1. ஆண்டவரது அருட்செயல்களை நினைத்து நான் என்றென்றும் பாடுவேன்: உமது சொல்லுறுதியை எல்லாத் தலைமுறைகளுக்கும் என் நாவால் எடுத்துரைப்பேன்.
|
5. ஆண்டவரே, வானங்கள் உம் வியத்தகு செயல்களைப் போற்றிப் புகழ்கின்றன: வானோர் கூட்டம் உமது சொல்லுறுதியைக் கொண்டாடும்.
|
7. புனிதர்களின் கூட்டத்தில் கடவுள் அச்சத்துக்குரியவர்: அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அச்சத்துக்குரியவர்; மாண்பு மிக்கவர்.
|
8. ஆண்டவரே, சேனைகளின் இறைவா, உமக்கு நிகர் யார்? ஆண்டவரே, நீர் வல்லமையுள்ளவர்: உமது சொல்லுறுதி உம்மைச் சூழ்ந்துள்ளது.
|
12. வடக்கையும் தெற்கையும் உருவாக்கியவர் நீரே: தாபோர் மலையும் எர்மோன் மலையும் உம் பெயரைக் கேட்டுக் களிகூர்கின்றன.
|
15. உமது விழா ஆர்ப்பரிப்பில் பங்குபெறுவோர் பேறு பெற்றோர்: ஆண்டவரே, அவர்கள் உம் முகத்தின் ஒளியில் நடக்கின்றனர்.
|
17. ஏனெனில், அவர்களது வல்லமைக்குச் சிறப்புத் தருபவர் நீர்: உம் தயவால் தான் எங்கள் வலிமை ஓங்கியுள்ளது.
|
19. ஆதியில், உம் புனிதர்களுக்குக் காட்சி தந்து நீர் சொன்னது: 'வல்லவனுக்கு மணிமுடி சூட்டினேன்; மக்களினின்று ஒருவனை நான் தேர்ந்தெடுத்து மகிமைப்படுத்தினேன்.
|
21. அதனால் என் கைவன்மை என்றும் அவருக்குத் துணை நிற்கச் செய்வேன்: என் புயப்பலம் அவரை ஒடுக்க முடியாது.
|
32. அவர்கள் செய்த குற்றத்திற்காகச் சாட்டையால் அடிப்பேன்; அவர்கள் பாவங்களுக்காகக் கசையால் அடிப்பேன்: அடி கொடுத்து அவர்களைத் திருத்துவேன்.
|
35. என் புனிதத்தை வைத்து ஒரே முறையாய் நான் ஆணையிட்டுச் சொன்னேன்: தாவீதிடம் நான் பொய் சொல்லவே மாட்டேன்.
|
36. அவரது சந்ததி என்றென்றும் நிலைத்திருக்கும்: அவரது அரியணை கதிரவனை போல் என் முன் என்றும் விளங்கும்.
|
39. உம் ஊழியனுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைப் புறக்கணித்தீர்; அவரது மணிமுடியைத் தரையில் தூக்கி எறிந்தீர்.
|
42. எதிரிகளின் வலக்கை ஓங்கச் செய்தீர்: அவரைப் பகைத்தவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியால் துள்ளச் செய்தீர்.
|
46. எது வரைக்கும் ஆண்டவரே: எந்நாளுமே மறைந்திருப்பீரோ? எதுவரை உமது சினம் நெருப்¢புப் போல் மூண்டெழும்?
|
47. எவ்வளவு குறுகியது என் வாழ்வு என்பதை நினைவுகூரும்: நீர் படைத்த மனிதர்கள் எவ்வளவு நிலையற்றவர்கள் என்று நினைவுகூரும்.
|
49. ஆண்டவரே, ஆதிகாலத்தில் நீர் காட்டிய தயவெல்லாம் இப்போதெங்கே? உம் சொல்லுறுதியால் தாவீதுக்கு ஆணையிட்டுச் சொன்ன தயவெல்லாம் எங்கே?
|
50. ஆண்டவரே, உம் ஊழியர் படும் நிந்தனைகளையெல்லாம் நினைவுகூரும்: புறவினத்தார் காட்டும் பகையும் எதிர்ப்பும் என் நெஞ்சிலே தாங்குகிறேனே!
|
51. ஆண்டவரே, உம் எதிரிகள் நீர் அபிஷுகம் பண்ணினவரைப் பழிக்கிறார்கள்: அவர் போகுமிடமெல்லாம் அவரைத் தூற்றுகிறார்கள்.
|