2. நான் உமக்கு அடியான் என்பதால் என்னைக் காப்பாற்றியருளும்: என் இறைவா, உம்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற உம் ஊழியனை மீட்டருளும்.
|
3. ஆண்டவரே, நீரே என் கடவுள், என்மேல் இரக்கமாயிரும்: ஏனெனில், எந்நேரமும் நான் உம்மை நோக்கி அபயக்குரல் எழுப்புகிறேன்.
|
5. ஏனெனில் ஆண்டவரே, நீர் நல்லவர்; கருணைமிக்கவர்: உம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் மிகுந்த அருளன்பு காட்டுகிறவர்.
|
11. ஆண்டவரே, உம் உண்மையின்படி நான் நடக்கும் வண்ணம் எனக்கு வழிகாட்டும்: உம் திருப்பெயருக்கு அஞ்சும் வண்ணம் என் நெஞ்சை நடப்பியும்.
|
12. என் ஆண்டவராகிய இறைவா, என் முழு இருதயத்தோடு உமக்குப் புகழ் பாடுவேன்: உமது திருப்பெயர் என்றென்றும் விளங்கச் செய்வேன்.
|
13. ஏனெனில், நீர் எனக்குக் காட்டியுள்ள இரக்கம் மிகப் பெரிது: ஆழ்ந்த பாதாளத்திலிருந்து என் ஆத்துமத்தை விடுதலை செய்தீர்.
|
14. இறைவா, செருக்குற்றோர் எனக்கு எதிராக எழும்பினார்கள்; வலிமையுள்ளோர் ஒன்று கூடி என் உயிருக்குக் கண்ணி வைத்தனர்: அவர்கள் உம்மை மதிப்பதேயில்லை.
|
15. ஆனால் ஆண்டவரே, நீர் இரக்கமுள்ள கடவுள்; அருள் மிக்கவர், சினந்து கொள்ளத்தாமதிப்பவர்: அளவுகடந்த அருளன்புள்ளவர், சொல் தவறாதவர்.
|
16. என்மீது உம் கடைக்கண் காட்டி எனக்கு இரங்கியருளும்; உம் ஊழியனுக்கு ஆற்றல் தாரும், உம் அடியாளின் மகனை இரட்சியும்.
|
17. ஆண்டவரே, நீர் எனக்கு உதவி புரிந்து எனக்கு ஆறுதல் அளித்தபடியால், என்னைப் பகைக்கிறவர்கள் பார்த்து நாணமடையும் வண்ணம், உம் தயவு எனக்குள்ளதென்பதற்கு ஓர் அடையாளம் காட்டியருளும்.
|