4. எதுவரையில் அவர்கள் ஆணவத்துடன் பேசி வாயாடுவர்? அக்கிரமம் செய்வோர் எதுவரையில் பெருமையடித்துக் கொள்வர் ?
|
8. மக்களிடையே அறிவிலிகளாயிப்பவர்களே, இதை உணர்ந்துகொள்ளுங்கள்: அறிவீனர்களே, உங்களுக்கு என்று ஞானம் பிறக்கும்?
|
10. எல்லா நாட்டினருக்கும் அறிவூட்டுபவர் தண்டியாமலிருப்பாரோ? மக்களுக்கு அறிவு தருபவர் வாளாவிருப்பாரோ?
|
12. ஆண்டவரே, உம்மால் அறிவு புகட்டப்பெறுபவன் பேறு பெற்றவன்: உமது சட்டத்தைக் கொண்டு நீர் யாருக்குக் கற்பிக்கின்றீரோ அவன் பேறுபெற்றவன்.
|
13. அப்போது அவன் துன்ப நாளிலும் உம்மிடமிருந்து இளைப்பாற்றி அடைவான். தீயவனுக்கோ இறுதியாய்க் குழி வெட்டப்படும்.
|
16. எனக்குத் தீமை செய்வோரை எதிர்ப்பது யார்? என் சார்பாய் எழுந்து பேசுவது யார்? தீமை செய்வோரை எதிர்த்து என் சார்பாகப் பேசுவது யார்?
|
20. அநீதத் தீர்ப்பளிப்பவர்கள் உம்மோடு தொடர்பு கொள்வரோ? சட்டம் என்ற பெயரால் தொல்லை கொடுப்பவரோடு உமக்கு ஏது தொடர்பு?
|
23. அவர்கள் செய்த தீமை அவர்கள் மேலேயே விழச் செய்வார்; அவர்களுடைய வஞ்சகத்தின் பொருட்டு அவர்களையே அழித்து விடுவார்: ஆண்டவராகிய நம் இறைவன் அவர்களை ஒழித்து விடுவார்.
|