தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, செவிசாய்த்து என் மன்றாட்டைக் கேட்டருளும்: ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்.
2. நான் உமக்கு அடியான் என்பதால் என்னைக் காப்பாற்றியருளும்: என் இறைவா, உம்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற உம் ஊழியனை மீட்டருளும்.
3. ஆண்டவரே, நீரே என் கடவுள், என்மேல் இரக்கமாயிரும்: ஏனெனில், எந்நேரமும் நான் உம்மை நோக்கி அபயக்குரல் எழுப்புகிறேன்.
4. ஆண்டவரே, என் ஆன்மாவை உம்மை நோக்கி எழுப்பினேன்: ஆதலால் உம் ஊழியனுடைய உள்ளத்தை மகிழ்வித்தருளும்.
5. ஏனெனில் ஆண்டவரே, நீர் நல்லவர்; கருணைமிக்கவர்: உம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் மிகுந்த அருளன்பு காட்டுகிறவர்.
6. ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் வேண்டுதலின் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
7. என் துன்ப நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்: நீரும் என் மன்றாட்டைக் கேட்டருள்வீர்.
8. ஆண்டவரே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் எவருமில்லை: உம் செயல்களுக்கு நிகரானவையுமில்லை.
9. ஆண்டவரே, நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம்மை வணங்குவார்கள்: உமது புகழைச் சாற்றுவார்கள்.
10. ஏனெனில், நீர் மகத்துவமுள்ளவர், வியப்புக்குரிய செயல்களைச் செய்பவர்: நீர் ஒருவரே கடவுள்.
11. ஆண்டவரே, உம் உண்மையின்படி நான் நடக்கும் வண்ணம் எனக்கு வழிகாட்டும்: உம் திருப்பெயருக்கு அஞ்சும் வண்ணம் என் நெஞ்சை நடப்பியும்.
12. என் ஆண்டவராகிய இறைவா, என் முழு இருதயத்தோடு உமக்குப் புகழ் பாடுவேன்: உமது திருப்பெயர் என்றென்றும் விளங்கச் செய்வேன்.
13. ஏனெனில், நீர் எனக்குக் காட்டியுள்ள இரக்கம் மிகப் பெரிது: ஆழ்ந்த பாதாளத்திலிருந்து என் ஆத்துமத்தை விடுதலை செய்தீர்.
14. இறைவா, செருக்குற்றோர் எனக்கு எதிராக எழும்பினார்கள்; வலிமையுள்ளோர் ஒன்று கூடி என் உயிருக்குக் கண்ணி வைத்தனர்: அவர்கள் உம்மை மதிப்பதேயில்லை.
15. ஆனால் ஆண்டவரே, நீர் இரக்கமுள்ள கடவுள்; அருள் மிக்கவர், சினந்து கொள்ளத்தாமதிப்பவர்: அளவுகடந்த அருளன்புள்ளவர், சொல் தவறாதவர்.
16. என்மீது உம் கடைக்கண் காட்டி எனக்கு இரங்கியருளும்; உம் ஊழியனுக்கு ஆற்றல் தாரும், உம் அடியாளின் மகனை இரட்சியும்.
17. ஆண்டவரே, நீர் எனக்கு உதவி புரிந்து எனக்கு ஆறுதல் அளித்தபடியால், என்னைப் பகைக்கிறவர்கள் பார்த்து நாணமடையும் வண்ணம், உம் தயவு எனக்குள்ளதென்பதற்கு ஓர் அடையாளம் காட்டியருளும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 86 of Total Chapters 150
சங்கீதம் 86:47
1. ஆண்டவரே, செவிசாய்த்து என் மன்றாட்டைக் கேட்டருளும்: ஏனெனில், நான் ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்.
2. நான் உமக்கு அடியான் என்பதால் என்னைக் காப்பாற்றியருளும்: என் இறைவா, உம்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற உம் ஊழியனை மீட்டருளும்.
3. ஆண்டவரே, நீரே என் கடவுள், என்மேல் இரக்கமாயிரும்: ஏனெனில், எந்நேரமும் நான் உம்மை நோக்கி அபயக்குரல் எழுப்புகிறேன்.
4. ஆண்டவரே, என் ஆன்மாவை உம்மை நோக்கி எழுப்பினேன்: ஆதலால் உம் ஊழியனுடைய உள்ளத்தை மகிழ்வித்தருளும்.
5. ஏனெனில் ஆண்டவரே, நீர் நல்லவர்; கருணைமிக்கவர்: உம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் மிகுந்த அருளன்பு காட்டுகிறவர்.
6. ஆண்டவரே, என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் வேண்டுதலின் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
7. என் துன்ப நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்: நீரும் என் மன்றாட்டைக் கேட்டருள்வீர்.
8. ஆண்டவரே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் எவருமில்லை: உம் செயல்களுக்கு நிகரானவையுமில்லை.
9. ஆண்டவரே, நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம்மை வணங்குவார்கள்: உமது புகழைச் சாற்றுவார்கள்.
10. ஏனெனில், நீர் மகத்துவமுள்ளவர், வியப்புக்குரிய செயல்களைச் செய்பவர்: நீர் ஒருவரே கடவுள்.
11. ஆண்டவரே, உம் உண்மையின்படி நான் நடக்கும் வண்ணம் எனக்கு வழிகாட்டும்: உம் திருப்பெயருக்கு அஞ்சும் வண்ணம் என் நெஞ்சை நடப்பியும்.
12. என் ஆண்டவராகிய இறைவா, என் முழு இருதயத்தோடு உமக்குப் புகழ் பாடுவேன்: உமது திருப்பெயர் என்றென்றும் விளங்கச் செய்வேன்.
13. ஏனெனில், நீர் எனக்குக் காட்டியுள்ள இரக்கம் மிகப் பெரிது: ஆழ்ந்த பாதாளத்திலிருந்து என் ஆத்துமத்தை விடுதலை செய்தீர்.
14. இறைவா, செருக்குற்றோர் எனக்கு எதிராக எழும்பினார்கள்; வலிமையுள்ளோர் ஒன்று கூடி என் உயிருக்குக் கண்ணி வைத்தனர்: அவர்கள் உம்மை மதிப்பதேயில்லை.
15. ஆனால் ஆண்டவரே, நீர் இரக்கமுள்ள கடவுள்; அருள் மிக்கவர், சினந்து கொள்ளத்தாமதிப்பவர்: அளவுகடந்த அருளன்புள்ளவர், சொல் தவறாதவர்.
16. என்மீது உம் கடைக்கண் காட்டி எனக்கு இரங்கியருளும்; உம் ஊழியனுக்கு ஆற்றல் தாரும், உம் அடியாளின் மகனை இரட்சியும்.
17. ஆண்டவரே, நீர் எனக்கு உதவி புரிந்து எனக்கு ஆறுதல் அளித்தபடியால், என்னைப் பகைக்கிறவர்கள் பார்த்து நாணமடையும் வண்ணம், உம் தயவு எனக்குள்ளதென்பதற்கு ஓர் அடையாளம் காட்டியருளும்.
Total 150 Chapters, Current Chapter 86 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References