1. இதற்குப்பின் விண்ணில் பெரியதொரு கூட்டத்தின் முழக்கம் போன்ற பேரொலியைக் கேட்டேன். அக்கூட்டம், "அல்லேலூயா, மீட்பும் மகிமையும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.
|
2. ஏனெனில், அவரிடும் தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை. தன் விபசாரத்தால் மண்ணகத்தைச் சீரழித்த, பேர்போன வேசிக்கு அவர் தீர்ப்பிட்டார்;
|
3. தம் ஊழியர்களின் இரத்தத்திற்காக அவளைப் பழிவாங்கினார்" என்று ஆர்ப்பரித்தது மேலும் அக்கூட்டம், "அல்லேலூயா, அவளை எரிக்கும் புகை என்றென்றும் மேலே எழுகிறது" என்றது.
|
4. இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருக்கும் கடவுள்முன் அடிபணிந்து, "ஆமென், அல்லேலூயா" என்று தொழுதனர்.
|
5. அரியணையிலிருந்து வெளிவந்த குரல்; "கடவுளுடைய ஊழியர்களே, அவருக்கு அஞ்சுபவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நம் கடவுளைப் புகழுங்கள்" என்றது.
|
6. மேலும் பெரியதொரு கூட்டத்தின் ஆர்ப்பரிப்புப் போலும், பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும், இடி முழக்கம்போலும் தொனித்த பேரொலி ஒன்று கேட்டேன். அது சொன்னதாவது: "அல்லேலூயா, எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் ஆட்சி செலுத்தலானார்.
|
7. நாம் அகமகிழ்ந்து களிகூர்ந்து அவருக்கு மகிமை அளிப்போமாக. ஏனெனில், செம்மறியின் மணவிழா வந்து விட்டது. அவருக்குரிய மணமகள் தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.
|
8. அணிவதற்குப் பகட்டானதும் தூயதுமான விலைமிக்க ஆடை அவளுக்கு அளிக்கப்பட்டது. அவ்விலைமிக்க ஆடையோ இறைமக்களின் நீதிச் செயல்களே."
|
9. பின்பு வானதூதர் என்னிடம் சொன்னதாவது: "செம்மறியின் மணவிருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர் என்று எழுது." மேலும், "இவை கடவுளின் உண்மை வார்த்தைகள்" என்று சொன்னார்.
|
10. பின்னர் நான் அவரைத் தொழுவதற்கு அவர்முன் அடிபணிந்தேன். அவரோ, "வேண்டாம், வேண்டாம், இயேசு சொன்ன சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட உன் சகோதரர்களுக்கும் உனக்கும் நான் உடன் ஊழியனே. கடவுளையே தொழுதல்வேண்டும்" என்றார். இயேசு தந்த அந்தச் சாட்சியமே இறைவாக்குகளுக்கு உயிர்.
|
11. பின் நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். இதோ, ஒரு வெண்குதிரை! அதன் மேல் ஒருவர் ஏறியிருந்தார். அவர் பெயர் 'நம்பிக்கைக்குரியவர்; உண்மையுள்ளவர். அவர் நீதியோடு தீர்ப்பிட்டுப் போர் தொடுக்கிறார்.
|
12. அவருடைய கண்கள் எரிதழல்போல் இருந்தன; தலையில் மகுடங்கள் பல சூடியிருந்தார். அவரைத் தவிர மற்றெவர்க்கும் தெரியாததொரு பெயர் அவர்மேல் பொறிக்கப்பட்டிருந்தது.
|
15. நாடுகளைத் தாக்குவதற்கு அவருடைய வாயினின்று கூரிய வாளொன்று வெளிப்பட்டது. அவர் இருப்புக்கோல்கொண்டு அவர்களை நடத்துவார். எல்லாம் வல்ல கடவுளின் கடுஞ்சினம் என்னும் ஆலையை அவர் மிதிப்பார்.
|
16. "அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்" என்ற பெயர் அவரது ஆடையிலும் தொடையிலும் எழுதியிருந்தது.
|
17. பின்பு வானதூதர் ஒருவர் கதிரவனில் நிற்கக் கண்டேன். வானத்தில் உயரப்பறக்கும் பறவைகள் அனைத்தையும் நோக்கி:
|
18. அவர் உரத்த குரலில், "வாருங்கள், அரசர், படைத்தலைவர், வலியோர் இவர்களின் தசையும், குதிரைகள், அவற்றின்மீது ஏறியிருப்போரின் தசையும், குடிமக்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரின் தசையும் தின்னும்படி, கடவுள் செய்யும் பெரு விருந்துக்கு வந்து கூடுங்கள்" என்றார்.
|
19. குதிரைமீது ஏறியிருந்தவருக்கும் அவரது படைக்கும் எதிராகப் போர் தொடுக்க அக்கொடிய விலங்கும் மண்ணகத்து அரசர்களும், அவர்களுடைய படைகளும் கூடியிருப்பதைக் கண்டேன்.
|
20. அவ்விலங்கு பிடிபட்டது. அதனோடு அவ்விலங்கின் முன்னிலையில் அருங்குறிகள் செய்த போலித் தீர்க்கதரிசியும் பிடிபட்டான். இந்த அருங்குறிகளால் தான் அவன் விலங்கின் அடையாளத்தால் குறிக்கப்பட்டவர்களையும், அதனுடைய சிலையைத் தொழுதவர்களையும் ஏமாற்றியிருந்தான். இவர்கள் இருவரும் கந்தகம் எரிகிற நெருப்புக் கடலில் உயிரோடு எறியப்பட்டார்கள்.
|
21. குதிரைமீது ஏறியிருந்தவரின் வாயினின்று வெளிப்பட்டவாளால் எஞ்சியிருந்தோர் கொல்லப்பட்டனர். அந்தப் பிணங்களைப் பறவைகள் எல்லாம் வயிறாரத் தின்றன.
|