1. நம் துணைவராம் இறைவனுக்கு அக்களிப்போடு புகழ் பாடுங்கள்: யாக்கோபின் இறைவனை நினைத்து ஆர்ப்பரியுங்கள்.
|
5. எகிப்தை விட்டு வெளியேறிய போது இச்சட்டத்தை அவர் சூசையின் இனத்தவர்க்குத் தந்தார். அறியாத மொழியொன்று என் செவியில் விழுந்தது.
|
6. சுமையின் கீழ் அவர்கள் நொறுங்காத வண்ணம் அவர்களை விடுவித்தேன்: மண் சுமந்து உழைத்து வந்த அவர்களை விடுவித்தேன்.
|
7. துன்ப வேளையில் நீ என்னைக் கூவி அழைத்தாய், நான் உனக்கு விடுதலை அளித்தேன்; இடி முழக்கத்தினிடையே மேகத்தினின்று உனக்கு மறுமொழி சொன்னேன்: மெரீபாவின் நீர் ஊற்றண்டையில் உன்னைச் சோதித்தறிந்தேன்.
|
8. என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு அறிவுரை கூறுவேன்: இஸ்ராயேலே, நீ எனக்குச் செவிசாய்ப்பாயானால் எவ்வளவோ நலமாயிருக்கும்!
|
10. எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேற்றிய கடவுளாகிய ஆண்டவர் நாமே: உன் வாயைத் திற; அதை நான் நிரப்புவேன்.
|
13. என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால் எவ்வளவோ நலம்! நான் காட்டிய வழியில் இஸ்ராயேல் நடந்திருந்தால் எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்!
|
14. அவர்கள் எதிரிகளை உடனுக்குடனே ஒழித்திருப்பேன்: என் கரத்தின் வல்லமை அவர்கள் எதிரிகளைத் தாக்கியிருக்கும்.
|
15. ஆண்டவரைப் பகைக்கிறவர்கள் அவரிடம் இச்சகம் பேசியிருப்பார்கள்: அவர்களுடைய தண்டனைத் தீர்ப்பு என்றென்றும் நீடித்திருக்கும்.
|
16. கோதுமையின் கொழுமையால் நான் இஸ்ராயேல் மக்களை உண்பித்திருப்பேன்: காட்டுத் தேனால் அவர்களுக்கு நிறைவளித்திருப்பேன்'.
|