1. உம்மைப் புகழ்கிறோம் ஆண்டவரே, உம்மைப் போற்றிப் புகழ்கிறோம், உமது பெயரைப் போற்றுகிறோம். உமது வியத்தகு செயல்களை எடுத்துரைக்கிறோம்.
|
4. இறுமாப்புடையவர்களை நோக்கி, ' செருக்குக் கொள்ள வேண்டாம்' என்கிறேன். நெறிகெட்டவர்களை நோக்கி, 'உங்கள் பலத்தைக் காட்டவேண்டாம்' என்கிறேன்.
|
5. உன்னதருக்கு எதிராக உங்கள் வல்லமையைக் காட்ட வேண்டாம். கடவுளுக்கு எதிராகச் செருக்குற்றுப் பேச வேண்டாம்.
|
6. ஏனெனில், இவ்வல்லமை உங்களுக்கு கிழக்கினின்றும், வராது, மேற்கினின்றும் வராது. பாலை வெளியினின்றும் வராது; மலைப்பாங்கினின்றும் வராது.
|
8. ஆண்டவருடைய கையில் துன்பக் கலம் ஒன்றிருக்கிறது: நிறைய நுரை பொங்கும் மது ரசக் கலவை அதில் உள்ளது. அதிலிருந்து இறைவன் ஊற்றுகிறார். உலகிலுள்ள தீயோர் அனைவரும் அதை வண்டல் மட்டும் உறிஞ்சிக் குடிப்பர்.
|