5. மனிதப் பிறவிகளுக்குள்ள இடுக்கண்கள் அவர்களுக்கு இல்லை: மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை.
|
8. நகைக்கின்றனர், அவர்கள் தீமையே பேசுகின்றனர். துன்புறுத்துவோம் என இறுமாப்புடன் அச்சுறுத்துகின்றனர்.
|
10. என் மக்களும் அவர்கள் பால் திரும்புகின்றனர்: அவர்கள் செய்வதை எல்லாம் தண்ணீர் குடிப்பது போல் ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
|
15. நானும் அவர்களைப் போல் பேசலாமே" என்று நான் நினைத்திருந்தால், உம் மக்கள் கூட்டத்தின் முன்னிலையில் வாய்மை தவறியவனாவேன்.
|
18. உண்மையிலேயே நீர் அவர்களைச் சறுக்கலான இடத்தில் நிறுத்துகிறீர். பாதாளத்தில் அவர்களை விழச் செய்கிறீர்.
|
20. விழித்தெழுபவனின் கனவு போல் அவர்களுக்கு ஆயிற்று. ஆண்டவரே, அப்படியே நீர் எழும் போது அவர்கள் வேடத்தைக் கலைத்து விடுவீர்.
|
24. உமது அறிவுத் திறனைக்கொண்டு என்னை வழி நடத்துவீர் இறுதியில் நான் உமது மகிமையில் பங்கடையச் செய்வீர்.
|
25. உம்மைத் தவிர எனக்கு வானுலகில் உள்ளவர் யார்? உம்மோடு நான் வாழ்ந்தால் இவ்வுலகில் இன்பம் தருவது எதுவுமில்லையே!
|
26. என் உடலும் உள்ளமும் சோர்வடைகின்றன. ஆயினும் கடவுளே என் உள்ளத்துக்கு அரண், என்றென்றைக்கும் என் உரிமைச் சொத்து.
|
28. கடவுளுக்கருகில் வாழ்வது எனக்கு எவ்வளவோ நலம், ஆண்டவராகிய கடவுளிடம் அடைக்கலம் புகுவது எவ்வளவோ நலம். சீயோனின் வாயில்களில் உம் செயல்களனைத்தையும் நான் எடுத்துரைப்பேன்.
|