1. இறைவா, அரசனிடம் உமது நீதி நேர்மை விளங்கச் செய்யும். அரச மகனிடம் உமது நீதித் தன்மை விளங்கச் செய்யும்.
|
4. எளிய மக்களை அவர் காப்பாராக, ஏழைகளின் மக்களை அவர் பாதுகாப்பாராக: கொடியவனை அவர் நொறுக்கி விடுவாராக.
|
7. அவரது ஆட்சியின் நாளில் நீதி செழித்தோங்குவதாக; சமாதானம் நிலை பெறும் நிலவு இருக்கும் வரையில் சமாதானம் நிலை பெறும்.
|
8. ஒரு கடலினின்று மறு கடல் வரைக்கும் அவர் அதிகாரம் செலுத்துவார்: நதியினின்று உலகின் எல்லை வரை அவர் ஆள்வார்.
|
10. தார்சிஸ் நாட்டு மன்னர்களும் தீவுகளின் மன்னர்களும் காணிக்கைகள் கொணர்வர்: அராபியா, சாபா நாட்டு வேந்தர்களும் காணிக்கை செலுத்துவர்.
|
14. கொடுமையினின்றும் துன்பத்தினின்றும் அவர்களை விடுவிப்பார். அவர்கள் இரத்தம் அவர் முன்னிலையில் விலை மிக்கது.
|
15. அவர் நீடூழி வாழ்க: சாபா நாட்டுத் தங்கம் அவருக்குக் காணிக்கையாகட்டும். அவருக்காக வேண்டுதல் என்றும் எழும்பும். என்றும் அவருக்கு ஆசி மொழி கிடைக்கும்.
|
16. நாட்டில் நிரம்பக் கோதுமை விளையட்டும்; உயர்ந்த மலைகளிலும் அதன் விளைச்சல் லீபானைப் போல் விளங்கட்டும். வயல் வெளிப் புல் போல நகர மக்கள் செழிக்கட்டும்.
|
17. அவரது பெயர் என்றென்றும் வாழ்த்தப் பெறுவதாக: கதிரோன் இருக்கும் வரை அவரது பேரும் புகழும் நிலைப்பதாக. அவர் வழியாய்ப் பூவுலக இனத்தார் அனைவரும் ஆசி பெறுவர். மக்கள் இனத்தார் அனைவரும் அவரைப் பேறுபெற்றவர் எனப் போற்றிப் புகழ்வர்.
|
19. மாட்சியை விளங்கும் அவரது பெயர் என்றென்றும் வாழ்த்துப் பெறுவதாக: வையகம் அனைத்தும் அவர் புகழால் நிரம்புவதாக. ஆமென், ஆமென்.
|