1. ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: மாநிலத்தோரே, நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.
|
3. புற இனத்தாரிடையே அவரது மாட்சிமையை எடுத்துச் சொல்லுங்கள்: மக்கள் அனைவரிடையிலும் அவர்தம் வியத்தகு செயல்களைக் கூறுங்கள்.
|
4. ஏனெனில், மாண்பு மிக்கவர் ஆண்டவர், மிகு புகழ்ச்சிக்குரியவர்: தெய்வங்கள் அனைத்தையும் விட அச்சத்துக்குரியவர்.
|
8. அவரது பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்: பலிப்பொருளை ஏந்தி அவர்தம் ஆலய முற்றங்களில் செல்லுங்கள்.
|
10. மாநிலத்தோரே, நீங்கள் புறவினத்தாரிடையே அறிவியுங்கள்: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகை அவர் நிலை நிறுத்தியுள்ளார். அது அசைவுறாது: மக்களை அவர் நேர்மையுடன் ஆள்கின்றார்.
|
12. வயல் வெளியும் அதில் உள்ள அனைத்தும் ஆர்ப்பரிக்கட்டும்: காட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் அப்போது ஆண்டவர் முன் மகிழ்ச்சியுறும்.
|
13. ஏனெனில், அவர் வருகின்றார்: பூவுலகை ஆட்சி செய்ய வருகின்றார், பூவுலகை அவர் நீதியுடன் ஆட்சி செய்வார்: மக்களை அவர் தம் சொல்லுறுதியால் ஆள்வார்.
|