4. ஏனெனில் ஆண்டவரே, உம் செயல்களால் எனக்கு மகிழ்ச்சியூட்டுகிறீர். உம் திருக்கரப் படைப்புகளைக் குறித்து நான் அக்களிக்கிறேன்.
|
7. பாவிகள் புற்பூண்டுகளைப் போல் தழைத்தாலும், தீமை செய்வோர் அனைவரும் செழித்தோங்கினாலும், நித்திய அழிவுக்குத் தான் குறிக்கப் பட்டுள்ளனர்.
|
9. ஏனெனில் ஆண்டவரே, இதோ எதிரிகள் ஒழிந்து போவர்; இதோ உம் எதிரிகள் அழிந்துபோவர்: தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டு போவர்.
|
10. காட்டெருமையின் கொம்பிற்கொத்த வல்லமையை நீர் எனக்கு அளித்தீர்: புனிதமான எண்ணெயை என் மேல் பொழிந்தீர்.
|
11. அதனால் நான் என் எதிரிகளைப் புறக்கணித்தேன்: என்னை எதிர்த்து எழும் தீயவர்கள் பின் வாங்கினர் என்ற மகிழ்ச்சிச் செய்தி என் செவிகளில் விழுந்தது.
|
13. ஆண்டவருடைய இல்லத்திலும், நம் கடவுளின் ஆலய முற்றங்களிலும் நடப்பட்ட அவர்கள் செழிப்புற்று விளங்குவர்.
|
15. என் அடைக்கலப் பாறையாகிய ஆண்டவர் எவ்வளவு நேர்மையுள்ளவர் என்றும், அவரிடத்தில் அநீதி இல்லையென்றும் பறைசாற்றுவர்.
|