1. என் இறைவனாம் ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுகிறேன்: என்னைத் துன்புறுத்துவோர் அனைவரிடமிருந்தும் எனக்கு மீட்பும் விடுதலையும் அளித்தருளும்.
|
2. எவனும் சிங்கத்தைப் போல என் உயிரைப் பறித்துக் கொள்ள விடாதேயும்: விடுவிப்பவன் எவனுமின்றி என்னை இழுத்துக் கொண்டு போக விடாதேயும்.
|
4. காரணமின்றி எனக்குத் தீங்கிழைத்தவனையே காப்பாற்றிவரும் நான், என் நண்பனுக்குத் தீமை செய்திருந்தேனென்றால்,
|
5. பகைவன் என்னைத் துரத்திப் பிடித்து என் உயிரை நசுக்கி விடுவானாக: என் பெயரைக் கொடுத்துப் பாழ்படுத்துவனாக.
|
6. ஆண்டவரே, சினங்கொண்டு நீர் எழும்புவீராக: என்னைத் துன்புறுத்துவோர் சினத்தை எதிர்த்து எழும்புவீராக. என் சார்பாக நீதியை நிலைநாட்ட எழும்புவீராக: அந்த நீதியை வழங்கியவர் நீரேயன்றோ!
|
7. மக்களினத்தார் உம்மைச் சூழ்ந்துகொள்வார்களாக: அவர்களனைவர் மீதும் உன்னதங்களில் நீர் வீற்றிருப்பீராக.
|
8. மக்களுக்கு நீதிபதியாயிருப்பவர் ஆண்டவரே: உமது நீதிக்கேற்ப ஆண்டவரே, எனக்கு நீதி வழங்கும்; எனது மாசின்மைக்கேற்ப எனக்கு நீதி வழங்கும்.
|
9. தீயவர்களுடைய தீய மனம் ஒழிவதாக: உள்ளத்தையும் உள்ளுறுப்புகளையும் ஆய்ந்தறிபவரே, நீதியுள்ள இறைவனே, நல்லவனை நீர் நிலைநிறுத்தும்.
|
14. பாவியானவன் தீமையைக் கருத்தரிக்கிறான்: தீவினையைக் கருவாய்க் கொண்டிருக்கிறான், வஞ்சகத்தைப் பெற்றெடுக்கிறான்.
|
17. நானோவெனில் ஆண்டவருடைய நீதியை நினைத்து அவரைப் புகழ்வேன்: உன்னதரான ஆண்டவருடைய பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
|