1. பின்னர் வாழ்வுநீர் ஓடும் ஆற்றை வானதூதர் காண்பித்தார். அது பளிங்குபோல் மின்னிற்று. அது கடவுளும் செம்மறியான வரும் வீற்றிருக்கும் அரியணையினின்று நகர வீதியின் நடுவிலே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு பக்கங்களிலும் வாழ்வின் மரமிருந்தது.
|
2. மாதத்திற்கு ஒரு முறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனிகள் தரும். அதன் இலைகள் மக்கள் இனங்களைக் குணப்படுத்தக் கூடியவை.
|
3. சாபத்துக்குள்ளானதெதுவும் அங்கு இல்லை. கடவுளும் செம்மறியானவரும் வீற்றிருக்கும் அரியணை அங்கே இருக்கும். அவருடைய ஊழியர்கள் அவரைத் தொழுவார்கள்.
|
5. அங்கு இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஆண்டவராகிய கடவுளே அவர்கள் மீது ஒளி வீசுவார். அவர்களோ என்றென்றும் அரசாள்வார்கள்.
|
6. அதன்பின் அவர் எனக்குச் சொன்னது: "இவ்வார்த்தைகள் நம்பத்தக்கவை, உண்மையானவை. இறைவாக்கினருக்கு ஆவியைத் தரும் கடவுளாகிய ஆண்டவர் விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் ஊழியர்களுக்கு வெளிப்படுத்தத் தம் தூதரை அனுப்பினார்.
|
8. அருளப்பனாகிய நானே இவற்றைக் கண்டேன், இவற்றைக் கேட்டேன். இவற்றைக் கண்டு கேட்டு முடித்தபின் எனக்கு இவற்றைக் காட்டிய வானதூதரைத் தொழுவதற்கு அவர்முன் அடிபணிந்தேன்.
|
9. அவரோ, "வேண்டாம், வேண்டாம்; இறைவாக்கினரான உன் சகோதரர்களுக்கும், இந்நூலிலுள்ள வார்த்தைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் உனக்கும் நான் உடன் ஊழியனே. கடவுளையே தொழுதல் வேண்டும்" என்றார்.
|
10. பின்பு அவர் என்னிடம் சொன்னதாவது: "இந்நூலிலுள்ள இறைவாக்குகளை மறைந்து வைக்காதே. இதோ, குறித்த காலம் அண்மையிலேயே உள்ளது.
|
11. இதற்கிடையில், அநீதி செய்பவன் செய்துகொண்டே போகட்டும்; சேற்றில் உழல்பவன் உழன்றுகொண்டே இருக்கட்டும்; நல்லவனோ நன்மை செய்து கொண்டே இருக்கட்டும்; பரிசுத்தமுள்ளவனோ பரிசுத்தத்திலேயே நிலைத்திருக்கட்டும்.
|
12. இதோ, விரைவாகவே வருகிறேன். அவனவன் செயலுக்கேற்ப அவனவனுக்கு அளிக்கும் கைம்மாறு என் கையிலிருக்கிறது.
|
14. தங்கள் ஆடைகளைத் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். வாழ்வின் மரத்தின் மீது அவர்களுக்கு உரிமையிருக்கும். வாயில்கள் வழியாக அந்நகரத்தில் நுழையவும் முடியும்.
|
15. கேடுகெட்ட நாய்கள், சூனியம் வைப்பவர்கள், காமுகர், கொலைகாரர், சிலை வழிபாட்டினர், பொய்யை விரும்பி அதன்படி நடப்போர் அனைவரும் வெளியே நிற்பர்."
|
16. இயேசுவாகிய நான் சபைகளைப் பற்றிய இச்சாட்சியங்களை உங்களுக்கு அறிவிக்க என்தூதரை அனுப்பினேன். தாவீதின் வேரும் வழித்தோன்றலும் நானே. ஒளிமிகு விடிவெள்ளியும் நானே.
|
17. ஆவியானவரும் மணமகளும் "வாரும் என்கின்றனர். இதைக் கேட்பவனும் "வாரும்" என்று சொல்லட்டும். தாகமாயிருப்பவன் வரட்டும். விருப்பமுள்ளவன் வாழ்வின் நீரை இலவசமாக ஏற்றுக்கொள்ளட்டும்.
|
18. இந்நூலிலுள்ள இறை வாக்குகளைக் கேட்டுகிற ஒவ்வொருவனையும் நான் எச்சரிக்கிறேன்: இவ்வாக்குகளில் ஒருவன் எதையாவது சேர்த்தால், இந்நூலில் விளக்கியுள்ள வாதைகளை எல்லாம் கடவுள் அவனுக்கு அவன் தலையில் சேர்த்துவிடுவார்.
|
19. இந்நூலுள்ள இறைவாக்குகளில் எதையாவது ஒருவன் எடுத்துவிட்டால், இந்நூலில் குறிப்பிட்டுள்ள வாழ்வின் மரத்திலும் பரிசுத்த நகரிலும் அவனுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.
|
20. இவற்றிற்குச் சான்று பகர்கிறவர், "ஆம், விரைவாகவே வருகிறேன்" என்கிறார். ஆமேன். ஆண்டவராகிய இயேசுவே வாரும்.
|