3. அங்கே அவர் பளிச்சிடும் அம்புகளை முறித்தெறிந்தார். கேடயத்தையும் வாளையும் படைக்கலங்களையும் தகர்ந்தெறிந்தார்.
|
5. வலிய நெஞ்சுடையவர்களும் கொள்ளையிடப்பட்டார்கள்; உறக்கத்தில் ஆழ்ந்தார்கள், வலிமையுள்ளவர்கள் அனைவருடைய கைகளும் செயலிழந்தன.
|
8. வானினின்று உமது நீதித் தீர்ப்புக் கேட்கச் செய்தீர்; மாநிலம் அதைக்கேட்டு அச்சமுற்றது, அடங்கிவிட்டது.
|
9. நீதித் தீர்ப்ளிக்கக் கடவுள் எழுந்த போது, மாநிலத்திலுள்ள எளியோரைக் காக்க அவர் எழுந்த போது, மாநிலம் அச்சமுற்று அடங்கி விட்டது.
|
10. சீறி எழுந்த ஏதோம் நாட்டினரும் உமது மகிமையை விளங்கச் செய்வர்: ஹேமாத்தில் எஞ்சி நிற்பவர் உமக்கு விழா எடுப்பர்.
|
11. உங்கள் இறைவனாகிய கடவுளுக்குப் பொருத்தனை செய்து நிறைவேற்றுங்கள். அவரைச் சூழ்ந்துள்ளவர் அனைவரும், அச்சத்துக்குரிய அவருக்குக் காணிக்கை கொண்டு வருவார்களாக.
|