4. அவர்களின் மக்களான உங்களிடமிருந்து அவற்றை மறைக்க மாட்டோம் வரும் தலைமுறைக்கு அவற்றை எடுத்துச் சொல்வோம். ஆண்டவருடைய மாண்பு மிக்க செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அற்புதச் செயல்களையும் கூறுவோம்.
|
5. யாக்கோபின் இனத்தாருக்குக் கட்டளையொன்று ஏற்படுத்தினார்; இஸ்ராயேல் மக்களுக்குச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். நம் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதை அவர்கள் மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்பதே அவர் தந்த சட்டம்.
|
6. இனி வரும் தலைமுறையில் பிறக்கும் மக்கள் அதையறியவும், அவர்களும் தங்கள் மக்களுக்கு அவற்றை அறிவிக்கவும்.
|
7. கடவுள் மீது நம்பிக்கை வைக்கவும், அவருடைய செயல்களை மறவாதிருக்கவும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும்.
|
8. தங்கள் முன்னோர்களைப் போல் இவர்களும் எதிர்ப்பு மனமும் அடங்காத்தனமும் கொண்ட தலைமுறையாய் ஆகாதிருக்கவும், நேரிய மனமில்லாத மக்களாய்க் கடவுளுக்குப் பிரமாணிக்கமற்ற உள்ளத்தினராய் இல்லாதிருக்கவும் இப்படி ஒரு சட்டம் தந்தார்.
|
11. அவருடைய செயல்களை அவர்கள் மறந்தனர். தங்கள் கண்முன் அவர் செய்த வியத்தகு செயல்களை அவர்கள் மறந்தனர்.
|
12. எகிப்து நாட்டில் அவர்கள் முன்னோர்கள் காணப் புதுமைகளை அவர் செய்தார், தானிஸ் சமவெளியில் அவற்றைச் செய்தார்.
|
15. பாலைவெளியில் பாறைகளைப் பிளந்தார்; ஆறு போல் நீர் பெருக்கெடுக்கச் செய்தார். அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்.
|
17. அப்படி இருந்தும் அவர்கள் அவருக்கு எதிராய்ப் பாவமே செய்தனர். பாலைவெளியிலே உன்னதமானவரை எதிர்த்தனர்.
|
20. இதோ! அவர் பாறையைத் தட்டினார்; தண்ணீர் புறப்பட்டது, வெள்ளம் போல் ஓடியது. இனித் தம் மக்களுக்கு உணவு கொடுக்க அவரால் முடியுமா? இறைச்சி தேடித்தர இயலுமா?" என்றனர்.
|
21. இதைக் கேட்ட போது ஆண்டவர் சினங்கொண்டெழுந்தார்; யாக்கோபின் இனத்தவருக்கு எதிராக அவரது சினம் நெருப்புப் போல் பற்றியது. இஸ்ராயேலுக்கு எதிராக அவர் சினம் மூண்டெழுந்தது.
|
26. வானினின்று கீழ்த்திசைக் காற்று எழும்பச் செய்தார். தம் வல்லமையால் தெற்கிலிருந்து காற்று வீசச் செய்தார்.
|
31. கடவுளின் சினம் அவர்களுக்கெதிராய் மூண்டெழுந்தது! அவர்களுள் வலிமை மிக்கவர்களை வதைத்தொழித்தார். இஸ்ராயேலின் இளைஞர்களை மடியச் செய்தார்.
|
35. கடவுளே தங்களுக்கு அடைக்கலப் பாறை என்பதை நினைவு கூர்ந்தனர். உன்னத கடவுளே தங்கள் மீட்பரென்பதை நினைவுக்குக் கொணர்ந்தனர்.
|
37. அவரிடம் அவர்கள் காட்டிய மனம் நேர்மையற்றது. அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
|
38. அவரோ இரக்கம் கொண்டவராய், அவர்கள் குற்றத்தை மன்னித்தார். அவர்களை அழித்து விடவில்லை. பலமுறை தம் கோபத்தை அடக்கிக் கொண்டார். தம் சினத்தையெல்லாம் அவர்கள்மேல் காட்டவில்லை.
|
40. பாலைவெளியில் எத்தனையோ முறை அவர்கள் அவருக்குச் சினமூட்டினர். எத்தனையோ முறை அவருடைய மனத்தைப் புண்படுத்தினர்.
|
42. அவரது கை வன்மையை அவர்கள் மறந்து விட்டனர். எதிரியின் கையினின்று அவர்களை மீட்ட நாளை நினைத்தாரில்லை.
|
43. எகிப்தில் அவர் அருங்குறிகளைச் செய்த நாளை மறந்தனர். தானிஸ் சமவெளியில் அவர் புதுமைகளைச் செய்த நாளை நினைக்கவில்லை.
|
46. அவர்கள் விளைச்சலைக் கம்பளிப் பூச்சிகளுக்குக் கொடுத்தார். அவர்கள் உழைப்பின் பயனை வெட்டுக்கிளிகளுக்குக் கொடுத்தார்.
|
48. அவர்களுடைய கால்நடைகளைக் கல் மழைக்கு இரையாக்கினார். அவர்களுடைய ஆடுமாடுகள் இடி மின்னலுக்கு இரையாயின.
|
49. தம் சினத்தின் கொடுமையை அவர்கள் மேல் காட்டினர்; கோபமும் கொடுமையும் துன்பமும் அவர்கள் மேல் விழச் செய்தார், துன்பம் விளைக்கும் தூதர்களைக் கூட்டமாய் அனுப்பினார்.
|
50. தம் கோப வெள்ளம் மடை திறந்து ஓடச் செய்தார். சாவினின்று அவர்களை அவர் காக்கவில்லை; கால் நடைகளைக் கொள்ளை நோய்க்குக் கையளித்தார்.
|
51. எகிப்தில் தலைபேறான ஒவ்வொன்றையும் வதைத்தார்: காம் இனத்தார் இல்லங்களில் தலைச்சன் பிள்ளைகளைச் சாகடித்தார்.
|
52. ஆடுகளைப் போல் தம் மக்களை நடத்திச் சென்றார்: ஆட்டு மந்தையைப் போல் பாலைவெளியில் அவர்களைக் கூட்டிச் சென்றார்.
|
53. பாதுகாப்புடன் அவர்களை அழைத்துச் சென்றார்: அவர்கள் அஞ்சவேயில்லை; அவர்களுடைய எதிரிகளைக் கடல் விழுங்கிற்று.
|
54. தம் புனித நாட்டுக்கு அவர்களை அழைத்துக் கொண்டு போனார்: தம் வலக்கரத்தால் சொந்தமாக்கிக் கொண்ட மலைகளுக்கு அழைத்துச் சென்றார்.
|
55. அவர்கள் போகுமிடத்தில் இருந்த வேற்றினத்தாரை விரட்டி விட்டார்; அந்நாடுகளை இஸ்ராயேலருக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்: அந்நாட்டுக் குடியிருப்புகளில் அவர்களை வாழச் செய்தார்.
|
56. எனினும், அவர்கள் உன்னத கடவுளைச் சோதித்தனர்; அவருக்கு எரிச்சலூட்டினர். அவருடைய கட்டளைகளைக் கடைபிடிக்கவில்லை.
|
57. தங்கள் முன்னோர்களைப் போல் அவர்களும் தவறு செய்தனர்; முறை தவறிப் போயினர்: கோணலான அம்பைப் போல குறி பிசகிப் போயினர்.
|
58. குன்றுகளில் பீடங்கள் கட்டி அவர்கள் சினமூட்டினர்: சிலைகளை வழிபட்டு அவருக்குக் கோபத்தை உண்டாக்கினர்.
|
60. சீலோவில் தமக்கிருந்த உறைவிடத்தை அவர் விட்டகன்றார்: மனிதரிடையே அவர் வாழ்ந்து வந்த கூடாரத்தை விட்டுப் போனார்.
|
63. அவர்களுடைய இளைஞர்களை நெருப்பு எரித்து விட்டது: கன்னிப் பெண்களுக்கு திருமண மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
|
65. ஆண்டவரோ தூக்கத்தினின்று எழுவது போல் விழித்தெழுந்தார்: மது மயக்கம் தெளிந்து எழும் வீரனைப் போல் குதித்தெழுந்தார்.
|
69. வானமட்டும் உயரத் தம் திருத்தலத்தை நிறுவினார்: என்றென்றும் நிலைத்திருக்கும் பூமியைப் போல் அதை ஆக்கினார்.
|
71. கறவல் ஆடுகளின் பின் திரிந்த அவரை அழைத்துக் கொண்டார்: தம் மக்களான யாக்கோபின் இனத்தாரை, தம் உரிமைச் சொத்தான இஸ்ராயேலை மேய்க்கச் செய்தார்.
|