபோது, நான் கண்ட காட்சியில் பெரியதொரு நிலநடுக்கம் உண்டாயிற்று. கதிரவன் கறுப்புச் சாக்குத் துணிபோல் கறுத்தது. நிலவு இரத்தமயமாயிற்று.
13. பெருங் காற்றால் அசைக்கப்படும் அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வதுபோல விண்மீன்கள் மண்மீது விழுந்தன.
14. சுருட்டப்படும் சுருள்போல வானம் மறைந்துவிட்டது. மலைகள் தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின.
15. மண்ணுலகின் அரசர்கள், பெருங்குடி மக்கள், படைத் தலைவர்கள் செல்வர்கள், வலியோர் அனைவரும், அடிமைகள், குடிமக்கள் யாவருமே குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொண்டனர்.
16. அந்த மலைகளையும் பாறைகளையும் நோக்கி அவர்கள், "எங்கள்மேல் விழுந்து, அரியணையின்மேல் வீற்றிருப்பவரின் முகத்தினின்றும், செம்மறியின் சினத்தினின்றும் எங்களை மறைந்துக் கொள்ளுங்கள்.
17. ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் பெருநாள் வந்துவிட்டது, அதை எதிர்த்து நிற்பவன் யார் ?" என்று சொன்னார்கள்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Chapters, Current Chapter 6 of Total Chapters 22
வெளிபடுத்தல் 6:16
1. பின்னர், செம்மறியானவர் ஏழு முத்திரைகளுள் முதல் முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்போது நான்கு உயிர்களுள் ஒன்று, 'வா' என இடிமுழக்கம்போன்ற குரலில் சொன்னதைக் கேட்டேன்.
2. என் கண்முன் ஒரு வெள்ளைக் குதிரை தோன்றிற்று. அதன்மேல் ஏறியிருந்தவனுடைய கையில் வில் ஒன்று இருந்தது. அவனுக்கு வெற்றிவாகை சூட்டப்பட்டது. வெற்றி வீரனான அவன் வெற்றிமேல் வெற்றி கொள்ளச் சென்றான்.
3. செம்மறியானவர் இரண்டாவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் இரண்டாவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன்.
4. அப்போது செந்நிறமான மற்றொரு குதிரை வெளிவந்தது. அதன்மேல் ஏறியிருந்தவனுக்கு, உலகில் அமைதியைக் குலைக்கவும், மனிதர் ஒருவரை ஒருவர் கொல்லும்படி செய்யவும் அலுவல் அளிக்கப்பட்டது. பெரியதொரு வாளும் அவனிடம் கொடுக்கப்பட்டது.
5. அவர் மூன்றாவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் மூன்றாவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். என் கண்முன் கருநிறக் குதிரை ஒன்று தோன்றிற்று. அதன்மீது ஏறியிருந்தவனுடைய கையில் துலாக்கோல் ஒன்று இருந்தது.
6. "ஒருநாள் கூலிக்குக் கோதுமை அரைப்படி, வாற்கோதுமை ஒன்றரைப்படி என்றாகட்டும். ஆனால் எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் சேதப்படுத்த வேண்டாம்" என்ற குரல் நான்கு உயிர்களின் நடுவினின்று எழக்கேட்டேன்.
7. நான்காவது முத்திரையை உடைத்தபோது, அவ்வுயிர்களுள் நான்காவது, 'வா' என்று சொல்லக் கேட்டேன். வெளிறிய குதிரை ஒன்று என் கண்முன் தோன்றிற்று.
8. அதன்மீது ஏறியிருந்தவன் பெயர் சாவு. பாதாளம் அவனைப் பின் தொடர்ந்தது. வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மண்மீதுள்ள விலங்குகளாலும் மண்ணுலகில் கால் பாகத்தை வதைத்தொழிக்க அவர்களுக்கு வல்லமை அளிக்கப்பட்டது.
9. ஐந்தாவது முத்திரையை உடைத்தபோது, கடவுளுடைய வார்த்தையை அறிவித்துத் தாங்கள் கொடுத்த சாட்சியத்திற்காகக் கொலையுண்டவர்களின் ஆன்மாக்களைப் பீடத்தின் கீழே கண்டேன்.
10. அவர்கள் உரத்த குரலில் பரிசுத்தரும் உண்மையுமான ஆண்டவரே, எவ்வளவு காலம் நீதி வழங்காமல் இருப்பீர்? எங்கள் இரத்தத்தைச் சிந்திய மண்ணுலகத்தாரை எவ்வளவு காலம் பழிவாங்காமல் இருப்பீர்?" என்று கத்தினர்.
11. பின்பு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்ணாடை அளிக்கப்பட்டது. "இன்னும் சிறிது நேரம் பொறுத்திருங்கள். உங்களைப்போலவே கொல்லப்பட வேண்டிய உங்கள் உடன் ஊழியரான சகோதரர்களின் தொகை நிறைவு பெற வேண்டும்" என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
12. ஆறாவது முத்திரையை உடைத்தபோது, நான் கண்ட காட்சியில் பெரியதொரு நிலநடுக்கம் உண்டாயிற்று. கதிரவன் கறுப்புச் சாக்குத் துணிபோல் கறுத்தது. நிலவு இரத்தமயமாயிற்று.
13. பெருங் காற்றால் அசைக்கப்படும் அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வதுபோல விண்மீன்கள் மண்மீது விழுந்தன.
14. சுருட்டப்படும் சுருள்போல வானம் மறைந்துவிட்டது. மலைகள் தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின.
15. மண்ணுலகின் அரசர்கள், பெருங்குடி மக்கள், படைத் தலைவர்கள் செல்வர்கள், வலியோர் அனைவரும், அடிமைகள், குடிமக்கள் யாவருமே குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொண்டனர்.
16. அந்த மலைகளையும் பாறைகளையும் நோக்கி அவர்கள், "எங்கள்மேல் விழுந்து, அரியணையின்மேல் வீற்றிருப்பவரின் முகத்தினின்றும், செம்மறியின் சினத்தினின்றும் எங்களை மறைந்துக் கொள்ளுங்கள்.
17. ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் பெருநாள் வந்துவிட்டது, அதை எதிர்த்து நிற்பவன் யார் ?" என்று சொன்னார்கள்.
Total 22 Chapters, Current Chapter 6 of Total Chapters 22
×

Alert

×

tamil Letters Keypad References