தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்குப் புகலிடம்.
2. மலைகள் தோன்றுமுன்பே, பூமியும் உலகும் உண்டாகு முன்பே, ஊழ் ஊழிக்காலமாக இறைவா, நீர் இருக்கிறீர்.
3. மண்ணோடு மண்ணாகும்படி நீர் மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறீர்: "மனுமக்களே மண்ணாகத் திரும்புங்கள்" என்கிறீர்.
4. ஏனெனில், உமக்கு ஆயிரம் ஆண்டுகள் கூட, கடந்து போன நேற்றைய தினத்தைப் போலவும், ஓர் இரவுச் சாமத்தைப் போலவும் உள்ளன.
5. அவர்களை எடுத்து விடுகிறீர். வைகறையில் கண்ட கனவைப் போலவும், செழித்து வளரும் பூண்டைப் போலவும் ஆகிறார்கள்.
6. காலையில் பூக்கிறது, செழித்திருக்கிறது: மாலையிலோ வாடி விடுகிறது.
7. உம் கோபத்தால் நாங்கள் தொலைந்து போனோம்: நீர் கொண்ட சினத்தால் அதிர்ந்து போனோம்.
8. எங்கள் பாவங்கள் எல்லாம் உம் கண்முன் வைத்தீர்: மறைவான எம் பாவங்கள் உம் திருமுகத்தின் ஒளியிலே உள்ளன.
9. உம் கோபத்தில் எங்கள் வாழ்நாளெல்லாம் கடந்து போயிற்று. ஒரு மூச்சுபோல முடிந்து விட்டது எங்கள் வாழ்வு
10. எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகள்; வலிமையுடையோர்க்கு எண்பது; அவற்றில் பெரும் பகுதி வருத்தமும் வீண் கவலையுமே! ஏனெனில், அவை விரைவில் கழிந்து போகின்றன: நாங்களும் அவற்றோடு போய்விடுகிறோம்.
11. உமது கோபத்தின் வல்லமையை உணர்ந்தவன் யார்? உம்மிடம் காட்டவேண்டிய அச்சத்திற்கு ஏற்றபடி உம் கடுஞ்சினத்தை அறிந்தவன் யார்?
12. உள்ளத்தின் ஞானத்தை அடையுமாறு, எங்கள் வாழ்நாளைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்.
13. ஆண்டவரே, திரும்பி வாரும்; எவ்வளவு காலம் கோபம் கொள்வீர்? உம் ஊழியர் மீது இரக்கம் வையும்.
14. உம் இரக்கப் பெருக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும்: எம் வாழ்நாளெல்லாம் களி கூர்ந்து அகமகிழ்வோம்.
15. எங்களை நீர் தண்டித்த காலத்திற்கும், எங்கள் மீது துன்பங்கள் வந்த காலத்திற்கும் ஏற்றவாறு எங்களை மகிழ்வித்தருளும்.
16. உம் திருச்செயலை உம் அடியார்கள் காண்பார்களாக: அவர்களுடைய மக்களுக்கு உம் மகிமை விளங்குவதாக.
17. நம் ஆண்டவராகிய கடவுள் இன்முகம் காட்டுவாராக: எங்கள் வேலைகளைப் பயனுள்ளவையாக்கும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 90 of Total Chapters 150
சங்கீதம் 90:5
1. ஆண்டவரே, தலைமுறை தலைமுறையாக நீரே எங்களுக்குப் புகலிடம்.
2. மலைகள் தோன்றுமுன்பே, பூமியும் உலகும் உண்டாகு முன்பே, ஊழ் ஊழிக்காலமாக இறைவா, நீர் இருக்கிறீர்.
3. மண்ணோடு மண்ணாகும்படி நீர் மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறீர்: "மனுமக்களே மண்ணாகத் திரும்புங்கள்" என்கிறீர்.
4. ஏனெனில், உமக்கு ஆயிரம் ஆண்டுகள் கூட, கடந்து போன நேற்றைய தினத்தைப் போலவும், ஓர் இரவுச் சாமத்தைப் போலவும் உள்ளன.
5. அவர்களை எடுத்து விடுகிறீர். வைகறையில் கண்ட கனவைப் போலவும், செழித்து வளரும் பூண்டைப் போலவும் ஆகிறார்கள்.
6. காலையில் பூக்கிறது, செழித்திருக்கிறது: மாலையிலோ வாடி விடுகிறது.
7. உம் கோபத்தால் நாங்கள் தொலைந்து போனோம்: நீர் கொண்ட சினத்தால் அதிர்ந்து போனோம்.
8. எங்கள் பாவங்கள் எல்லாம் உம் கண்முன் வைத்தீர்: மறைவான எம் பாவங்கள் உம் திருமுகத்தின் ஒளியிலே உள்ளன.
9. உம் கோபத்தில் எங்கள் வாழ்நாளெல்லாம் கடந்து போயிற்று. ஒரு மூச்சுபோல முடிந்து விட்டது எங்கள் வாழ்வு
10. எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகள்; வலிமையுடையோர்க்கு எண்பது; அவற்றில் பெரும் பகுதி வருத்தமும் வீண் கவலையுமே! ஏனெனில், அவை விரைவில் கழிந்து போகின்றன: நாங்களும் அவற்றோடு போய்விடுகிறோம்.
11. உமது கோபத்தின் வல்லமையை உணர்ந்தவன் யார்? உம்மிடம் காட்டவேண்டிய அச்சத்திற்கு ஏற்றபடி உம் கடுஞ்சினத்தை அறிந்தவன் யார்?
12. உள்ளத்தின் ஞானத்தை அடையுமாறு, எங்கள் வாழ்நாளைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்.
13. ஆண்டவரே, திரும்பி வாரும்; எவ்வளவு காலம் கோபம் கொள்வீர்? உம் ஊழியர் மீது இரக்கம் வையும்.
14. உம் இரக்கப் பெருக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும்: எம் வாழ்நாளெல்லாம் களி கூர்ந்து அகமகிழ்வோம்.
15. எங்களை நீர் தண்டித்த காலத்திற்கும், எங்கள் மீது துன்பங்கள் வந்த காலத்திற்கும் ஏற்றவாறு எங்களை மகிழ்வித்தருளும்.
16. உம் திருச்செயலை உம் அடியார்கள் காண்பார்களாக: அவர்களுடைய மக்களுக்கு உம் மகிமை விளங்குவதாக.
17. நம் ஆண்டவராகிய கடவுள் இன்முகம் காட்டுவாராக: எங்கள் வேலைகளைப் பயனுள்ளவையாக்கும்.
Total 150 Chapters, Current Chapter 90 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References