தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
1. "சர்தை சபையின் தூதருக்கு இதை எழுது: 'கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் உடையவர் உரைப்பதாவது: நீ செய்வதெல்லாம் எனக்குத் தெரியும். நீ உயிருள்ளவன் என்பது பெயரளவில் தான்; உண்மையில் நீ செத்துக்கிடக்கிறாய்.
2. விழிப்புள்ளவனாகி, உன்னுள் எஞ்சி நிற்பதையாவது திடப்படுத்து; அதுவும் சாகுந்தருவாயில் உள்ளது. உன் செயல்கள், என் கடவுள் முன்னிலையில் நிறைவற்ற செயல்களாய் இருக்கக் கண்டேன்.
3. தேவ வார்த்தையைக் கேட்டபோது நீ எவ்வளவு ஆர்வத்துடன் அதை ஏற்றுக்கொண்டாய் என்பதை நினைத்துக்கொள். அதைக் கடைப்பிடித்து மனந்திரும்பு. நீ விழித்தெழாவிட்டால், நான் கள்ளனைப்போல் வருவேன். அப்படி வந்து உன்னைத் தாக்கும் நேரத்தை நீ அறியாய்.
4. உன் நிலை இப்படி இருப்பினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்தாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து, என்னைப் புடைசூழ்ந்து செல்வர்; அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களே.
5. வெற்றி கொள்பவன் அவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்படுவான். வாழ்வின் நூலிலிருந்து அவனது பெயரை நான் நீக்கமாட்டேன். என் தந்தை முன்னிலையிலும், அவருடைய தூதர்கள் முன்னிலையிலும் அவனது பெயரை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வேன்.
6. தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்.'
7. பிலதெல்பியாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'பரிசுத்தர், உண்மையானவர், தாவீதின் திறவுகோலை உடையவர், எவனும் பூட்ட முடியாதபடி திறந்து விடுபவர், எவனும் திறக்க முடியாதபடி பூட்டி விடுபவர் உரைப்பதாவது:
8. எவனும் பூட்ட இயலாத கதவை நான் உனக்கு முன்பாகத் திறந்து வைத்திருக்கிறேன். உன் செயல்களை அறிவேன். உன் ஆற்றல் சிறிதே எனினும் நீ என்னுடைய வார்த்தையைக் கடைப்பிடித்தான்;
9. என் பெயரை மறுக்கவில்லை; இதோ, சாத்தானின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். சிலர் தங்களை யூதர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் பொய்யர்கள், யூதர்களே அல்லர். அவர்கள் வந்து உன் காலடிகளை வணங்கச் செய்வேன்; நான் உனக்கு அன்பு செய்கிறேன் என்பதை அவர்கள் அறியச் செய்வேன்.
10. மன உறுதி தரும் என் வார்த்தையை நீ கடைப்பிடித்தால், மண்ணுலகில் வாழும் அனைவரையும் பரிசோதிக்க மாநிலத்தின் மீது பெருந்துன்பம் வந்து விழும் நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
11. விரைவாகவே வருகிறேன். உனக்குரிய வெற்றி வாகையை வேறு எவனும் பறித்துக்கொள்ளாபடி, நீ பெற்றுக்கொண்ட போதகத்தில் நிலைத்திரு.
12. வெற்றி கொள்பவனை என் கடவுளது ஆலயத்தில் ஒரு தூணாக ஏற்படுத்துவேன். அவன் அவ்வாலயத்திற்கு ஒருபோதும் புறம்பாக மாட்டான். என் கடவுளின் பெயரையும், என் புதிய பெயரையும் அவன்மீது பொறிப்பேன். என் கடவுளது நகரத்தின் பெயரையும் எழுதுவேன்; அந்த நகரம் என் கடவுளிடமிருந்து, விண்ணகத்தினின்று இறங்கி வருகிற புதிய பெருசலேம்.
13. தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்.'
14. லவோதிக்கேயாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது; 'ஆமென்' எனும் பெயருள்ளவர், உண்மையான சாட்சியானவர், நம்பத்தக்க சாட்சியானவர், கடவுள் படைத்த படைப்பின் ஆதியாய் உள்ளவர் உரைப்பதாவது: உன் செயல்களை நான் அறிவேன்.
15. நீ இருப்பது தட்ப நிலையுமன்று. வெப்ப நிலையுமன்று; தட்ப நிலையிலோ, வெப்ப நிலையிலோ இருந்தால் நலம்.
16. நீயோ வெப்ப நிலையிலுமில்லை, தட்ப நிலையிலுமில்லை; வெதுவெதுப்பான நிலையில் இருக்கிறபடியால், உன்னை என் வாயினின்று கக்கிவிடுவேன்.
17. 'நான் செல்வமுள்ளவன், வளமிக்கவன் ஆகிவிட்டேன். எனக்குக் குறை ஒன்றுமில்லை, என்று நீ சொல்கிறாய். உன் நிலையோ இழிவானது, இரங்கத்தக்கது; நீ வறியவன், குருடன், ஆடையற்றவன்.
18. இதை நீ உணர்வதில்லை. ஆகவே நீ செல்வமுள்ளவனாகும் பொருட்டு, புடம்போட்ட பொன்னை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள். ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி வெண்ணாடை வாங்கி அணிந்துகொள். நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் மருந்து வாங்கித் தடவு.
19. நான் யார் மேல் அன்புகூருகிறேனோ அவர்களைக் கண்டித்துத் தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே, நீ மனந்திரும்பி ஆர்வமுள்ள வாழ்க்கை நடத்து.
20. இதோ, 'நான் கதவண்டை நின்று தட்டுகிறேன். ஒருவன் எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், அவனது இல்லத்தில் நுழைந்து, அவனோடு விருந்துண்பேன். நானும் அவனும் ஒன்றாய் விருந்துண்போம்.
21. நான் வெற்றிகொண்டு என் தந்தையின் அரியணையில் அமர்ந்ததுபோல, வெற்றிகொள்பவனுக்கு என் அரியணையில் அமரும் உரிமை அளிப்பேன்.
22. தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 22 Chapters, Current Chapter 3 of Total Chapters 22
வெளிபடுத்தல் 3:19
1. "சர்தை சபையின் தூதருக்கு இதை எழுது: 'கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் உடையவர் உரைப்பதாவது: நீ செய்வதெல்லாம் எனக்குத் தெரியும். நீ உயிருள்ளவன் என்பது பெயரளவில் தான்; உண்மையில் நீ செத்துக்கிடக்கிறாய்.
2. விழிப்புள்ளவனாகி, உன்னுள் எஞ்சி நிற்பதையாவது திடப்படுத்து; அதுவும் சாகுந்தருவாயில் உள்ளது. உன் செயல்கள், என் கடவுள் முன்னிலையில் நிறைவற்ற செயல்களாய் இருக்கக் கண்டேன்.
3. தேவ வார்த்தையைக் கேட்டபோது நீ எவ்வளவு ஆர்வத்துடன் அதை ஏற்றுக்கொண்டாய் என்பதை நினைத்துக்கொள். அதைக் கடைப்பிடித்து மனந்திரும்பு. நீ விழித்தெழாவிட்டால், நான் கள்ளனைப்போல் வருவேன். அப்படி வந்து உன்னைத் தாக்கும் நேரத்தை நீ அறியாய்.
4. உன் நிலை இப்படி இருப்பினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்தாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து, என்னைப் புடைசூழ்ந்து செல்வர்; அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களே.
5. வெற்றி கொள்பவன் அவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்படுவான். வாழ்வின் நூலிலிருந்து அவனது பெயரை நான் நீக்கமாட்டேன். என் தந்தை முன்னிலையிலும், அவருடைய தூதர்கள் முன்னிலையிலும் அவனது பெயரை வெளிப்படையாக ஏற்றுக்கொள்வேன்.
6. தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்.'
7. பிலதெல்பியாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது: 'பரிசுத்தர், உண்மையானவர், தாவீதின் திறவுகோலை உடையவர், எவனும் பூட்ட முடியாதபடி திறந்து விடுபவர், எவனும் திறக்க முடியாதபடி பூட்டி விடுபவர் உரைப்பதாவது:
8. எவனும் பூட்ட இயலாத கதவை நான் உனக்கு முன்பாகத் திறந்து வைத்திருக்கிறேன். உன் செயல்களை அறிவேன். உன் ஆற்றல் சிறிதே எனினும் நீ என்னுடைய வார்த்தையைக் கடைப்பிடித்தான்;
9. என் பெயரை மறுக்கவில்லை; இதோ, சாத்தானின் கூட்டத்தைச் சார்ந்தவர்கள். சிலர் தங்களை யூதர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் பொய்யர்கள், யூதர்களே அல்லர். அவர்கள் வந்து உன் காலடிகளை வணங்கச் செய்வேன்; நான் உனக்கு அன்பு செய்கிறேன் என்பதை அவர்கள் அறியச் செய்வேன்.
10. மன உறுதி தரும் என் வார்த்தையை நீ கடைப்பிடித்தால், மண்ணுலகில் வாழும் அனைவரையும் பரிசோதிக்க மாநிலத்தின் மீது பெருந்துன்பம் வந்து விழும் நேரத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.
11. விரைவாகவே வருகிறேன். உனக்குரிய வெற்றி வாகையை வேறு எவனும் பறித்துக்கொள்ளாபடி, நீ பெற்றுக்கொண்ட போதகத்தில் நிலைத்திரு.
12. வெற்றி கொள்பவனை என் கடவுளது ஆலயத்தில் ஒரு தூணாக ஏற்படுத்துவேன். அவன் அவ்வாலயத்திற்கு ஒருபோதும் புறம்பாக மாட்டான். என் கடவுளின் பெயரையும், என் புதிய பெயரையும் அவன்மீது பொறிப்பேன். என் கடவுளது நகரத்தின் பெயரையும் எழுதுவேன்; அந்த நகரம் என் கடவுளிடமிருந்து, விண்ணகத்தினின்று இறங்கி வருகிற புதிய பெருசலேம்.
13. தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்.'
14. லவோதிக்கேயாவிலுள்ள சபையின் தூதருக்கு இதை எழுது; 'ஆமென்' எனும் பெயருள்ளவர், உண்மையான சாட்சியானவர், நம்பத்தக்க சாட்சியானவர், கடவுள் படைத்த படைப்பின் ஆதியாய் உள்ளவர் உரைப்பதாவது: உன் செயல்களை நான் அறிவேன்.
15. நீ இருப்பது தட்ப நிலையுமன்று. வெப்ப நிலையுமன்று; தட்ப நிலையிலோ, வெப்ப நிலையிலோ இருந்தால் நலம்.
16. நீயோ வெப்ப நிலையிலுமில்லை, தட்ப நிலையிலுமில்லை; வெதுவெதுப்பான நிலையில் இருக்கிறபடியால், உன்னை என் வாயினின்று கக்கிவிடுவேன்.
17. 'நான் செல்வமுள்ளவன், வளமிக்கவன் ஆகிவிட்டேன். எனக்குக் குறை ஒன்றுமில்லை, என்று நீ சொல்கிறாய். உன் நிலையோ இழிவானது, இரங்கத்தக்கது; நீ வறியவன், குருடன், ஆடையற்றவன்.
18. இதை நீ உணர்வதில்லை. ஆகவே நீ செல்வமுள்ளவனாகும் பொருட்டு, புடம்போட்ட பொன்னை என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள். ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி வெண்ணாடை வாங்கி அணிந்துகொள். நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் மருந்து வாங்கித் தடவு.
19. நான் யார் மேல் அன்புகூருகிறேனோ அவர்களைக் கண்டித்துத் தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே, நீ மனந்திரும்பி ஆர்வமுள்ள வாழ்க்கை நடத்து.
20. இதோ, 'நான் கதவண்டை நின்று தட்டுகிறேன். ஒருவன் எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், அவனது இல்லத்தில் நுழைந்து, அவனோடு விருந்துண்பேன். நானும் அவனும் ஒன்றாய் விருந்துண்போம்.
21. நான் வெற்றிகொண்டு என் தந்தையின் அரியணையில் அமர்ந்ததுபோல, வெற்றிகொள்பவனுக்கு என் அரியணையில் அமரும் உரிமை அளிப்பேன்.
22. தேவ ஆவி சபைகளுக்குக் கூறுவதைச் செவியுள்ளவன் கேட்கட்டும்."
Total 22 Chapters, Current Chapter 3 of Total Chapters 22
×

Alert

×

tamil Letters Keypad References