1. எழுகின்றார் இறைவன், சிதறுண்டு போகிறார்கள் அவர் எதிரிகள்: அவரைப் பகைத்தவர்கள் அவர் திருமுன் நிற்காமல் ஓடிப்போகிறார்கள்.
|
2. புகையானது சிதறுவது போல், அவர்கள் சிதறிப் போகட்டும்: அணலில் மெழுகு உருகுவது போல், தீயோர் கடவுள் திருமுன் மடிந்தொழிவர்.
|
4. இறைவனுக்கு இன்னிசை பாடுங்கள், அவரது பெயருக்குப் புகழ் பாடுங்கள்: பாலைவெளியின் வழியாய்ப் பவனி செல்லும் அவருக்குப் பாதையை ஆயத்தப் படுத்துங்கள். ஆண்டவர் என்பது அவரது திருப்பெயர்: அவர் முன்னிலையில் அக்களிப்புறுங்கள்.
|
6. கைவிடப்பட்டவர்க்குக் கடவுள் இல்லமொன்றை ஆயத்தப்படுத்துகிறார், சிறைப் பட்டவர்களை நல்வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்: எதிர்த்து எழுபவர்களோ வறண்ட நிலத்தில் வாழ்வார்கள்.
|
8. பூமி நடுங்கிற்று, வானங்கள் கடவுளைக் கண்டு பனி மழை பெய்தன: இஸ்ராயேலின் கடவுளைக் கண்டு சீனாய் அதிர்ந்தது.
|
9. இறைவனே, உம் உரிமையான நாட்டின் மீது நிரம்ப மழை பொழியச் செய்தீர்: சாரமற்றுப் போன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்.
|
10. உம்முடைய மந்தையான மக்கள் அதில் குடியிருந்தனர்: இறைவனே, உமது அருளால், நீர் ஏழைகளுக்கென்று அதைத் தயார் செய்தீர்.
|
12. சேனைகளை நடத்தும் அரசர்கள் ஓடுகின்றனர், புறங்காட்டி ஓடுகின்றனர்!" வீட்டில் குடியிருப்பவர்கள் கொள்ளைப் பொருள்களைப் பிகிர்ந்துகொள்ளுகின்றனர்.
|
13. ஆட்டுக்கிடைகளுக்கிடையே நீங்கள் இளைப்பாறிய போது, புறாவின் சிறகுகள் வெள்ளிப் போல் மிளிர்ந்தன; அதன் இறக்கைகள் பொன் போல் மின்னின. எல்லாம் வல்லவர் அங்கு அரசர்களைச் சிதறடித்த போது,
|
16. செங்குத்தான மலைகளே, கடவுள் குடியிருக்கத் திருவுளம் கொண்ட மலையை நீங்கள் ஏன் பொறாமையோடு நோக்குகிறீர்கள்? அம்மலையில் அன்றோ என்றும் குடியிருக்க ஆண்டவர் திருவுளம் கொண்டார்.
|
17. கடவுளுடைய தேர்கள் ஆயிரமாயிரம், பல்லாயிரம், சீனாயிலிருந்து புறப்பட்டு ஆண்டவர் திருத்தலத்திற்கு எழுந்தருளி வந்தார்.
|
18. உயர்ந்த மலை மீது ஏறினீர், சிறைப்படுத்தியவர்களை அழைத்துச் சென்றீர்; மானிடரை நீர் கொடையாகப் பெற்றீர்: ஆண்டவராகிய கடவுளோடு குடியிருக்க விரும்பாதவர்களையும் நீர் பெற்றுக் கொண்டீர்.
|
19. ஒவ்வொரு நாளும் ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக: நம் மீட்பாராகிய கடவுள் நம் சுமைகளைத் தாங்கிக் கொள்கின்றார்.
|
21. தம் எதிரிகளின் தலைகளைக் கடவுள் நிச்சயமாய் நொறுக்குகிறார்: பாவ வழியில் நடப்பவர்களின் தலையை உடைத்து விடுகிறார்.
|
23. அப்போது எதிரிகளின் இரத்தத்தில் உன் காலடியைக் கழுவுவாய்: உன் நாய்களுக்கு அவர்கள் இரையாவர்" என்றார் ஆண்டவர்.
|
24. இறைவா, நீர் பவனியாய்ச் செல்லுவதை மக்கள் அனைவரும் காண்பர். என் கடவுளும் அரசருமானவர் திருத்தலத்திற்குப் பவனியாய்ச் செல்வதை அவர்கள் காண்பர்.
|
25. இதோ! பாடகர்கள் முன்நடக்கின்றனர்; யாழ் வாசிப்பவர் இறுதியில் வருகின்றனர்: நடுவில் பெண்கள் தம்புரா மீட்டுகின்றனர்.
|
26. விழாக் கூட்டங்களில் கடவுளை வாழ்த்துங்கள்: இஸ்ராயேல் மக்களே, நீங்கள் ஆண்டவருக்குப் பாடுங்கள்" என்கின்றனர்.
|
27. அதோ பெஞ்சமின் எல்லாருக்கும் இளையவன் முன் நடந்து செல்கிறான், யூதாவின் தலைவர்கள் கூட்டமாய்ச் செல்கின்றனர். சாபுலோன் தலைவர்களும், நெப்தாலின் தலைவர்களும் அங்குள்ளனர்.
|
28. இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும்: எம் சார்பாய்ச் செயலாற்றும் இறைவனே, உம் வல்லமையைக் காட்டியருளும்.
|
30. நாணல்களிடையே குடியிருக்கும் கொடிய விலங்கை அதட்டும்: காளைகள் கூட்டத்தையும், மக்கள் இனத்தாரின் கன்றுகளையும் அதட்டும்.
|
31. வெள்ளியைத் திறையாகக் கொண்டு வந்து கட்டித் தலைபணியச் செய்யும். போரிடுவதில் மகிழ்ச்சி கொள்ளும் இனத்தாரைச் சிதறடியும். எகிப்தினின்று பெருமக்கள் வருவார்களாக: எத்தியோப்பிய மக்கள் கடவுளை நோக்கித் தம் கைகளை உயர்த்துவார்களாக.
|
32. மாநிலத்து அரசுகளே, கடவுளை நினைத்துப் பாருங்கள்; ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்: வான்வெளியில், ஆதிகால வானங்களிடையே பவனி செல்லும் ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்.
|
33. வான்வெளியில் ஆதிகால வானங்களிடையே அவர் பவனி செல்கிறார்: இதோ, அவர் தம் குரலை விடுக்கிறார்; வல்லமையுடன் குரல் விடுக்கிறார்.
|
34. கடவுள் வல்லவரென்று ஏற்றுக்கொள்ளுங்கள்" என்கிறார். இஸ்ராயேல் மீது அவர் மாண்பு விளங்குகின்றது; அவருடைய வல்லமை மேகங்களில் விளங்குகிறது.
|
35. தம் திருத்தலத்தினின்று புறப்படும் இறைவன், இஸ்ராயேலின் கடவுள் அச்சத்துக்குரியவர்; வல்லமை அளிப்பவர் அவரே, தம் மக்களுக்கு வல்லமை கொடுப்பவர் அவரே: கடவுள் வாழ்த்தப் பெறுவாராக.
|