1. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: வியத்தகு செயல்களை அவர் செய்துள்ளார்; அவரது வலக்கரமும் புனித புயமும் அவருக்கு வெற்றியைக் கொணர்ந்தன.
|
3. தமது நன்மைத் தனத்தையும் இஸ்ராயேல் இனத்தவர் சார்பாய்த் தாம் தந்த சொல்லுறுதியையும் அவர் நினைவுகூர்ந்தார்: மாநிலத்தின் எல்லைகள் யாவும் நம் இறைவன் தந்த மீட்பைக் கண்டன.
|
4. வையகத்தோரே, நீங்கள் ஆண்டவரை நினைத்து ஆர்ப்பரியுங்கள்: அகமகிழுங்கள், களிகூருங்கள், புகழ் பாடுங்கள்.
|
9. ஏனெனில், அவர் வருகின்றார், பூவுலகை ஆட்சி செய்ய வருகின்றார். நீதியுடன் பூவுலகை அவர் ஆள்வார்: மக்களினத்தாரை அவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
|