1. என் ஆண்டவரே, என் இறைவா, பகலில் உம்மை நோக்கி அழைக்கிறேன்: இரவிலும் உம் திருமுன் அழுது புலம்புகிறேன்.
|
5. இறந்தவர்களுள் ஒருவனாய்க் கிடக்கிறேன். கொலையுண்டு கல்லறையில் வைக்கப்பட்டவர்கள் போல் ஆனேன். அவர்களை நீர் நினைப்பதில்லை: உம் அரவணைப்பினின்று அவர்கள் விலகப்பட்டனர்.
|
7. உமது சினம் என்மேல் வந்து விழுகின்றது. உமது சினம் என்னும் கடலின் வெள்ளத்தால் என்னை நீர் மூழ்கடிக்கின்றீர்.
|
8. எனக்கு அறிமுகமானவர்கள் என்னை விட்டு அகலச் செய்தீர்: அவர்களுக்கு என்மீது வெறுப்பு உண்டாகச் செய்தீர். நான் அடைபட்டுக் கிடக்கிறேன்: வெளியேற முடியாமலிருக்கிறேன்.
|
9. என் கண்கள் துன்பத்தினால் கலங்கிப் பஞ்சடைந்து போயின: ஆண்டவரே, நாள் முழுவதும் உம்மை நோக்கி என் கைகளை நீட்டினேன்.
|
11. கல்லறையில் உமது நன்மைத்தனத்தை எடுத்துரைப்பவர்கள் யார்? கீழ் உலகில் உமது பிரமாணிக்கத்தைப் போற்றுபவர்கள் யார்?
|
13. ஆண்டவரே, நானோவெனில் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்: காலையில் என் வேண்டுதல் உம்மை நோக்கி எழும்புகிறது.
|
14. ஆண்டவரே, ஏன் என் ஆன்மாவைப் புறக்கணிக்கிறீர்? என்னிடமிருந்து ஏன் உமது திருமுகத்தை மறைத்துக் கொள்கிறீர்?
|
15. நான் துயர்மிக்கவனாயிருக்கிறேன், என் இளமை முதல் இறந்து கொண்டே இருக்கிறேன்; உம் தண்டைனைகளைத் தாங்கித் தளர்ச்சியடைந்துள்ளேன்.
|
17. அவைகள் நாள் முழுவதும் வெள்ளம் போல் என்னைச் சூழ்ந்து கொண்டு, என்னை ஒரே சமயத்தில் வளைத்துக் கொண்டன.
|