3. மண்ணோடு மண்ணாகும்படி நீர் மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறீர்: "மனுமக்களே மண்ணாகத் திரும்புங்கள்" என்கிறீர்.
|
4. ஏனெனில், உமக்கு ஆயிரம் ஆண்டுகள் கூட, கடந்து போன நேற்றைய தினத்தைப் போலவும், ஓர் இரவுச் சாமத்தைப் போலவும் உள்ளன.
|
5. அவர்களை எடுத்து விடுகிறீர். வைகறையில் கண்ட கனவைப் போலவும், செழித்து வளரும் பூண்டைப் போலவும் ஆகிறார்கள்.
|
8. எங்கள் பாவங்கள் எல்லாம் உம் கண்முன் வைத்தீர்: மறைவான எம் பாவங்கள் உம் திருமுகத்தின் ஒளியிலே உள்ளன.
|
9. உம் கோபத்தில் எங்கள் வாழ்நாளெல்லாம் கடந்து போயிற்று. ஒரு மூச்சுபோல முடிந்து விட்டது எங்கள் வாழ்வு
|
10. எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகள்; வலிமையுடையோர்க்கு எண்பது; அவற்றில் பெரும் பகுதி வருத்தமும் வீண் கவலையுமே! ஏனெனில், அவை விரைவில் கழிந்து போகின்றன: நாங்களும் அவற்றோடு போய்விடுகிறோம்.
|
11. உமது கோபத்தின் வல்லமையை உணர்ந்தவன் யார்? உம்மிடம் காட்டவேண்டிய அச்சத்திற்கு ஏற்றபடி உம் கடுஞ்சினத்தை அறிந்தவன் யார்?
|
14. உம் இரக்கப் பெருக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும்: எம் வாழ்நாளெல்லாம் களி கூர்ந்து அகமகிழ்வோம்.
|
15. எங்களை நீர் தண்டித்த காலத்திற்கும், எங்கள் மீது துன்பங்கள் வந்த காலத்திற்கும் ஏற்றவாறு எங்களை மகிழ்வித்தருளும்.
|