தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
1. அரியணையில் வீற்றிருப்பவரின் வலப்புறத்தில் ஓர் ஏட்டுச் சுருளைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது. அது ஏழு முத்திரை பொறித்து மூடப்பட்டிருந்தது.
2. "முத்திரைகளை உடைத்து, சுருளைப் பிரிக்கத் தகுதியுள்ளவன் யார்?" என்று வலிமை மிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் பறைசாற்றக் கண்டேன்.
3. அதை பிரிக்கவும் படிக்கவும் மேலுலகிலோ பூவுலகிலோ கீழுலகிலோ உள்ள எவராலும் இயலவில்லை.
4. அதைப் பிரிக்கவும் படிக்கவும் தகுதியுள்ளவர்கள் யாரும் காணோமே என நான் தேம்பி அழுதேன்.
5. அப்போது மூப்பருள் ஒருவர் என்னைப் பார்த்து, "அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் வெற்றி பெற்றார். ஆகவே அவர் அந்த ஏழு முத்திரைகளை உடைத்து, சுருளையும் பிரித்துவிடுவார்" என்றார்.
6. அந்நான்கு உயிர்களும் மூப்பர்களும் சூழ, அரியணை நடுவில் செம்மறி ஒன்று நிற்கக் கண்டேன். அது பலியிடப்பட்டதுபோல் காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. மண்ணுலகெங்கும் அனுப்பப்பட்ட கடவுளின் ஏழு ஆவிகளே அக்கண்கள்.
7. செம்மறியானவர் சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக்கையிலிருந்து அந்தச் சுருளை எடுத்தார்.
8. அவர் அதை எடுத்தபோது நான்கு உயிர்களும், இருபத்து நான்கு மூப்பரும் செம்மறியின்முன் அடி பணிந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற்கலசங்களும் இருந்தன. இறை மக்களின் செபங்களே அக்கலசங்கள்.
9. அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினர்: "சுருளை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் தகுதியுள்ளவர் நீரே; ஏனெனில், நீர் பலியாக்கப்பட்டு உமது இரத்தத்தால் எல்லாக் குலத்தையும் மொழியையும் இனத்தையும் நாட்டையும் சார்ந்த மக்களைக் கடவுளுக்காக மீட்டீர்.
10. அவர்களை எம் கடவுளுக்கு அரசகுலக் குருக்களாக்கினீர்; அவர்களும் மண்மீது அரசாள்வார்கள்."
11. மேலும் நான் கண்ட காட்சியில், அரியணையையும் உயிர்களையும் மூப்பரையும் சுற்றி நின்ற வானதூதர் பலரின் குரலையும் கேட்டேன். அவர்களின் எண்ணிக்கையோ கோடானுகோடி, ஆயிரமாயிரம்.
12. இவர்கள் உரத்த குரலில் பாடியது: "பலியான செம்மறி வல்லமையும் செல்வமும் ஞானமும் பலமும் மாட்சியும் மகிமையும் போற்றியும் பெறத் தகுதியுள்ளவர்."
13. பின்பு மேலுலகம், பூவுலகம், கீழுலகம், ஆழ்கடல் எங்குமுள்ள படைப்புகள் அனைத்தும், "அரியணையில் வீற்றிருப்பவருக்கும் செம்மறியானவர்க்கும். போற்றியும் மாட்சியும் மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரியனவாகுக" என்று பாடக் கேட்டேன்.
14. நான்கு உயிர்களும் அதற்கு ' ஆமேன் ' என்று சொல்ல, மூப்பர்கள் அடி பணிந்து தொழுதனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Chapters, Current Chapter 5 of Total Chapters 22
வெளிபடுத்தல் 5:1
1. அரியணையில் வீற்றிருப்பவரின் வலப்புறத்தில் ஓர் ஏட்டுச் சுருளைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது. அது ஏழு முத்திரை பொறித்து மூடப்பட்டிருந்தது.
2. "முத்திரைகளை உடைத்து, சுருளைப் பிரிக்கத் தகுதியுள்ளவன் யார்?" என்று வலிமை மிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் பறைசாற்றக் கண்டேன்.
3. அதை பிரிக்கவும் படிக்கவும் மேலுலகிலோ பூவுலகிலோ கீழுலகிலோ உள்ள எவராலும் இயலவில்லை.
4. அதைப் பிரிக்கவும் படிக்கவும் தகுதியுள்ளவர்கள் யாரும் காணோமே என நான் தேம்பி அழுதேன்.
5. அப்போது மூப்பருள் ஒருவர் என்னைப் பார்த்து, "அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் வெற்றி பெற்றார். ஆகவே அவர் அந்த ஏழு முத்திரைகளை உடைத்து, சுருளையும் பிரித்துவிடுவார்" என்றார்.
6. அந்நான்கு உயிர்களும் மூப்பர்களும் சூழ, அரியணை நடுவில் செம்மறி ஒன்று நிற்கக் கண்டேன். அது பலியிடப்பட்டதுபோல் காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. மண்ணுலகெங்கும் அனுப்பப்பட்ட கடவுளின் ஏழு ஆவிகளே அக்கண்கள்.
7. செம்மறியானவர் சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக்கையிலிருந்து அந்தச் சுருளை எடுத்தார்.
8. அவர் அதை எடுத்தபோது நான்கு உயிர்களும், இருபத்து நான்கு மூப்பரும் செம்மறியின்முன் அடி பணிந்தனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கையிலும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற்கலசங்களும் இருந்தன. இறை மக்களின் செபங்களே அக்கலசங்கள்.
9. அவர்கள் புதியதொரு பாடலைப் பாடினர்: "சுருளை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைக்கவும் தகுதியுள்ளவர் நீரே; ஏனெனில், நீர் பலியாக்கப்பட்டு உமது இரத்தத்தால் எல்லாக் குலத்தையும் மொழியையும் இனத்தையும் நாட்டையும் சார்ந்த மக்களைக் கடவுளுக்காக மீட்டீர்.
10. அவர்களை எம் கடவுளுக்கு அரசகுலக் குருக்களாக்கினீர்; அவர்களும் மண்மீது அரசாள்வார்கள்."
11. மேலும் நான் கண்ட காட்சியில், அரியணையையும் உயிர்களையும் மூப்பரையும் சுற்றி நின்ற வானதூதர் பலரின் குரலையும் கேட்டேன். அவர்களின் எண்ணிக்கையோ கோடானுகோடி, ஆயிரமாயிரம்.
12. இவர்கள் உரத்த குரலில் பாடியது: "பலியான செம்மறி வல்லமையும் செல்வமும் ஞானமும் பலமும் மாட்சியும் மகிமையும் போற்றியும் பெறத் தகுதியுள்ளவர்."
13. பின்பு மேலுலகம், பூவுலகம், கீழுலகம், ஆழ்கடல் எங்குமுள்ள படைப்புகள் அனைத்தும், "அரியணையில் வீற்றிருப்பவருக்கும் செம்மறியானவர்க்கும். போற்றியும் மாட்சியும் மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரியனவாகுக" என்று பாடக் கேட்டேன்.
14. நான்கு உயிர்களும் அதற்கு ' ஆமேன் ' என்று சொல்ல, மூப்பர்கள் அடி பணிந்து தொழுதனர்.
Total 22 Chapters, Current Chapter 5 of Total Chapters 22
×

Alert

×

tamil Letters Keypad References