3. இறைவனை நோக்கி, "உம் செயல்கள் எத்துணை மலைப்புக்குரியவை உமது மேலான வல்லமையின் பொருட்டு உம் எதிரிகள் உம்மிடம் இச்சகம் பேசிப் பணிகிறார்கள்.
|
4. மாநிலமனைத்தும் உம்மை வணங்கி உமக்குப் புகழ் பாடுவதாக: உமது பெயரின் புகழைப் பாடுவதாக" என்று சொல்லுங்கள்.
|
7. தம் வல்லமையால் அவர் என்றென்றும் ஆட்சி செலுத்துகின்றார்: அவர் கண்கள் மக்கள் இனத்தாரைக் கவனித்து வருகின்றன; கலக்காரர்கள் தலை தூக்காதிருக்கட்டும்.
|
10. இறைவா, நீர் எங்களைச் சோதித்துப் பார்த்தீர்: வெள்ளியைப் புடமிடுவது போல நீர் எங்களை நெருப்பால் பரிசோதித்தீர்.
|
12. அந்நியனுக்கு நாங்கள் பணியச்செய்தீர். நெருப்பிலும் நீரிலும் நாங்கள் நடந்து சென்றோம்: ஆனால், பரந்த நாட்டுக்கு எங்களைக் கொண்டு வந்தீர்.
|
15. கொழுத்த ஆடுகளையும், ஆட்டுக் கிடாய்களையும் தகனப் பலியாய்த் தருவேன்: காளை மாடுகளோடு செம்மறிக் கிடாக்களையும் பலியிடுவேன்.
|
16. கடவுளுக்கு அஞ்சுவோரே வாருங்கள், வந்து கேளுங்கள்: எனக்கு எத்துணை நன்மை அவர் செய்துள்ளார் எனக் கூறுவேன்.
|
20. என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் இரக்கத்தை என்னிடமிருந்து எடுத்து விடாத இறைவன் போற்றி!
|