தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரைப் புகழ்வது நல்லது: உன்னதமானவரே, உம் திருப்பெயருக்குப் புகழ் பாடுவது நல்லது.
2. காலையில் உம் இரக்கத்தையும், இரவெல்லாம் உம் பிரமாணிக்கத்தையும் எடுத்துரைப்பது நல்லது.
3. பத்து நரம்பு வீணையிலும் சுரமண்டலத்திலும் யாழிலும் பண் இசைத்து உம்மைப் புகழ்வது நல்லது.
4. ஏனெனில் ஆண்டவரே, உம் செயல்களால் எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறீர். உம் திருக்கரப் படைப்புகளைக் குறித்து நான் அக்களிக்கிறேன்.
5. ஆண்டவரே, உம் செயல்கள் எவ்வளவு மகத்தானவை! உம் நினைவுகள் எவ்வளவு ஆழ்ந்தவை!
6. அறிவீனன் இவற்றை அறிவதில்லை; மூடன் இவற்றை உணர்வதில்லை.
7. பாவிகள் புற்பூண்டுகளைப் போல் தழைத்தாலும், தீமை செய்வோர் அனைவரும் செழித்தோங்கினாலும், நித்திய அழிவுக்குத் தான் குறிக்கப் பட்டுள்ளனர்.
8. நீரோ ஆண்டவரே, என்றுமே உயர்ந்தவர்.
9. ஏனெனில் ஆண்டவரே, இதோ எதிரிகள் ஒழிந்து போவர்; இதோ உம் எதிரிகள் அழிந்துபோவர்: தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டு போவர்.
10. காட்டெருமையின் கொம்பிற்கொத்த வல்லமையை நீர் எனக்கு அளித்தீர்: புனிதமான எண்ணெயை என் மேல் பொழிந்தீர்.
11. அதனால் நான் என் எதிரிகளைப் புறக்கணித்தேன்: என்னை எதிர்த்து எழும் தீயவர்கள் பின் வாங்கினர் என்ற மகிழ்ச்சிச் செய்தி என் செவிகளில் விழுந்தது.
12. நீதிமான் பனையைப் போல் செழித்து வளர்வான்: லீபானின் கேதுரு மரம்போல் ஓங்கி வளர்வான்.
13. ஆண்டவருடைய இல்லத்திலும், நம் கடவுளின் ஆலய முற்றங்களிலும் நடப்பட்ட அவர்கள் செழிப்புற்று விளங்குவர்.
14. அவர்கள் முதிர்வயதிலும் பலனளிப்பர்: செழுமையும் கொழுமையும் கொண்டு விளங்குவர்.
15. என் அடைக்கலப் பாறையாகிய ஆண்டவர் எவ்வளவு நேர்மையுள்ளவர் என்றும், அவரிடத்தில் அநீதி இல்லையென்றும் பறைசாற்றுவர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 92 of Total Chapters 150
சங்கீதம் 92:16
1. ஆண்டவரைப் புகழ்வது நல்லது: உன்னதமானவரே, உம் திருப்பெயருக்குப் புகழ் பாடுவது நல்லது.
2. காலையில் உம் இரக்கத்தையும், இரவெல்லாம் உம் பிரமாணிக்கத்தையும் எடுத்துரைப்பது நல்லது.
3. பத்து நரம்பு வீணையிலும் சுரமண்டலத்திலும் யாழிலும் பண் இசைத்து உம்மைப் புகழ்வது நல்லது.
4. ஏனெனில் ஆண்டவரே, உம் செயல்களால் எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறீர். உம் திருக்கரப் படைப்புகளைக் குறித்து நான் அக்களிக்கிறேன்.
5. ஆண்டவரே, உம் செயல்கள் எவ்வளவு மகத்தானவை! உம் நினைவுகள் எவ்வளவு ஆழ்ந்தவை!
6. அறிவீனன் இவற்றை அறிவதில்லை; மூடன் இவற்றை உணர்வதில்லை.
7. பாவிகள் புற்பூண்டுகளைப் போல் தழைத்தாலும், தீமை செய்வோர் அனைவரும் செழித்தோங்கினாலும், நித்திய அழிவுக்குத் தான் குறிக்கப் பட்டுள்ளனர்.
8. நீரோ ஆண்டவரே, என்றுமே உயர்ந்தவர்.
9. ஏனெனில் ஆண்டவரே, இதோ எதிரிகள் ஒழிந்து போவர்; இதோ உம் எதிரிகள் அழிந்துபோவர்: தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டு போவர்.
10. காட்டெருமையின் கொம்பிற்கொத்த வல்லமையை நீர் எனக்கு அளித்தீர்: புனிதமான எண்ணெயை என் மேல் பொழிந்தீர்.
11. அதனால் நான் என் எதிரிகளைப் புறக்கணித்தேன்: என்னை எதிர்த்து எழும் தீயவர்கள் பின் வாங்கினர் என்ற மகிழ்ச்சிச் செய்தி என் செவிகளில் விழுந்தது.
12. நீதிமான் பனையைப் போல் செழித்து வளர்வான்: லீபானின் கேதுரு மரம்போல் ஓங்கி வளர்வான்.
13. ஆண்டவருடைய இல்லத்திலும், நம் கடவுளின் ஆலய முற்றங்களிலும் நடப்பட்ட அவர்கள் செழிப்புற்று விளங்குவர்.
14. அவர்கள் முதிர்வயதிலும் பலனளிப்பர்: செழுமையும் கொழுமையும் கொண்டு விளங்குவர்.
15. என் அடைக்கலப் பாறையாகிய ஆண்டவர் எவ்வளவு நேர்மையுள்ளவர் என்றும், அவரிடத்தில் அநீதி இல்லையென்றும் பறைசாற்றுவர்.
Total 150 Chapters, Current Chapter 92 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References