தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, உமது நாட்டின் மீது அருள் கூர்ந்தீர்: யாக்கோபின் இனத்தார் பட்ட துன்பங்களை இன்பமாக மாற்றினீர்.
2. மக்கள் செய்த குற்றத்தை மன்னித்தீர்: அவர்கள் செய்த பாவங்களை எல்லாம் போக்கினீர்.
3. உம்முடைய கடுஞ்சினத்தை எல்லாம் அடக்கிக்கொண்டீர்: உமது வெஞ்சினத்தை நீர் காட்டவில்லை.
4. எம் மீட்பரான இறைவா, எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும்: எங்கள்மீது உமக்கிருந்த வெகுளி நீங்கட்டும்.
5. என்றென்றைக்குமா எங்கள் மேல் நீர் கோபம் காட்டுவீர்? தலைமுறை தலைமுறையாகவா உமது சினம் நீடிக்கும்?
6. எங்களுக்கு நீர் மீளவும் வாழ்வு அளிக்காமலா இருப்பீர்? உம் மக்கள் உம்மை நினைத்து மகிழ்ச்சி கொள்ளாமலா இருப்பர்?
7. ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும். உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
8. ஆண்டவராகிய இறைவன் சொல்வதென்னவென்று நான் கேட்பேன்: அவர் பேசுவதோ சமாதானமே. தம் மக்களுக்கும் தம் புனிதருக்கும், மனந்திரும்பி அவரிடம் செல்வோருக்கும் அவர் கூறுவது சமாதானமே.
9. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு மீட்பு மெய்யாகவே அண்மையில் உள்ளது: அதனால் நம் நாட்டில் அவரது மாட்சிமை குடிகொள்ளும்.
10. இரக்கமும் சொல்லுறுதியும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் அமைதியும் ஒன்றையொன்று அரவணைக்கும்.
11. உண்மை பூமியினின்று முளைத்தெழும். நீதி நேர்மை வானத்தினின்று எட்டிப்பார்க்கும்.
12. நன்மையானதை ஆண்டவர் அருள்வார்: நம் நிலமும் தன் பலனைத் தரும்.
13. நீதி அவருக்கு முன்செல்லும்: மீட்பும் அவரைப் பின்தொடரும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 85 of Total Chapters 150
சங்கீதம் 85:157
1. ஆண்டவரே, உமது நாட்டின் மீது அருள் கூர்ந்தீர்: யாக்கோபின் இனத்தார் பட்ட துன்பங்களை இன்பமாக மாற்றினீர்.
2. மக்கள் செய்த குற்றத்தை மன்னித்தீர்: அவர்கள் செய்த பாவங்களை எல்லாம் போக்கினீர்.
3. உம்முடைய கடுஞ்சினத்தை எல்லாம் அடக்கிக்கொண்டீர்: உமது வெஞ்சினத்தை நீர் காட்டவில்லை.
4. எம் மீட்பரான இறைவா, எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும்: எங்கள்மீது உமக்கிருந்த வெகுளி நீங்கட்டும்.
5. என்றென்றைக்குமா எங்கள் மேல் நீர் கோபம் காட்டுவீர்? தலைமுறை தலைமுறையாகவா உமது சினம் நீடிக்கும்?
6. எங்களுக்கு நீர் மீளவும் வாழ்வு அளிக்காமலா இருப்பீர்? உம் மக்கள் உம்மை நினைத்து மகிழ்ச்சி கொள்ளாமலா இருப்பர்?
7. ஆண்டவரே, உமது இரக்கத்தை எங்களுக்குக் காட்டியருளும். உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
8. ஆண்டவராகிய இறைவன் சொல்வதென்னவென்று நான் கேட்பேன்: அவர் பேசுவதோ சமாதானமே. தம் மக்களுக்கும் தம் புனிதருக்கும், மனந்திரும்பி அவரிடம் செல்வோருக்கும் அவர் கூறுவது சமாதானமே.
9. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு மீட்பு மெய்யாகவே அண்மையில் உள்ளது: அதனால் நம் நாட்டில் அவரது மாட்சிமை குடிகொள்ளும்.
10. இரக்கமும் சொல்லுறுதியும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் அமைதியும் ஒன்றையொன்று அரவணைக்கும்.
11. உண்மை பூமியினின்று முளைத்தெழும். நீதி நேர்மை வானத்தினின்று எட்டிப்பார்க்கும்.
12. நன்மையானதை ஆண்டவர் அருள்வார்: நம் நிலமும் தன் பலனைத் தரும்.
13. நீதி அவருக்கு முன்செல்லும்: மீட்பும் அவரைப் பின்தொடரும்.
Total 150 Chapters, Current Chapter 85 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References