1. ஆண்டவரே, எம் ஆண்டவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு வியப்புக்குரியது! நீர் உம் மகிமையை வானங்களுக்கு மேலாக விளங்கச் செய்தீர்.
|
2. உம் எதிரிகள் பின்னடையுமாறு, சிறுவர்களின் வாயும் உம்மை புகழ்ந்தேத்தச் செய்தீர்: எதிரியையும் பகைவனையும் ஒடுக்கவே இங்ஙனம் செய்தீர்.
|
4. மனிதனை நீர் ஒரு பொருட்டாக நினைக்க அவன் யார்? அவனைப்பற்றி அக்கறை கொள்ள அவன் யார் என்று சொல்லத் தோன்றுகிறது!
|
5. வானதூதரை விட அவனைச் சிறிது தாழ்ந்தவனாகப் படைத்தீர்: மாண்பையும் பெருமையையும் அவனுக்கு முடியாகச் சூட்டினீர்.
|
6. உம் படைப்புகள் அனைத்தின்மீதும் அவனுக்கு அதிகாரம் தந்தீர்: அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
|
8. வானத்துப் பறவைகள், கடலில் வாழும் மீன்கள், அதில் நீந்தும் அனைத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
|