1. சீயோனில், இறைவா, உமக்குப் பாடல் இசைப்பது தகுதியே: உமக்¢கு அங்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் தகுதியே.
|
2. மன்றாட்டுகளுக்குச் செவிசாய்ப்பவரே, பாவங்களினிமித்தம் மனிதன் ஒவ்வொருவனும் உம்மிடம் வந்தாக வேண்டும்.
|
4. நீர் தேர்ந்தெடுத்து ஏற்றுக் கொள்ளும் மனிதன் பேறு பெற்றவன்: உம் ஆலய முற்றங்களில் அவன் உறைந்திடுவான்.உமது இல்லத்தில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோமாக: உமது ஆலயத்தின் புனிதம் எமக்கு நிறைவளிப்பதாக.
|
5. எம் மீட்பாராகிய இறைவா, வியத்தகு அருங்குறிகளால் உமது நீதி நேர்மையைக் காட்டி எம் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறீர்; உலகின் கடையெல்லைகளில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் நீரே நம்பிக்கை: தொலைவிலுள்ள தீவுகளில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கை.
|
8. உலகின் கடையெல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் உம் அருங்குறிகளைக் கண்டு அஞ்சுவார்கள்: கீழ்த்திசை முதல் மேற்றிசை வரையில் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டுகிறீர்.
|
9. மண்ணுலகைத் தேடி வந்தீர், அதற்கு நிறைய மழையைக் கொடுத்தீர்: அதற்கு நிறை வளம் தந்தீர். கடவுளின் ஆறு கரை புரண்டோடியது; தானியங்கள் நிரம்ப விளையச் செய்தீர்: விளையச் செய்ததோ இவ்வாறு.
|
10. படைசால்களில் தண்ணீர் ஓடச் செய்தீர்; மண் கட்டிகளைப் பரம்படித்து மழையால் அதை மிருதுவாக்கினீர்: முளைத்து வரும் விதையை ஆசீர்வதித்தீர்.
|
12. பாலைவெளியின் மேய்ச்சல் நிலம் கொழுமை கொண்டு விளங்குகிறது. குன்றுகளைச் சூழ்ந்து அக்களிப்பு காணப்படுகிறது.
|
13. மேய்ச்சல்களில் ஆடு மாடுகள் நிரம்பியிருக்கின்றன; கணவாய்களில் தானியங்கள் மிகுந்துள்ளன: இவையெல்லாம் அக்களிப்புடன் பாடல்கள் இசைக்கின்றன.
|