1. ஆண்டவரே, உமது நாட்டின் மீது அருள் கூர்ந்தீர்: யாக்கோபின் இனத்தார் பட்ட துன்பங்களை இன்பமாக மாற்றினீர்.
|
4. எம் மீட்பரான இறைவா, எங்களுக்கு மீண்டும் வாழ்வளித்தருளும்: எங்கள்மீது உமக்கிருந்த வெகுளி நீங்கட்டும்.
|
6. எங்களுக்கு நீர் மீளவும் வாழ்வு அளிக்காமலா இருப்பீர்? உம் மக்கள் உம்மை நினைத்து மகிழ்ச்சி கொள்ளாமலா இருப்பர்?
|
8. ஆண்டவராகிய இறைவன் சொல்வதென்னவென்று நான் கேட்பேன்: அவர் பேசுவதோ சமாதானமே. தம் மக்களுக்கும் தம் புனிதருக்கும், மனந்திரும்பி அவரிடம் செல்வோருக்கும் அவர் கூறுவது சமாதானமே.
|
9. அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு மீட்பு மெய்யாகவே அண்மையில் உள்ளது: அதனால் நம் நாட்டில் அவரது மாட்சிமை குடிகொள்ளும்.
|