2. கடலும் இல்லாமல் போயிற்று. அப்போது புதிய யெருசலேம் ஆகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து விண்ணினின்று இறங்கிவரக் கண்டேன். மணமகனுக்கென அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல் அது மலர்ந்தது.
|
3. பின் அரியணையிலிருந்து ஒரு பெருங் குரலைக் கேட்டேன். அக்குரல், "இதோ, கடவுளின் இல்லம் மனிதரிடையே உள்ளது; அவர்களோடு அவர் குடிகொள்வார். அவர்கள் அவருக்கு மக்களாயிருப்பர்; கடவுள் தாமே அவர்களோடு இருப்பார்.
|
4. அவர்களுடைய கண்ணீரனைத்தையும் துடைத்துவிடுவார்; இனிச் சாவில்லை, புலம்பலில்லை, அழுகையில்லை, நோவில்லை முன்னிருந்தவை மறைந்து போயின" என்றது.
|
5. அரியணை மீது வீற்றிருந்தவர், "இதோ நான் அனைத்தையும் புதியனவாக்குகிறேன்" என்றார். மேலும், "இவ்வார்த்தைகள் நம்பத்தக்கவை, உண்மையானவை என்று எழுது" என்றார்.
|
6. பின், என்னைப் பார்த்துச் சொன்னதாவது: "எல்லாம் முடிந்துவிட்டது. அகரமும் னகரமும் நானே- தொடக்கமும் முடிவும் நானே. தாகமாயிருக்கிறவனுக்கு வாழ்வின் ஊற்றிலிருந்து இலவசமாய் நீர் கொடுப்பேன்.
|
7. வெற்றிகொள்பவன் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்வான். நான் அவனுக்குக் கடவுளாய் இருப்பேன். அவன் எனக்கு மகனாய் இருப்பான்.
|
8. கோழைகள், விசுவாசமற்றவர்கள், அருவருப்புக்குரியவர்கள், கொலைகாரர்கள், காமுகர், சூனியம் வைப்பவர்கள், சிலை வழிபாட்டினர் முதலிய பொய்யர்கள் அனைவருக்கும் கந்தக நெருப்பு எரியும் கடலே உரிய பங்காகும். இதுவே இரண்டாவது சாவு.
|
9. அதன்பின் இறுதி ஏழு வாதைகளால் நிரம்பிய கலசங்களை ஏந்திய ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்தார். அவர் என்னைப் பார்த்து: "வா, செம்மறியானவர் மணந்து கொண்ட மணமகளை உனக்குக் காட்டப் போகிறேன்" என்றார்.
|
10. தேவ ஆவி என்னை ஆட்கொள்ளவே, வானதூதர், உயர்ந்ததொரு பெரிய மலைக்கு என்னைக் கொண்டு சென்றார். கடவுளிடமிருந்து விண்ணினின்று யெருசலெம் நகர் இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.
|
11. கடவுளுடைய மாட்சிமை அதைச் சூழ்ந்திருந்தது. அது விலைமிக்க இரத்தினக்கல் போலும், பளிங்கென ஒளிவீசும் மணிக்கல் போலும் சுடர்விட்டது.
|
12. உயர்ந்ததொரு பெரிய மதில் அதைச் சூழ்ந்திருந்தது. அதற்குப் பன்னிரு வாயில்கள் காணப்பட்டன. அவ்வாயில்களில் பன்னிரு தூதர்கள் நின்றர்கள். இஸ்ராயேலின் பன்னிரு குலத்தாரின் பெயர்கள் வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன.
|
14. நகரின் மதில் பன்னிரு அடிக்கற்கள் மேல் கட்டப்பட்டிருந்தது. அவற்றின் மேல் செம்மறியின் பன்னிரு அப்போஸ்தலர்களின் பன்னிரு பெயர்களும் இருந்தன.
|
15. என்னோடு பேசியவர் நகரையும் அதன் வாயில்களையும் மதிலையும் அளக்கும்பொருட்டு ஒரு பொன் அளவுகோலைக் கையில் வைத்துக் கொண்டிருந்தார்.
|
16. அந்நகரம் சதுரமாக இருந்தது; அதன் நீளமும் அகலமும் ஒரே அளவு. அவர் கோலைக்கொண்டு நகரத்தை அளந்தார். நூற்றைம்பது காதம் இருந்தது. அதன் நீளமும் அகலமும் உயரமும் ஒரே அளவாக இருந்தன. அவர் தம் மதிலையும் அளந்தார்.
|
17. அதன் உயரம் நூற்றுநாற்பத்து நான்கு முழும். வானதூதர் பயன்படுத்திய அளவு மனிதரிடையே வழங்கும் அளவுகளே.
|
19. நகர மதில்களின் அடிக்கற்கள் எல்லாவித இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. முதல் அடிக்கல் மணிக்கல், இரண்டாவது நீலக்கல், மூன்றாவது மாணிக்கம், நான்காவது மரகதம்,
|
20. ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புட்பராகம், பத்தாவது வைடூரியம், பதினொன்றாவது இந்திரநீலம். பன்னிரண்டாவது சுகந்தி.
|
21. பன்னிரு வாயில்களும் பன்னிரு முத்துகளால் ஆனவை. ஒவ்வொரு வாயிலும் ஒரு முத்தாலானது. நகரின் வீதி பழுதற்ற கண்ணாடிபோன்ற பசும்பொன்னாலானது.
|
23. அந்நகருக்கு ஒளிகொடுக்க கதிரவனோ நிலவோ தேவையில்லை. கடவுளுடைய மாட்சிமை அதற்கு ஒளி வீசியது; செம்மறியே அதன் விளக்கு;
|
24. அதன் ஒளியில் எல்லா நாட்டு மக்களும் நடந்து செல்வர்; மண்ணக அரசர் தங்களிடம் மகிமையாய் உள்ளதெல்லாம் அதனுள் கொண்டுவருவர்.
|
27. ஆனால் மாசுபட்டது எதுவும் அதனுள் நுழையாது. அருவருப்பானதும் பொய்யானதும் செய்பவர்கள் அங்கு நுழைவதில்லை. செம்மறியானவர் வைத்திருக்கும் வாழ்வு நூலில் எழுதப்பட்டிருப்பவர் மட்டுமே அங்குச் செல்வர்.
|