4. ஏனெனில், நீர் என் வழக்கை விசாரித்து எனக்கு நீதி வழங்க முன்வந்தீர்: நேர்மையுள்ள நீதிபதியாய் உம் அரியணையில் அமர்ந்தீர்.
|
6. எதிரிகளின் நகரங்களைத் தரைமட்டமாக்கினீர், அவர்கள் தொலைந்து போயினர், தலையெடுக்காமல் ஒழிந்தே போயினர்: அவர்களுடைய நினைவே இல்லாமற் போய்விட்டது.
|
8. அவர் தாமே உலகினர்க்கெல்லாம் நீதியுடன் தீர்ப்புக் கூறுவார்: நேர்மையோடு மக்களனைவர்க்கும் நீதி வழங்குவார்.
|
11. சீயோனில் உறையும் ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்: மக்களினங்களிடையே அவருடைய அருஞ் செயல்களை அறிவியுங்கள்.
|
13. ஆண்டவரே, என்மீது இரக்கம் வையும்: மரண வாயிலிலிருந்து என்னைக் கைதூக்கிவிடுபவரே, என் எதிரிகளின் கையில் நான் படும் துன்பத்தைப் பாரும்.
|
14. அப்போது சீயோன் நகர வாயில்களில் நான் உம் புகழ்ச்சிகளைச் சாற்றுவேன்: நீர் எனக்களித்த உதவியை நினைத்து அக்களிப்பேன்.
|
15. புறவினத்தார் தாங்கள் வெட்டிய குழியில் தாங்களே விழுந்தனர்: அவர்கள் மறைவாக வைத்த கண்ணியில் அவர்களுடைய கால்களே சிக்கிக்கொண்டன.
|
16. ஆண்டவர் தம்மை வெளிப்படுத்தினார், நீதி வழங்கினார்: தான் செய்த செயல்களிலேயே பாவியானவன் அகப்பட்டுக் கொண்டான்.
|
17. பாவிகள் கீழுலகுக்குப் போய் ஒழிவார்களாக: கடவுளை மறக்கும் புற இனத்தார் அனைவரும் அங்ஙனமே ஒழிவார்களாக.
|
18. ஏழைகளை இறுதி வரை மறந்து போகமாட்டார் ஆண்டவர்: எளியோர் அவர் மேல் கொண்ட நம்பிக்கை ஒரு நாளும் வீணாகாது.
|
19. ஆண்டவரே எழுந்தருளும், மனிதனின் கை ஒங்கவிடாதேயும்: உம் திருமுன் புற இனத்தார் எல்லாருக்கும் தீர்ப்பு வழங்கப்படட்டும்.
|